It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2016

புதன், 20 ஏப்ரல், 2016

மெய்யொடு வாழ்வாய் நீ!

மும்மையும் மலராய் படைத்தவன்
மதியினும் மேலாய் தந்தானென்கு
இம்மையினில் சீராய் ஒருமகவு
இன்னலில்லை இடுக்கணிலை இவள்
அருகிருக்க கவலையே இலைஎன்னில்!
----
காரிருள் தோற்கும் இவள் சிகையில்
கதிரவன் தோற்பான் இவள் ஒளியில்
கணைகள் தோற்றிடும் இவர் நுதலில்
கதிரவன் ஏங்குவான் வால் எயிற்றில்…
----