It கலைமகன் கவிதைகள்: மே 2018

செவ்வாய், 29 மே, 2018

தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!


குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை
*********************************************
தலைப்பு : அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக (முதல் வரி)
**************************************************
எண்ணித் தமிழா எங்கும் எழுக! (இறுதி வரி)
***************************
தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!
*****************************************

அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக
அமுதமாய் ஒளிரும் நற்றமிழைப் பாட
அங்கையின் ஏந்தி அகிலத்தில் சுடர்விட
அன்புத் தமிழா சட்டெனவெழு தரணியிலே...


ஆண்ட தமிழ் ஆழுந்தமிழ் செந்தமிழே
அகிலத்தில் உயர்செம்மொழி நம் தமிழே
ஆழ்வார்கள் ஏந்திய தமிழ் கனிகைத்தமிழே
ஆண்டிட பாரில் வீழ்ந்திடாதது நற்றமிழே!

புதன், 16 மே, 2018

வைரத்தால் வைரத்தை வெல்லாமோ?


வைரம் கொண்டு வைரத்தை வெல்வதுபோல்
வைரத்தை வைரத்தால் வெல்லலாமோ?
வைரமே எலோரையும் அணைத்து
வையத்து ஒருமித்து வாழ்ந்திடத்தான்!

திரு(க்)கை


திருமதியவள் திருகையிலே கைபிடித்து
திருப்பித் திருப்பி மாவரைத்து வரும்
விருந்தினரை அகம்குளிர்ந்திடச் செய்திடவே
வடிவாகச் செய்கின்றாள் திருக்கைவந்த
வாணலியில் வெந்த உண்டியைத்தான்
திருமதியின் திருக்கைகள் திருகையிலே
தினந்தோறும் விதவிதமாய் பல்லுண்டி
திருவாளர் மனம்மகிழச் செய்திடவே
திருகையின் பேருதவி கிடைத்திடுமே
திருகைபோலின்று ஏதுமிலை இலகுவாய்த்

ஞாயிறு, 13 மே, 2018

பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை

காதல் கவிதைப் போட்டி - 1---------------------------------------
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

--------------------------------------------------------------------
அன்பான மச்சி எந்தன் உயிரே
அகத்துக்குள் குடிகொண்ட பொன் மயிலே
உன் பாதக் கொலுசொலி கேட்கையிலே
உயிரில் ஏதோ ஆகுதடி குயிலே...

ஆடிவரும் உன்னெழிலும் அழகுந்தான் ரதியே
ஆட்டம் காட்டுதடி மனசில் பதியே
ஓடிவராமலே கொலுசொலி தான் கனியே
ஒய்யாரமாய் உயிரை காவுகொள்ளுதடி மதியே!

புதன், 9 மே, 2018

ஏர் ஏத்து! - ஏர் பிடித்த கொடி!


ஏர் ஏத்து!
-----------
ஏருழவன் ஏற்றத்தை ஏத்திப் போற்று
ஏழையே யென்றுமவன் புகழேத்து
வீறுடைய அவனாற்றான் அவனியிது
வாகாக வலம்வருது ஏர் ஏத்து!

-கலைமகன் பைரூஸ்
நி.மு. - 2208

தண்ணிக் குடமெடுத்து தனிவழி போறவளே!

தண்ணிக் குடமெடுத்து தனிவழி போறவளே!
தங்கிநின்று எந்தன் கதையக் கொஞ்சம் கேளடி!
உன்மேல உசிரு நான்தான் கிளிபோன்றவளே!
 உதாசீனம் எனைச் செய்யாதே எந்தன் மயிலே!

பொன்னான மச்சி நீயில்லயா? என்னவளே
பொக்கிசம் நீதான் உடல்மீது உயிர் நீயல்லோ?

சனி, 5 மே, 2018

நற்றமிழையே ஏத்து!

தமிழனாய் பிறந்தோரில் பலர் தாய்த் தமிழை மறந்தின்று உமியுள அரிசிபோலத் தமிழை உரக்கவே சொல்கின்றார் அடச்சீ! சோவெனப் பெய்யும் மழைபோல “சோ”வும் “பட்”டும் வந்தாச்சு நோவினை யேயுளமெங்கு மிதனால் நோயுளோர் பற்றிஏதுசொல்வேன் சீ!

வெள்ளி, 4 மே, 2018

த. விமலேஸ்வரன் ஆசிரியைக்கான வாழ்த்துப் பா!

இன்று (04.05.2018) தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் த.விமலேஸ்வரன் ஆசிரியையின் பிரிவுபசாரத்தின் போது, அவருக்கு வழங்கப்பட்ட வாழ்த்துக் கவிதை

விண்ணுயர்ந்தே வளர்ந்தோங்கும் பனையன்ன
விடிவிற்காய் வள்ளன்மையொடு தனையீந்த
பொன்மகளார் பைந்தமிழின் பேராளர் வித்துவான்
புலவரையா செல்லையா மகளே வாழ்க!

பைந்தமிழ்க்குப் பால்வார்த்த புலவோர் செறிந்த
பொன்மனங்கொள் சான்றோர்மிக்க

வியாழன், 3 மே, 2018

இறையை வேண்டுவோம்!


களிப்பே எங்ஙனும் கிடைத்திட இன்பங்கள்
காவல னருளே குவலயத்திடை துன்பங்கள்
வீழ்ந்தே மடிந்திட மனிதம் தழைத்திட
வேண்டியே நிற்போ மிறையை இக்கணம்!

-கலைமகன் பைரூஸ் (நி.எ 2208)