It கலைமகன் கவிதைகள்: 2014

புதன், 24 டிசம்பர், 2014

ஐயா பேராசிரியர் துரை. மனோகரனை வழுத்தினன் யான்!

சென்ற மாதம் (2014 நவம்பர்) 26 ஆம் நாள்...

நான் எனது மேனிலைக் கல்விக்கான கருத்தரங்கிற்காக பேராதனைப் பல்கலைக்கழக  தொலைத் தொடர் கல்வி நிலையத்திற்குச் சென்றிருந்தேன்...

அன்று தமிழ்ப்பாடம்...

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஒரு துளி விந்தும் பெருமையும்! - கலைமகன் பைரூஸ்


இன்று
பகட்டாய் பேசுகிறோம்..
பகட்டுக்காய் அணிகிறோம்...
பிறரைப் பார்த்து
தப்பாய் நினைக்கிறோம்...
நாமே பெரியவர் என்று..

வியாழன், 23 அக்டோபர், 2014

மீனவர் நாமல்லோ..துயரமும் எமதல்லோ!

ஏலோ ஏலோ ஏலேலோ
எங்கள் துயரம் போகவல்லோ
காலம்புர வாரதற்கு – நாம்
கடல் கடந்து செல்கின்றோமே!

கட்டுவல ஏந்திக் கிட்டு ஏலேலோ
கட்ட சுறா கெலவல்லன் பிடிப்பதற்கு
இட்டம் இலாமலும் ஏலேலோ
இதயம் கனக்க போகின்றோமே!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

குமுறல் போதும் உதவிடு!


சீன சென்றேனும் கற்றிடுக என்றநபி
சொல் வார்த்தை அமுதென்றே குமுரி
போனா ரெங்கள் பெரிய மனுஷன்தான்
பேனா வின்றி வாடிய குழந்தைபாவம்!

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அசின் விராது கொஞ்சம் பொறு!

அசின் ஏய் நீவந்தாய்?
போதிமாதவன் வளர்த்த
போதி தர்மத்தை
தரைமட்டமாக்க
போதிமர நிழலில்நீ நின்று
கிளைகளை வெட்டிச் சாய்க்க
அகிம்சை வழியில்
அனைவரையும் அரவணைக்கும்
அனைவரினதும்
ஈரல்குலைகளை சுவைத்திட
கூட்டுச் சேர்ந்திட வந்தாயா அசின்?

புதன், 16 ஜூலை, 2014

ஷம்ஸ் ஆசானின்... மனங்கொள் சேவை விண்தொடுமே!


விண்ணுக் கழகுதரும் வடிவாம் சந்திரனாய்
மண்ணினி லெங்கும் கலையொளி தான்வீசி
பண்ணொடு இருதமிழ்க்கும் பணிதான் செய்து
கண்ணினி லின்றும் கறையாது நம்மாசானே!

திங்கள், 7 ஜூலை, 2014

புதன், 7 மே, 2014

தமிழுக்கு அணிசேர்க்கும் தரமான கவிஞனிவன் ...-எஸ். சித்தீக்



இன்று (05-05-2014) என்னைச் சந்திக்கவந்த சிலாவத்துறை ஆசிரியர் எஸ். சித்தீக் (முத்துச் சிலாவத்துறை புதுமை மைந்தன்) எனக்கு அன்பாக அளித்த கவிதை இது...

கவிதை கண்டு

திங்கள், 28 ஏப்ரல், 2014

IS PARADISE ONLY FOR YOU?






You   are   Buddhists
You   perform  continuously
The   rituals  in  temples
You  are  Hindus
For   your   pleasure
You  carry  out     so  many
Decorously.

You  are  Muslims
You   perform “ Salath”-
Prayers  five   times  a  day.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

எளியாரை வலியார் உதைப்பது தகுமோ?




எளியாரைக் காணுங்கால்
எடுப்பாய் நிற்பான்!
எடுப்பாம் சக்தியை
ஏற்றியே காட்டுவான்!
வலியவன் நானென்பான்!

இது கவிதை!

உறங்கும் உள்ளுணர்வினை
உசுப்பி, உயிர்ப்பித்து
உரம் பெற வைத்தல் கவிதை!

ஊசிமுனை உடல்
நாசித்துளை அனல்
வீசியெழும் மொழிகவிதை!

புதன், 23 ஏப்ரல், 2014

வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் ஆங்கிலத்தில்!





அன்புறவுகளே!

எனது தமிழ்க் கவிதைகள் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், மும்மொழிப் பாண்டித்தியமும் மிக்கவருமான கலாபூஷணம் எம்.வை மீஆத் அவர்களினால் வெகுவிரைவில் மொழிபெயர்க்கப்பட்டு இத்தளத்தில் பதியப்படும் என்பதை மகிழ்வோடு அறியத் தருகின்றேன்.

எனது ஆக்கங்களை மொழிபெயர்த்தருவதாகக் குறிப்பிட்ட கல்வியியலாளர் எம்.வை மீஆத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

சனி, 19 ஏப்ரல், 2014

எனது கவிதைகளில் ஷிர்க்கான விடயங்கள் உள்ள கவிதைகளை இனங்காட்டுங்கள்...!

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து (19.04.2014) இஸ்லாத்திற்கு ஆதரவான கவிதைகளையும், சமூகக் கவிதைகளையும் மட்டுமே எழுதுவேன் என உறுதியளிக்கின்றேன்.
காரணம் இன்று நான் “கவிதை விடயத்தில் கேட்ட அறிவுறுத்தல்”

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நவீன ஜடாயுவும் விபீடணனும்!



அதிகாரவர்க்கத்தின் முதுகந்தண்டில்
அமர்ந்து மிக அழகாக
அடாவடித்தனம் செய்கின்றன
இன்றைய ஜடாயுக்கள்!

பைத்தியம் எவரையா ஞானவானே!


செய்தவறு நீக்கமறச் செயவியலாது
செய்யாக் குற்றம்  பெரிதெனக்கண்டு
ஏய்கின்றார் அம்பு எடுப்பாகத்தான்
ஏற்றமிலை அவ்வம்பில் காண்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உன்னில் எனையிழந்தேன் வெண்ணிலவே!


வானக் கடலிடை வட்டமா யொரு
வண்ண முகங்காட்டி நின்றே நீ
என் மனதிடை புகுந்தனை நிலவே
என்னுள்ளக் காதலி நீயலவோ மதியே!

வெள்ளி, 28 மார்ச், 2014

கைம்மாறு இதுவோ என்பாரோ?

வரும்வரை வருவார்
வந்தபின் யார்என்பார்
நிலத்தில் கால்பதித்தபின்
நம்மவரை
விடம்கொண்ட நாகத்து
நிலையிலிருந்து
நோக்குவார்.. அப்போ
நோக்கங்கெட்டவர்
நாமே ஆவோம்....

வெள்ளி, 21 மார்ச், 2014

பிணந்தின்னும் கழுகுகள்...

பச்சையும்
நீலமும் 
சிவப்பும்
பச்சோந்தியாய்...

பிணந்தின்னும்
கழுகுகளும்
ஊளைகளுக்குப் பயந்து
நாட்டை விட்டே
புலம் பெயர்கின்றன...

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஞாயிறு மறையாது! (பாடல்)


ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது…

குழந்தை எனக்குள் ஞாயிறு
தாயு மெனக்குள் ஞாயிறு
குழந்தை மொழியாள் ஞாயிறு
குவலய மெங்ஙனும் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

தீந்தமிழ் எனக்குள் ஞாயிறு
தித்திக்கும் முத்தமிழ் ஞாயிறு
சுந்தர மனத்தாள் ஞாயிறு
கவிதை பொருள்கள் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

நல்லன நினைத்திட ஞாயிறு
நலமாம் பணியிடை ஞாயிறு
இல்லாள் நல்லாள் ஞாயிறு
இனிது வளர்ந்திடு ஞாயிறு..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

09-03-214

(தயவுசெய்து முடியுமானவர்கள் இதனைப் பாடலாக பாடியனுப்பவும். ismailmfairooz@gmail.com)

தீர்ந்தது என் (காதல்) வலி இன்றே…!


அத்தான் என்னத்தான் என்பதில் மயங்கி
அருகிணைந்தேன் எனை யிழந்தே னன்று
முத்தங்கள் சரமாரியாய் பெற்றே னன்று
முத்தங்கள் செல்களென அறிந்தேன் பின்!

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

பிறந்தநாளின்று எனை வழுத்திய கவிதைகள்!



(1) ராஜகவி ராஹில்
--------------------
கலைமகனே 
கவிமகனே 
காலத்தால் அழியாத புனை தமிழ் மகனே !

தமிழ் மகளை 
கவித்திரு மகளை 
புகழ் மகளை 
புவினறு மகளை 
சுவையுறு மகளை 
அவை ஒளி மகளை 
சிகரம் கொண்டு செல்லும் புலமை மகனே !

பாவாக்கினாய்
பூவாக்கினாய்
தேனாக்கினாய்
தீயாக்கினாய்
தேளாக்கினாய்
தமிழ்தனை ஊராக்கி
புகழ் தனைப் பேராக்கி
நீயானாய் பாவண்ணனே !
கவிப் புலியானாய் பா மன்னனே !

வாழ்க
உன்தமிழ் !

வாழ்க
உன் ஆயுள் !

வாழ்க
உன் செல்வம் !

வாழ்க
உன் நலம் !

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !