It கலைமகன் கவிதைகள்: ஆகஸ்ட் 2013

சனி, 31 ஆகஸ்ட், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வானின் அணிந்துரை

கவினுறு கவிதைகளும் கலைமகனும்
பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வான்

கலைமகன் பைரூஸின் கவினுறு கவிதைத் தொகுப்புக்குக் கருத்துரை வழங்குவதில் பெருமையடைகின்றேன். கவித்துறையில் அன்னாருக்கு உள்ள முதிர்ச்சியை, உயர்ச்சியை இக்கவித்தொகுப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. கவி இலக்கணத்தைக் கரிசனையோடு காத்து அவர் படைத்துள்ள கவிதைகள் அனைத்தும் அற்புதமான சொற்புதையல்கள்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

பொய்ம்முகந் தரித்து பூதலத்து இன்னார்
பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
செய்வரே தீங்கு ஒண்ணாதார் இன்னாரே!