It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2014

திங்கள், 28 ஏப்ரல், 2014

IS PARADISE ONLY FOR YOU?






You   are   Buddhists
You   perform  continuously
The   rituals  in  temples
You  are  Hindus
For   your   pleasure
You  carry  out     so  many
Decorously.

You  are  Muslims
You   perform “ Salath”-
Prayers  five   times  a  day.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

எளியாரை வலியார் உதைப்பது தகுமோ?




எளியாரைக் காணுங்கால்
எடுப்பாய் நிற்பான்!
எடுப்பாம் சக்தியை
ஏற்றியே காட்டுவான்!
வலியவன் நானென்பான்!

இது கவிதை!

உறங்கும் உள்ளுணர்வினை
உசுப்பி, உயிர்ப்பித்து
உரம் பெற வைத்தல் கவிதை!

ஊசிமுனை உடல்
நாசித்துளை அனல்
வீசியெழும் மொழிகவிதை!

புதன், 23 ஏப்ரல், 2014

வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் ஆங்கிலத்தில்!





அன்புறவுகளே!

எனது தமிழ்க் கவிதைகள் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், மும்மொழிப் பாண்டித்தியமும் மிக்கவருமான கலாபூஷணம் எம்.வை மீஆத் அவர்களினால் வெகுவிரைவில் மொழிபெயர்க்கப்பட்டு இத்தளத்தில் பதியப்படும் என்பதை மகிழ்வோடு அறியத் தருகின்றேன்.

எனது ஆக்கங்களை மொழிபெயர்த்தருவதாகக் குறிப்பிட்ட கல்வியியலாளர் எம்.வை மீஆத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

சனி, 19 ஏப்ரல், 2014

எனது கவிதைகளில் ஷிர்க்கான விடயங்கள் உள்ள கவிதைகளை இனங்காட்டுங்கள்...!

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து (19.04.2014) இஸ்லாத்திற்கு ஆதரவான கவிதைகளையும், சமூகக் கவிதைகளையும் மட்டுமே எழுதுவேன் என உறுதியளிக்கின்றேன்.
காரணம் இன்று நான் “கவிதை விடயத்தில் கேட்ட அறிவுறுத்தல்”

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நவீன ஜடாயுவும் விபீடணனும்!



அதிகாரவர்க்கத்தின் முதுகந்தண்டில்
அமர்ந்து மிக அழகாக
அடாவடித்தனம் செய்கின்றன
இன்றைய ஜடாயுக்கள்!

பைத்தியம் எவரையா ஞானவானே!


செய்தவறு நீக்கமறச் செயவியலாது
செய்யாக் குற்றம்  பெரிதெனக்கண்டு
ஏய்கின்றார் அம்பு எடுப்பாகத்தான்
ஏற்றமிலை அவ்வம்பில் காண்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உன்னில் எனையிழந்தேன் வெண்ணிலவே!


வானக் கடலிடை வட்டமா யொரு
வண்ண முகங்காட்டி நின்றே நீ
என் மனதிடை புகுந்தனை நிலவே
என்னுள்ளக் காதலி நீயலவோ மதியே!