காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தாற்றான் தெரியும்...கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார்.
குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.