It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2016

சனி, 10 டிசம்பர், 2016

ஆணா இல்லை பேடியா இவன்?

நீள்கரு முகிலன்ன சிகையொடு ஒருவன்
நில்லாது தள்ளாடி வரக்கண்டேன் அவன்
நீள்புருவங்க ளுயர்த்தி கடுக்கண் ணிட்டு
நிலத்தினில் பேதையாய் வரக் கண்டேன்

கண்டேன் அவனாணோ இலை பேதையோ
கருத்தினி லுன்ன வியலவிலை போயும்
கண்களை அகலத்திறந்து நோக்கிடவே ஐயோ
கோலம்செய் யவன் பேடியே என்றுன்னினேன்

துயராடும் ஆசான்கள்!

தூண்டிலி லகப்படு மீன்களடா நாம் தொண்டு செய்திடு மாசான்களடா உண்டு களித்திட வொருவேளையேனும் வலியவர் கரங்கட்குள் சிக்கினோமடா... உச்சாணி யேறிட வுதவிடு மேணிகளடா