It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2014

வியாழன், 23 அக்டோபர், 2014

மீனவர் நாமல்லோ..துயரமும் எமதல்லோ!

ஏலோ ஏலோ ஏலேலோ
எங்கள் துயரம் போகவல்லோ
காலம்புர வாரதற்கு – நாம்
கடல் கடந்து செல்கின்றோமே!

கட்டுவல ஏந்திக் கிட்டு ஏலேலோ
கட்ட சுறா கெலவல்லன் பிடிப்பதற்கு
இட்டம் இலாமலும் ஏலேலோ
இதயம் கனக்க போகின்றோமே!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

குமுறல் போதும் உதவிடு!


சீன சென்றேனும் கற்றிடுக என்றநபி
சொல் வார்த்தை அமுதென்றே குமுரி
போனா ரெங்கள் பெரிய மனுஷன்தான்
பேனா வின்றி வாடிய குழந்தைபாவம்!