It கலைமகன் கவிதைகள்: ஜூலை 2011

புதன், 6 ஜூலை, 2011

நினைத்திடு நெஞ்சே நீ!

மதிதனம் விரும்பி மானுட னென்றும்
விதியிதுவென் றுழல்கின்றான் - பின்னே
மதிதனம் விரும்பி காசுகள்ளெனக் கண்டு
மதிமயங்கி வீழ்கின்றான்!

கதியிதுவேன பின்னே கதிகலங்கி நிற்கின்றான்
காலத்தை வீணே வைகின்றான் - இவன்
மதியின்மை நோக்கா னென்ஷம் - தீதுநின்று
மரண பயமின்றி வாழ்கின்றான்!

பதியினைப் போற்றாப் பெண்டிருட னிணைந்து
பொழுதை வீணே கழிக்கின்றான் - தும்பி
சுதிகோண்டு கள்விரும்பி வருவதுபோ லென்றும்
சுற்றியே தினம் அழைகின்றான்.

கருடன்வாய்கொண்ட சென்னிவிரி நாகமென
காதலனிவன் இருக்கின்றான் - பின்னே
பேரே யழிந்துவிடும் பெருமூச்சு விடுகின்றான்
பேதமை யென்னென்பேன் இவன்!

கொண்டவனை கொன்றுவிடும் விடநாக முண்டு
கொண்டவனை நாவாலே கொளும் விடமுண்டு
தீதொன்றறியா சீதேவிகளுமுளர் பாரில்
திருந்திவிடி னெல்லோரும் நலமே!

சீருடன் தரைமீது மேலெழலாம் - திருவிருக்க
சீதேவிதனம் கோளின் மேலுயரும் பேரு!
கருவினிலே தீக்கருவறுத்து - நற்
காரியங்கள் செய்திட நினைத்திடு நெஞ்சே நீ!

-கலைமகன் பைரூஸ்
இலங்கை.

நன்றி : ......................................