It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2010

சனி, 23 அக்டோபர், 2010

பெரியோ ரெங்கே?

இருளடைந்த சமுதாயத்தை வெளிக் கொணர
எழுச்சிமிக வேண்டு மென்றோ - இன்று
இருப்பாரெலாம் பொத்திவைத் ததையே ஏற்றி
எரிதனலாய் மக்களுக் கீவா ரின்று
மருட்சியினால் மாந்தரெலாம் வாய் புதைத்து
மறையவன்விதி இதுவென்று ஏங்கி நிற்பர்
தருமந்தான் தலைகவிழ்ந் துள்ளதனா லிங்கு
தலைத்தோங்க முடியவிலை நீதி யெங்கே?

---------

செவ்வாய், 19 அக்டோபர், 2010

குர்ஆன் எரிப்பவனே!


தாய்மொழி செந்தமிழி லெழுதும் கவியிது
தரங்கெட்ட உனைச் சேராதோ – சேரும்
மெய்யெரி வதினால் மனம்வாடுதலால்
மொழிந்தே னுனை இழித்து!

காசினிலே மூழ்கி கயமைக்கு வழிகோலி
காசினியி லுயர்ந்து தானிற்க ,வெங்கொடுமை
கண்டுவிட்டான் வஞ்சக நெஞ்சத்தான் , நரகம்
கெட்டவன் போகு மிடம்

புதன், 13 அக்டோபர், 2010

நம்பிக்கை வை!


வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்!
திமிர்பிடித்த
ஏறுகள் உன் மேலேறி
உனை மிதிக்க வரும்...

எடுப்பார் கைப்பிள்ளையாய் கொண்டு
மேலே தூக்கி கீழே போடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்...
உன் திறமைகளை
எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கை வை!

வெள்ளி, 8 அக்டோபர், 2010

கண்ணிலாத ஏகாதிபத்தியமே!



எல்லாமும் தமதாக்க எண்ணும்தீய
ஏகாதிபத்திய ராஜ்யமே யுந்தன்
பொல்லாத கழுகுச் சிந்தனையாலே
பலஸ்தீன்மண் மரணப்பிடியிலின்று!

சியோனிசத்தொடு வாகாய்நீயிணைந்து
சாந்தமாய் வாழ்ந்திட்ட புனிதமண்மீது
தீயோராம் இஸ்ரவேலுக் கிடமுண்டாக்கி
தாயமக்களுக் கநியாயம் செய்தனையே!