It கலைமகன் கவிதைகள்: 2013

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2014 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆண்டொன்று அழிய அகத்தினின் மகிழ்ந்து
ஆகா வந்திட்டது அருமந்த ஆண்டென்று
பூண்டோடு பழையன மறந்து நாம்
பூதலத்து பவனி வருகிறோம் சரியோ?

வியாழன், 26 டிசம்பர், 2013

சாதித்துவத்துக்கு சாவுமணியடிக்க சனனித்ததுவோ சுனாமி!

அழகான கடல்மீது
அழகான கையெழுத்தில்
அழகாக எழுதியெழுதி
அழகுபார்த்திருந்தோம் நாம்!

சனி, 14 டிசம்பர், 2013

உங்களுக்குத்தான் சொர்க்கமா?

நீங்கள் பௌத்தர்கள்
தூபிகளில் அநுட்டானங்கள்
தொடர்ந்தும் செய்கிறீர்கள்…
நீங்கள் இந்துக்கள்
உங்கள் இன்பத்திற்காக
பலவும் பண்பாய் ஆற்றுகிறீர்கள்…
நீங்கள் முஸ்லிம்கள்

நீங்கள் சொர்க்கம் பெற
ஐவேளைத் தொழுகிறீர்கள்…

வியாழன், 28 நவம்பர், 2013

ஏன் மறந்தாய் தமிழை... சோகமே! -

பொதிகைமலை பிறந்திட்ட நற்றிமிழிது
பொய்ம்மைகள் பலகாட்டி பரிதவிக்க
ஆதித்தமிழ் மொழியை கங்கனம்கட்டி
ஆயுபோவ னாய்க் காட்டலாமோ?

நல்வணக்கம் நற்றமிழி லிருக்க

நாதியற்றதாய் ஆக்க முனைந்தீரோ...?
அல்லும்பகலும்  ஊன்றியே நிற்கும்
ஆவிபோலன்னதே நற்றமிழ் காண்பீர்!

புதன், 6 நவம்பர், 2013

காப்பியக்கோவின் அழைப்பினால் களிகொண்டேன் இளவல் யான்!

நேற்று இஸ்லாமிய புத்தாண்டின் முதல் நாள். (2013 11 05) இரவு 9: 55.

நான் பணிபுரியும் இணையத்தளத்திற்கு செய்திகள் பதிவேற்றிக் கொண்டு, முகநூலில் அவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.....

வெள்ளி, 1 நவம்பர், 2013

எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!

என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01  படைத்திருந்தார்.

என் ஆக்கங்கள் பத்திரப்படுத்தப்படும் ஏட்டில், அதைக் காணுங்காலையெலாம் எனையறியாமலேயே வருகிறது எனக்குள் சிரிப்பொலி....!

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கரங்கொடுப்பார் ஆருளரோ?

உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்

சீதனம் பற்றி உள்மனதில்
சீர்தூக்கி சோர்ந்துபோகும் – நானா
செத்த பொணம் மாப்பிளைங்க
சத்தியமாய் வேணாமுங்க – அழமாட்டேன்!

மறைநபியின் வாக்கையெல்லாம்
மண்ணில் உதறிவிடும் மனுசனுங்க
நறைவிழுந்து கூன் வந்திடினும் – வேணாமுங்க
நானா கவலைவிடுங்க – அழமாட்டேன்...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

தனயன் தன்னை தயாளனுக்காய் – நபி
தந்திட முனைந்த நந்நாள் இந்நாள்
பண்ணுவோம் அவர்வழி நல்லன நாம்
பாரினில் களைவோம் தீய சிந்தைதான்!

இறையின் கடமை வந்தது நம்மவர்
இறையில்லம்  ஏகினர் புனிதம் பெற்றிட
மறையிறையின் முன் மண்டியிட்டு பாவம்
மறைந்தழித்து வருவோரையும் ஏத்துவோம்..!

ஹஜ்ஜினின் அறுத்திடுவோம் நாமும் உள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

என்பாகத்தை எனக்கு வைத்துவிடு! (மொழிபெயர்ப்புக் கவிதை)

கள்ளமாய் ரகசியமாய் அருகேவந்து சொன்ன
கதையை மீண்டும் கட்டுங்கள்...
பாழடைந்த நாளொன்று நாங்கள் தனியாக நின்ற
இடத்திற்குப் போய் உட்காருங்கள்...
யார்? எதற்கு? ஏன்? இங்கே இன்று...?
எனக் கேட்டால் பொய் சொல்லுங்கள்...
எக்காரணம்  கொண்டும் போகாமல் நான்
வரும்வரை காத்திருங்கள்...

செவ்வாய், 8 அக்டோபர், 2013

தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'நிழலும் நிதர்சனமும்'பற்றிய நயவுரை

சென்ற ஞாயிற்றுக்கிழமை (06/10/2013) தினகரன் வாரமஞ்சரியில், இலங்கையின் பிரபல ஆங்கில - தமிழ் திறனாய்வாளரும், பத்தியெழுத்தாளருமான உயர்திரு. கே.எஸ். சிவகுமாரன் ஐயா அவர்கள் எனது 'நிழலும் நிதர்சனமும்' கவிதைத் தொகுப்பைப் படித்து நயவுரை எழுதியிருந்தார்.

எனை விஞ்சிப் போற்றி, என் தமிழில் நான்

திங்கள், 7 அக்டோபர், 2013

THE LIFE OF THE PROPHET MUHAMMED! Khulafa-Ur-Rashideen (Poems)

நான் பணிபுரியும் வெலிகம ஸலாஹியா சர்வதேசப் பாடசாலையின் கணக்காளர் திரு. முஹம்மது முஜீப் ஆங்கிலத்தில் (இஸ்லாம் சார்ந்த) இரண்டு கவிதைகளை எழுதியிருந்தார்.

நல்ல ஆற்றொழுக்குடன் கூடிய அந்த இரண்டு கவிதைகளையும் நான் என் தளத்தில் பதிவேற்றி அவருக்கு கொலுகொம்பாக நிற்க விரும்பி, அவற்றை கேட்டேன்.

சனி, 5 அக்டோபர், 2013

பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!


தன்பதிக்கென வாழ்ந்த பதியிவள்
தன்னாசைகள் எலாம் துறந்தவள்
இன்முகத்தொடு பதியை பார்த்தவள்
இல்லானிற்காய் வாழ்வினை நீத்தவள்!

தன்னிலை துறந்த போதும்பதி
தன்னிலை துறவாத பதியிவள்
என்னிலிவன் என்றே இவள்
எண்ணிலாதன செய்தாள் நிதம்!

விதியின் மாறுதலான் சிக்குண்டு
வடிவென வந்த மங்கைபாலவன்
அதிகாதல் பூண்டு நிலையழிந்த
அதிகாரம் தெரிந்தும் மௌனித்தவள்!

சனி, 28 செப்டம்பர், 2013

என்னை அழவிடு நீ!

வேண்டாம் இதயத்தைக் கனக்கச் செய்ய
நீ உன் பாட்டில் இரு!
தனிமையில் துன்பந்தாங்க
என்னால் இயலும்....

விழிகளில் கண்ணீர் வழிந்தோட
என்னை அழ விடு...
அந்தக் கண்ணீரை துடைக்க
வேண்டவே வேண்டாம்
உன்பாட்டில் நீ இரு...

தீ மூட்டிய இதயத்தை
நிம்மதியாக்க
என்னை நானே வறுத்திக் கொள்ள
ஏதேனும் எனக்குச் சொல்....

கண்ணீர் முத்துக்களை ஒன்றிணைக்க

திங்கள், 23 செப்டம்பர், 2013

உனை நினைத்து இக்கணமும் இயற்றுகிறேன் பா!



வாழ்வில் பாரிய மாற்றங்கள் நிகழலாம்...
வசந்தம் கூட வழிநெடிகிலும் வரலாம்.....
என்றாலும்,
அடிமனதில் ஆழவேரூன்றி
அடையமுடியாமல் இருந்த அன்புக்காய்
அழுது கொண்டிருக்கும் உள்ளம்....

எப்படிச் சொல்ல என்று
உள்ளம் 
எடுப்பார் கைப்பிள்ளை போலும்
வேடிக்கை பார்த்ததால்...

புதன், 18 செப்டம்பர், 2013

டிசம்பரில் வரவுள்ளது 'கவிதா'...... ஆக்கங்களை உடன் அனுப்புங்கள்...!



வாசகர் கவனத்திற்கு...
--------------------------------
'கவிதா'வின் வரவை நிச்சயிப்பதற்காக சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.. ஆகக் குறைந்த கட்டணம் இலங்கை: ரூபா 1000/- தனிப்பிரதி இலங்கை: ரூபா : 100 (தபால் செலவுட்பட)
காசுக் கட்டளை அனுப்புவோர், பெறுபவர்: M I M FAIROOZ, பெறும் தபாலகம்: WELIGAMA POST OFFICE எனவும் குறிக்கவும்.

காசுக்கட்டளை மற்றும் பணவரைபுகள் கிடைக்கப்பெறும் வேளை, அவை பற்றி முகநூல் வாயிலாக அறிவிக்கப்படும்....

அனைத்துத் தொடர்புகளுக்கும் இலங்கை நேரம் மதியம் 4 மணியின்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?
--------------------------------------------------
-கவித்தீபம் கலைமகன் பைரூஸ்
நாங்கள் முஸ்லிம் ஒன்றே நாங்கள்
நலமாய் ஒற்றுமை கயிற்றினை பற்றுமின்
தீங்குகள் பலவாய் வந்திட்ட போதும்
தீயன நினைக்கா திருங்கள் என்றனர்....

திங்கள், 2 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ்.எச். மௌலானாவின் கருத்துரை

சமுதாய உறுத்தல்களால் உருவானதே ‘கலைமகன் கவிதைகள்’
- முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் 

கலைமகன் பைரூஸின் படிக்குந்தோறும் இனிமை பயத்திடும், சலசலவென்ற ஓசைநயம் மிக்க ‘கலைமகன் கவிதைகள்’ கவிதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவதில் முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் என்ற வகையில் பேருவகை அடைகின்றேன்.

இதயம் கனக்கின்ற பொழுதுதான் கவிதைகள் வருகின்றன.

‘எப்போதும் வருவதில்லை கவிதை

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் கலைவாதி கலீலின் அணிந்துரை

கவியிலக்கணங்களுடன் கூடிய கலைமகன் கவிதைகள்
முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல்

கவிதை என்பது வட்டமிட்டுச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போன்றது. வண்ணத்துப் பூச்சியின் சுயாதீனப் போக்கும் அதன் வேகமும் விறுவிறுப்பும் வித்தியாசமான அசைவுகளும் அழகும் மெலிதான நறுமணமும் நமது மனம் கொள்ளத்தக்கன.

கவிதையின் வடிவம் பற்றிய என் கணிப்பீடு இதுதான். கவிதையின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகள் உள. அவை அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை என்பனவாம். இவை

சனி, 31 ஆகஸ்ட், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வானின் அணிந்துரை

கவினுறு கவிதைகளும் கலைமகனும்
பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வான்

கலைமகன் பைரூஸின் கவினுறு கவிதைத் தொகுப்புக்குக் கருத்துரை வழங்குவதில் பெருமையடைகின்றேன். கவித்துறையில் அன்னாருக்கு உள்ள முதிர்ச்சியை, உயர்ச்சியை இக்கவித்தொகுப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. கவி இலக்கணத்தைக் கரிசனையோடு காத்து அவர் படைத்துள்ள கவிதைகள் அனைத்தும் அற்புதமான சொற்புதையல்கள்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

பொய்ம்முகந் தரித்து பூதலத்து இன்னார்
பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
செய்வரே தீங்கு ஒண்ணாதார் இன்னாரே!

திங்கள், 29 ஜூலை, 2013

என் கவிதைகள் குறித்து றியாஸ் குரானாவின் கருத்துரை

அன்பின் பைறுாஸ் நலமா? உங்கள் கவிதைகளைப் படித்தேன். எது நல்ல கவிதை என்பதை கண்டுபிடிப்பதிலும், அதைக்குறித்து பேசுவதிலும் இன்று பல விவாதங்கள் இருக்கின்றன. 

அப்படியான ஒரு சிக்கலுக்கள் நுழைவதற்கு உங்கள் கவிதைகள் காரணமாக இருக்காது.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மழை - 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்


மழை
=====
சிங்களத்தில்: மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
=====================================
சுழல்காற்று செடிகொடிகள் வீசி
மின்னல் ஒளி பாய்ச்சி
பாரியதொரு மழைமேகம்
சற்றும் எதிர்பாராமலேயே
மழைநீரைச் சிந்தியது!

காலத்திற்குக் காலம்
தலைமுறைக்குத் தலைமுறையாக
உலகம் தோன்றிய நாள்தொட்டு
இதுவரை இலட்சக்கணக்கான
காதலர்கள் வீழ்த்திய
சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளால்
மழைத்துளி உருவெடுத்ததாய்
எனக்குள் தோன்றியது!

2013/06/22

வெள்ளி, 21 ஜூன், 2013

மண்ணறையில் மலர்ந்த மலர் - 'கவித்தீபம்' பைரூஸ்


நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில்  புதைத்தேன்.

திங்கள், 17 ஜூன், 2013

அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா?



தன் எண்ணத்து ஆசைகளை
தாரத்தில் ஆனந்தம் துள்ளியெழ
தனக்கே யுரித்தான நிலத்தினிலே
விதைத்து ஆகின்றான் தாதை!

வலியென்றும் பாராது நீள்நிலத்தில்
வந்திட்ட சிறுமுளைகள் செழித்திடவே
உழைத் துழைத்து வியர்நீர்சிந்தி
ஊதியமில்லாமல் செய்கின்றான் பணி!

திங்கள், 10 ஜூன், 2013

'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!

தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் நடாத்திய 'திறந்த (2013 மே மாதக்) கவிதைப் போட்டியில், எனது கவிதை (காசேதான் பேறாமோ?) சிறப்புக் கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)

கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,

திங்கள், 27 மே, 2013

வாழ்த்துரைத்தல் ஆகாதோ? பகர்வீர்

பணமுண்டு சிலரிடம் குணமுண்டு

பண்பிலை சிலரிடம் பக்குவமுண்டு


மணக்கும் மாண்பதைக்காய் அவர்


மரகதமாய்ப் பாடுவது குறையாமோ?


##########################


நல்லாரைப் போற்றுதல் குறையாமோ?

நவின்றிடும் சொல்லை பழித்தலாமோ?


வில்லெடுத்து தைப்பது போலும் பிறர்


வாழ்த்தீதும் தூற்றுதல் மடைமையே!


##########################


வார்த்தை மட்டுமாகா தென்றுநிதம்


வழிவர செய்தாரையும் தூற்றுதுநிலம்


ஒருவார்த்தையாலே பாரில் வீழச்செய


'ஒருவ'ரினால் ஆமோ மடைமையே!


##########################


புதன், 22 மே, 2013

நவீன அந்தப்புரத்து ராணி! (நெடுங்கவிதை)


நவீன அந்தப்புரத்து ராணி!00000000000000000000000000000

அந்தப்புரத்தில் அன்னம்:---------------------------------

கோதண்ட மேந்துகின்ற காளையர்கள்
குவலய மெங்கும் உனைக்காணவே
வாதங்கள் பலபுரிந்து உனைப்பெறவே
வடிக்கின்றார் குருதி - அம்மைகாண்!

நீமுந்தி நான்முந்தி என்கின்றார்
நினக்காக எல்லாமுந் துறக்கின்றார்
பாமுந்துவாரும் பாடி வருகின்றார்
பாசம் யாருக்கோ பாவைசொல்லாய்!

புதன், 1 மே, 2013

හැදුනුම්පත - මහ්මූද් දර්විෂ්

මෙය ලියගනු
මම අරාබි කාරයෙක්
මාගේ හැදුනුම්පත් අංකය 50,000
මාහට ළමයි අටදෙනක්...
ලබන උෂ්ණයේ
ලැබෙයි මට අනිත් උප්පත්තිය
ඔබ තරහද?

ලියාගනු මෙය
මම අරාබි කාරයෙක්
කම්කරු සමග
ගල් කඩන්නෙමි මා... ගල් පර මිරිකන්නෙමි මා...
මාගේ දරුවන් අටදෙනෙක්ම
රොට්ටි කෑල්ලක් ගන්නට...
නමුත්,
දයාව ඉල්ලා හිගා කන්නේ නෑ...
ඔබගේ බලය තුළ
දණ හිස ගසා මා ඉන්නේ නෑ...
ඔබ තරහද?

ලියාගනු මෙය
මා අරාබි කාරයෙක්
මාහට ගවුරවණිය නම් නැත..
වල් පොළව තුළ මා ස්ථීරවන්තයා
යුගයෙන් පසු
කාලයෙන් පසු
මාගේ මුල ගැඹුරට යයි...

ගැමි පියාගේ අපොහසත් පුතා මම...
පිදුරු නිවසේ ජීවත්‍ වෙමි
මාගේ හිස කෙස් කළුපාටයි
මාගේ ඇස් වැලි පාටයි
මාගේ අරාබි හිස් ආවරණය
ආක්රමණය කරන්නාගේ
අත් සූරනු ඇත...

සියල්ලටම වඩා
කරුණාකර මෙය ලියනු...
මා කිසිවෙකුට අප්රිාය කරන්නේ නැත..
කිසිවෙකුගෙන් මංකොල්ල කෑවේ නැත...
නමුත්,
මා බඩගින්නෙන් සිටින වේලේ
මාව මංකොල්ලා කාපු එකාගේ
මස් කමි මා....

සැලකිල්ලට ගනු....!
මාගේ බඩගින්නට
බියවී
අවධානයෙන් සිටිනු!
මාගේ කෝපයට බියවී
අවධානයෙන් සිටිනු!!

සිංහල පරිවර්ථනය - ඉස්මායිල් එම්. පයිරූස් (කලෛමහන්)




ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஏ சதிகார அமெரிக்கனே...! - கலைமகன் பைரூஸ்


எங்கள் உயிர்கள் பறிக்கப்படுகையில்
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகையில்
எங்கள் சிறுசுகளின் சிரசுகள் நசுங்குகையில்
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...



வியாழன், 18 ஏப்ரல், 2013

நாளைய உலகின் தலைவர்கள் எவரோ? - கலேவல ஹபீலா ஜெலீல்

காலம் இணைத்த 
வரலாற்றுக் கோடுகளில் 
இன்னும்
இணைக்கப்படாமல் இருப்பது
எதிர்காலம்

அடுத்த தலைமுறையின்
கைகளில்
காலத்தின் தூரிகை
கிடைக்கப்பெற்றால்

ஒரு வேளை சிரிக்கும்
ஒரு வேளை மிதிக்கும்
மீறிப்போனால் நச்சரிக்கும்

புதன், 17 ஏப்ரல், 2013

கண்ணீர் துடைப்பார் ஆருளரோ?


உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

ஒன்றே மாந்தர் என்றிட எழுந்தனன்! - கலைமகன் பைரூஸ்


கதிரவ னெழுந்தான் கண்கள் கசக்கி
காரிரு ளவளை மெல்ல விலக்கி
பதியினி லெவரும் பாங்காய் நின்றிட
பாரினி லெங்கும் கதிர்கள் பரப்பி...

 கள்ளுண்டு திரண்டிட தும்பிக ளெழுந்து
கனிச்சுவை தந்திடு தருக்களி லமர்ந்து
புள்ளுண்டு பறந்திட பிணைதனை கூறிட
பரிதி யெழுந்தனன் சுடர்தனை வீசி....

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ்



அன்பின்எழில் அழகின்எழில் அமுதின்எழில்
அகத்தினின் எழில் அரிவையின் எழில்
இன்னமுதின் எழில் இல்லறத்தின் எழில்
இங்குள இரவல் எழிலை விட விஞ்சிட்டெழில்...

படைப்பின்எழில் படைத்தவன்எழில் பாரினிலெழில்
பாவையர் பாலுளஎழில் பாவையரெனுமெழில்
விடமிலாதெழில் வாடாவெழில் வீறுடையெழில்
விண்ணின் மிளிர்ந்தெழில்தரும் நிலாப்பெண்ணே!

திங்கள், 15 ஏப்ரல், 2013

எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்



தன் பிரபல்யத்துக்காய்
மனிதம் விற்கப்படுகிறது....
தன் மகிழ்ச்சிக்காய்
பிறர் அழுகுரல்
வீணையென இரசிக்கப்படுகிறது...

பிணந்தின்னிக் கழுகளும்
ஊளையிடும் நரிகளும்
நிறைந்த சாக்காட்டில்
புதுமையைக் காண்பதற்காய்
‘செல்’கையில்


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்திரையொன்று பிறந்திருக்கு...! -கலைமகன் பைரூஸ்



சித்திரையொன்று பிறந்திருக்கு
இத்தரையெங்கும் மலர்ந்திருக்கு
முத்திரையெனவே மகிழ்ந்திங்கு
மங்கலம் பொங்கிட நாமிணைவோம்! //

சித்திரை.....


சனி, 13 ஏப்ரல், 2013

எல்லாம் நிலையிலாதனவே! - கலைமகன் பைரூஸ்

நிலையிலா வாழ்வு பற்றிக் கற்றிட
நிலையிலா வையம் பற்றிக் கண்டிட
இலைநீரே அழகாய் வந்தனைநீ - போழ்தில்
இறங்கிவிடுவாய் என்பதறி சீராய் நீ!


ஞாயிறு, 24 மார்ச், 2013

அடி நிர்வாணம் காட்டலாமோ?

துச்சாதனர்கள் இன்று உப்பரிகையில் நின்று
துச்சமாய் பெண்டிரின் நிர்வாணம் கண்டிட
உச்சாணி நிற்கின்றார் அதுகண்டு -பெண்ணே
உன் நிர்வாணம் காட்டிட நீமுனைவது தகுமோ?

தாய்க்கும் தன்னொடு பிறந்த தமியளுக்கும்

வியாழன், 7 மார்ச், 2013

ஊளைகளுக்கு அஞ்சாதே!

-கலைமகன் பைரூஸ்

பலநூற்றாண்டு வரலாறு உனதாகும் மகனே
பார்த்திருக்க மாட்டாது ஊளையிடுது இங்கே
நிலந்தேயு மட்டும் கூக்குரலிட்டாலும் மகனே
நில்லாதே நீண்ட பயணம் நீதொடரு நேரே!


வாசங்கள் பலசொல்லி பூண்டோடு அழிக்க

திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஈழத்து மகாராணியாய் நீவருவாயே!

எல்லோரும் எள்ளும் இயலாமை யுன்னில்
ஏற்றமாய் வந்திடவே சென்றாய்நீ பாலை
எல்லோரு மின்று உனையே பேசிட
எமிலின்றி நெடுந்தூரம் சென்றா யன்றோ!
 
வாய்க்கு வெற்றிலை கெட்டாரு மின்று
வடிவாய்க் கதைக்கிறார் உன் கதையின்று

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

களம் தந்த தென்றல் எப்எம் வாழ்க!

நேற்று எனை  தொலைபேசியில்  தொடர்பு கொண்டு, வியாழன் கவிப் பெட்டகத்தில் எனை  நேர்கண்ட கவிஞரும், எழுத்தாளரும், ஒலி- ஒளிபரப்பாளருமாகிய விசு கருணாநிதி அவர்களுக்கும், புத்தகம் வெளிக்கொணர்ந்த கவிஞர்களை மாத்திரம்  நேர்காணாமல் புத்தகம்

எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?



எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?
-கலைமகன் பைரூஸ்

இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

கவினுறு கலைகள் வளர்ப்போம்!






கவினுறு கலைகள் வளர்ப்போம் – நாம்
கருத்தினிற் கினிய படைப்போம்
வியனுறு பணிகள் செய்வோம் – நாம்
வறுமை அழிந்திடச் செய்வோம்!