It கலைமகன் கவிதைகள்: மார்ச் 2016

வியாழன், 31 மார்ச், 2016

கனவு! - மௌலவியா றுஷ்தா இப்ராஹீம் (B.A) (அஷ்பா)

காத்திருப்புகளும் எதிர்பார்ப்புகளும்
உதிக்குமே என்றென்றும்
கானலின் தூரலாய்
துயிலின் மத்தியிலே...........
  
நிறைவேறா ஆசையை
நிறைவேற்றும் யுத்தியாய்
மானிடரை மூழ்கடிக்கும்
மந்திரமான வலையதுவே.........

சனி, 26 மார்ச், 2016

சாதி சாதித்ததென்ன சோதி!

சாதி சாதியென்றே சிறுமைத்தனத்து
சங்கடந்தான் பிறர்க்கீயும் சாதிபேசி
நீதவான் நாங்கள் தானெனப்பேசும்
நீதமற்றாரின் பண்பை ஏதென்பேன்!

உயர்சாதி நாமென்று பிறரைத்தான்
உயர்விலா இழிசாதி என்றுரைத்து
பெயர் புதியன அவர்க்கியற்றி
பெருமை பெற நினைப்பவரீனர்!

செவ்வாய், 22 மார்ச், 2016

நிலத்தின்மீது ஏது குற்றம்?

சிசுப் பருவம் முதல் சிரசுபழுத்து
பாடையினின் போகுமட்டும்
மனுக்குலத்திற்காக உழைத்த
தருக்களில்
பாவி மனிதன்
காமுற்று கற்பழித்ததால்
நீர் கருச்சிதைவாகின…
ஓங்கி உயர்ந்த பருவதங்கள்
இது கண்டு
கடும் வக்கிரத்துடன்

சனி, 19 மார்ச், 2016

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம்

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம் 2016 மார்ச் மாதம் 21 ஆந் திகதி கொழும்பு - 7 இல் அமைந்துள்ள தாமரைத் தடாக அரங்கில் நடைபெறவுள்ளது. 

உள்ளக அலுவல்கள் , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்

வியாழன், 17 மார்ச், 2016

பெற்றோர் இன்பம் ஏதில்?

அன்னை தந்தை தன்பிள்ளை அருமந்த பிள்ளையாய்வரவே

என்றும் நல்லன வியற்றுவர் தம்முயிர் வாட்டியேதான்
மண்ணினின் சிறந்தோன் தன்பிள்ளையே யெனக்கேட்க இவர்
பொன்பெற்றதாய் நினைவர் பாரினி லுயர்ந்தோர் பெற்றோரே
-கலைமகன் பைரூஸ்

வியாழன், 10 மார்ச், 2016

புன்னியாமீன் எனும் ஆளுமை!

பிரபல எழுத்தாளும், ஆசிரியப் பெருந்தகையும், பன்னூலாசிரியருமான கண்டி, உடத்தலவின்னை மடிகேயைச் சேர்ந்த பீ.எம். புன்னியாமீன் இன்று இயற்கையெய்தினார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவரின் நினைவாக இந்தக் கவிதை எழுதப்படுகின்றது.