It கலைமகன் கவிதைகள்: ஜனவரி 2014

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

பிறந்தநாளின்று எனை வழுத்திய கவிதைகள்!



(1) ராஜகவி ராஹில்
--------------------
கலைமகனே 
கவிமகனே 
காலத்தால் அழியாத புனை தமிழ் மகனே !

தமிழ் மகளை 
கவித்திரு மகளை 
புகழ் மகளை 
புவினறு மகளை 
சுவையுறு மகளை 
அவை ஒளி மகளை 
சிகரம் கொண்டு செல்லும் புலமை மகனே !

பாவாக்கினாய்
பூவாக்கினாய்
தேனாக்கினாய்
தீயாக்கினாய்
தேளாக்கினாய்
தமிழ்தனை ஊராக்கி
புகழ் தனைப் பேராக்கி
நீயானாய் பாவண்ணனே !
கவிப் புலியானாய் பா மன்னனே !

வாழ்க
உன்தமிழ் !

வாழ்க
உன் ஆயுள் !

வாழ்க
உன் செல்வம் !

வாழ்க
உன் நலம் !

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !