It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2015

புதன், 14 அக்டோபர், 2015

நீயின்றி வேறில்லையே!

பனி விழுந்தாலும் வெண்டாமரை பாரமாகாதே
பூத்தான் பூத்தாலும் பனித்துளியில் மாற்ற மில்லையே
அருகில் இன்றி தூரே இருந்தாலும் மறவாதே
உன் அந்தச் சிறு இதயத்திற்குத் துன்பம் தரமுடியாதே

சிறைப்பட்ட சிந்தனைகளுக்கோ அளவே இல்லை
நாங்கள் மகிழ்வாய் இருந்த இடங்கள் மறப்பதே இல்லை
ஒருநாளும் போலின்று காதலில் எக்குறையும் இல்லை
என்னதான் கிடைத்தாலும் நீயின்றி ஏதுமில்லை...

சனி, 10 அக்டோபர், 2015

அட நரமாமிச உண்ணிகளே...

அட நரமாமிச உண்ணிகளே...
பெண்ணில்லா ஊரில் பிறந்த ஓநாய்களே...
அல்லாஹ் ஒருவன் என்ற
அசையாத நம்பிக்கையில் உள்ள
இஸ்லாமியரை
உன் ஈனச் செயல்களால்
இலகுவில் அழித்துவிட இயலாது...
உன் ரவைகள்
பலஸ்தீனிய முஸ்லிம்களை
சுஹதாக்கள் ஆக்குகின்றன...
அவர்களை சுவர்க்கத்தில்
உயரிய ஸ்தலத்தில் அமரச் செய்கின்றன...
நீ பெருஞ்சத்தத்துடன்
ஒரு பெண்ணைக் கொல்வதற்காய்