It கலைமகன் கவிதைகள்: ஜனவரி 2010

புதன், 13 ஜனவரி, 2010

தேசியம்




நாசுக்கும் மூச்சுக்கும் ஒற்றுமைகாட்டி
நலினமாய் ஒருமையை மேலாக்கி
தாசுகளுக்கு முரிமை தான்வழங்கி
தரணியில் சோபை கொள்வதே தேசியம்!

ஒன்றை விரும்பி மற்றதை யிகழ்ந்து
ஒருவருமறியா முகமூடியொடு வாழும்
தான்தோன்றித்தன தேசியம் வீழட்டும்
தரணியில் நீதியோதும் தேசியம்வாழட்டும்!

விலங்கின மனதினை யுள்வாங்கி
விகற்பங்கள் செயும் தேசியம்வீழட்டும்
நிலையினில் தளரா நீதிமிகு தேசியம்
நிலத்தினி லுயர்ந்து மிளிரட்டும்!

நனிமிகு தேசியத்தை நேசிப்போம்நாம்
நிலத்தினில் பாகுபாட்டினை அழிப்போம்
பனியென மனங்களை ஒன்றிணைக்கும்
புனித தேசியம் பவனிவரட்டுமென்றும்!

கலைமகன் பைரூஸ்