It கலைமகன் கவிதைகள்: 2017

சனி, 25 நவம்பர், 2017

பாரினுக் கருட்கொடையாய் வந்த நபி! - கலைமகன் பைரூஸ்

பாரினுக் கருட்கொடையாய் வந்த பயகம்பர்
பாரிருள் கலைத்தெங்கும் ஒளிபெருக்கிய நாதர்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

பேடிகளாற்றான் பெண்ணடிமை!

(கலி விருத்தம்)
------------------------
ஆண்மையிலா ஆடவனாய் அகிலத்தில் இருந்து
அங்கையின் ஏந்தப்பால் பெண்டிரை தனியராக்கி
ஆண்களொடு கைகுலுக்கி மேனிமினிக்கித் திரிந்திட

ஆரவாரிப்ப திலேதுபயன் பெண்களுக்கடிமை கண்டீர்!

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்று (01.10.2017) இடம்பெற்ற, பட்டயக் கற்கைநெறி மாணாக்கருக்கான பட்டமளிப்பு விழாவின்போது, என்னால் எழுதி வாசிக்கப்பட்ட, பல்லோரினதும் வாழ்த்துக்களைப் பெற்ற கவிதை இது. 

சனி, 16 செப்டம்பர், 2017

சின்னஞ் சிறு கவிகள்! - கலைமகன் பைரூஸ்

பாவடிப் பணைத்தா ளுடைக் கரியும் பரியு மரிபோல் உயர் படையும் மேவியழிந் தனசரு கென வேயன்று மியன்மார் மடிந்திடும் பார்த்திரு அவ்வாறு

புதன், 13 செப்டம்பர், 2017

இதக் கொஞ்சம் யோசி மச்சான்! - கலைமகன் பைரூஸ்

கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
அல்லா ரஸுல மறந்து
நாடுகாட்டுக்கு நீங்க போயி
ஆயிரங்கள் பல தேடியுந்தான்
என்னதான் கிழிக்கப்போற...
கோவம் புடிக்கவாணம் மச்சான்
நான் சொல்றதக் கொஞ்சம்
நிண்ணு நீ கேளுமச்சான்...

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

துணிந்தெழுந்த தகையே பாரதியே!

நல்லபல கவிகள் நெய்தே - அவை
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!

`````````````````````````````````````````

வியாழன், 18 மே, 2017

வீரமுள்ள ஆண்மகன் மனோ!

வந்தேறு குடிகள் நாமென்றும் புற்றுநோய் எம்மில் தானென்றும்
வாய்கிழியக் கத்திய வக்கில்லா வேஷாதாரிக்கு களிறாய் உயர்ந்து
சொந்தம் எமக்கெலாம் சொந்தமடா எனச் சொல்லி நாணிக்குறுக
செய்தவர் மனோ கணேஷன் தானையா யாருக்குளதோ இவ்வீரம்?

-----

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தமிழுக்குப்பெருமை - இலக்கணப் பெருமை!



குறிப்பு -

நிலாமுற்றக் குழுமத்தில் - கவியரங்கில்  இந்தியப் பெரும்புலவர்கள் 107 பேருடன் நானும் கலந்து கொண்டேன்.
“தமிழுக்குப் பெருமை - இலக்கணப் பெருமை” எனும் தலைப்பில் எனது கவிதையைப் பதிவிட்டேன். போட்டியைக் கண்டதும் சடுதியாய்...

முகநூலின்கண் என் இப்பதிவினைக் கண்டு, தட்டித்தந்திருந்த நல்லுறவுகள் அனைவருக்கும் எனது நன்றிப் பூத்தூவல்கள் உரித்தாகட்டும்.

சனி, 15 ஏப்ரல், 2017

இனியுந்தான் பாடம் படிப்போம்!


மீத்தொட்டுமுல்ல மந்திரிமார் கண்களுக்குள் இல்ல செத்தொழியக்கொல்ல மந்திரிமார் கண்களுக்குள் உள்ள வித்தையைக் காணக்கொல்ல விசிரியடிக்க இப்போ இல்ல சொத்தியான ஒரு வெங்காயத் துண்டும்!

நிலாமுற்றக் கவிதைகள்

(1) மௌனம்
---------------------

(2) பாய்கின்ற (வாய்ப்பு வருங்கால் காத்திருத்தல்)
-----------------------
பாய்கின் றபுலி யெலாம் பதுங்கியே புதர்க்குள்
படுத்திருப் பதெலாம் பயந்தாங் கொளி யென்பதற்கா
வாய்புதைத் தேயிருப் போரெ லாம்மூ ட ரன்று
வாய்ப்பு வருங்கால் அடங்கி யிருக்கும் வல்லோரே!
-கலைமகன் பைரூஸ்
நி.மு 603
08.04.2017

காத்திடு சீற்றம் வந்திடும் வசந்தம்!

உள்ளத்தி லெரிகின்ற கனலது சீற்றம்
உனைச் சார்ந்தோரை பழிவாங்கிடுவது சீற்றம்
முள்ளாகக் குத்திடும் சீற்றமதை யடக்கிடவே
முன்னேவரும் உன்னிடம் கண்ணியத்தொடு மதிப்பு!

தன்னைத் தான்காக்கின் காத்திடுக சீற்றம்
தன்மீது அன்பின்றேல் வந்திடுமே சீற்றம்
உன்மீது வெகுளிதான் பிறர்கொண்டு பார்க்க
உன்சீற்றம் உனையழிக்கும் பலவாகப் பாரு

திங்கள், 3 ஏப்ரல், 2017

தாய்மொழி படும்பாடு பார்!

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் யாப்பியலை “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஆசானிடம் சற்றுக் கற்றேன்.

எனதாசான் கலாபுஷணம், சைவப் புலவர் சு. செல்லத்துரையும் ஆதரவு தருகிறார்.

புலவர் குழந்தையின் “யாப்பிலக்கணம்” நூலையும் கற்றுவருகிறேன்.

கற்றதை  வெளிக்கொணர “பயிற்சிகளை” மேற்கொள்கிறேன்.

திங்கள், 20 மார்ச், 2017

கொட்டுங்கடீ கும்மியக் கொட்டுங்கடீ

எனது நண்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க...
நானும் எழுதிக் கொடுத்தேன் கும்மிப்பாட்டொன்று..
கன்னி முயற்சி...
பிழைகள் பொறுப்பீர் கவிவாணர்களே...
---------------------