It கலைமகன் கவிதைகள்: செப்டம்பர் 2015

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

என் வாழ்வின் மெழுகுவர்த்திகளை நினைத்துப் பார்க்கிறேன் சதா!

என் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஒளியேற்றியோரின் படங்களை பதிவிடுவதில் எனக்கு ஆத்மார்த்த மகிழ்வு....

எல்லோரும் என்வாழ்வில் ஒளியேற்ற முன், எல்லாம் வல்லாஹ் அல்லாஹ்வே என் வாழ்வில் ஒளியேற்றுகின்றான். அவனுக்கே என் நன்றிகள் எப்போதும் முதலாய்...

அதன் பின், நன்றி மறவாமை பொருட்டு பின்வருவோரை என்றும் நினைத்துப் பார்க்கின்றேன்....

நான் இன்று உண்டியும் உறையுளும் பெற்று சிறப்பாக இருக்க, எனக்கு பல்லாற்றானும் உதவி செய்த , மீள்மொழிவாளரும், சிறுகதை ஆசிரியருமான கலாபூசணம் திக்குவல்லை எம்.எம். ஸப்வான்,

திங்கள், 7 செப்டம்பர், 2015

ஏன் காதல் கூடாது? - கலைமகன் பைரூஸ்

------------------------------------
ஏன் காதல் கூடாது?
------------------------------------
ஏன் காதல் கூடாது…?
ஏன் காதல் கூடாது?
உன்னை ஏன் நீ காதலிக்க்க் கூடாது?
உன் மனதை ஏன் காதலிக்கக் கூடாது..?
உனக்கு மகிழ்வூட்டுவாரை ஏன் நீ
காதலிக்க்க் கூடாது?

அலக்காய்ப் பறந்தால் ஆலப்பறந்திடச் செயும் இளமை!

---------------------------------------------------------
அலக்காய்ப் பறந்தால்
ஆலப்பறந்திடச் செயும் இளமை!
---------------------------------------------------------
இம்சைகள் பலதந்து இதயத் தலைமோதி
இடுகாடு செலும்வரை வருமே அற்பம்
இம்சித்தவை கொஞ்சிச் சில கொண்டுகரம்
இளமையை கழிப்போம் இதமாக இளையோர்!

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பேருற்றேன் யான்!

----------------------------------
பேருற்றேன் யான்!
----------------------------------

புரட்டாதி முதலாந் தேதி யீதில்
புகழ்ந்திட யாருளர் நினைத் தேன்
உரமது தமிழின் காப்பியம் சீராய்
உவந் தளித்தோன் ஜின்னாஹ் தானே!

பெருங் காப்பியம் ஐந்தும் ஐவர்
புகழ் பெற தந்தார் புவியீதில் சீராய்
பெரும் புலவன் ஜின்னாஹ் தானும்
பெருமையாய்(த்) தந்தான் பன்னூல் தானே!

இனிது நான்கு!

-------------------------
இனிது நான்கு!
-------------------------
வாழ்க்கைக் கினிது இன்சொல் – உன்
வலிய ஆற்றலுக் கினிது பொறுமை
தெவ்வர் வீழ்ந்திட இனிது நேர்மை
தெளிந்த ஆறுதலுக் கினிது அமைதியே!
-------------------------
-கலைமகன் பைரூஸ்
09.01.2015 10.26