It கலைமகன் கவிதைகள்: பிப்ரவரி 2010

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எதையும் தாங்குவோம்!



அழுதுகொண்டே அகலமீதில் கால்பதித்தோம்
அழுகையே ஆறாக நாளும் ஓடிவருது
பழுதிலாத வார்த்தை யேதேனு மில்லை
பாந்தள்கள் சூழ நாமக்கேதுவிடியல்!

அன்புடையா ரெல்லாம் அந்தோசென்றிட
அச்சமே உடலெங்கனும் பெருநதியாக
இன்பமேது என்று எண்ணிட - என்னுள்
இதமாய் வந்தது எதையும் தாங்கென்று!

எங்கனும் வலம்வந்திட்ட இடுக்கணைநான்
எட்டியுதைத்தேன் என்னுள்நீயேனென்று
பங்கமிலை யின்று பாதைவிரிந்தது
பாரே எனில் அன்போடின்று- அகமகிழ்வு!

நச்சரிப்பும் பாராமுகமும் கெஞ்சுதலும்
நாமடங்கி யொடுங்கி னாலன்றோ!
நிச்சயமாய் எமைத்தாங்கும் நிலம்போல
நாமு மெலாம்தாங்கி மேலெழுவோமே!

பச்சோந்திக ளெங்கனும் சுற்றிநின்று
பல்லிளித்து குளிர்காய நிற்பதுகாண்
நிச்சயமாய் அழி்ந்தொழிவர் -நாமெழுவோம்
நாம்தாங்குவோம் எதையும் -ஒளிவீசும்!

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - இலங்கை.


நன்றி : வார்ப்பு