திங்கள், 15 செப்டம்பர், 2025

சிகை அலங்காரம் தேவையா சொல்? | கலைமகன் பைரூஸ்

எத்தனை எத்தனை சிகை அலங்காரம்!

குரங்கு கட், பாம்புக் கட், குடு கட் –

புதுமை பெயரால் பழியைக் கொண்டாடி,

படிப்பு மறந்தால் பயனென்ன சொல்?


முடி தான் மாணவன் மேன்மையின்முத்திரையா?

முடிச்சியால் அறிவு வளருமா?

சிந்தனை சீர் பெற கல்வி தான் தேவை,

சிகை அல்ல, சீரிய செயல் தான் பெருமை.

புதன், 10 செப்டம்பர், 2025

நீலிக்கண்ணீர் வடிக்கிறது - கவிதை

 நீலிக்கண்ணீர் வடிக்கிறது

ஓநாய்!
முஸ்லிம்களின்
தகனத்தைப் பேசி
தனது எண்ணங்களை
நிறைவேற்றிக்கொள்ள...
மீண்டுமாய்
முஸ்லிம்களைக்
கருவறுக்க...

ஏ! மானங்கெட்ட வெள்ளை முகத்தாளே!

ஆங் சாங் சூச்சி...
சீச்சீ... சீச்சீ...
உன் பேரைச் சொல்ல
எனக்குள் நாக்கூசுகிறது...

சித்தார்த்தரின் சீரிய
வார்த்தைகளை
நீ அறியாதவளள்ளள்...
பஞ்சமா பாதகங்களில்
கொலையும் மாபாவம்
என்பது தெரியாதவளள்ளள்..

நாளைய நாள்
நீ பர்மாவில்
ஆட்சியமைக்க
இன்று

புதன், 3 செப்டம்பர், 2025

ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்

ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்

ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒளிவிளக்காகக் கருதப்பட்டார். “ஆசிரியர் என்பது அச்சாணி” என்று தமிழ் இலக்கியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த அச்சாணி இல்லாமல் ஏதொரு வண்டியும் நகராது. அதுபோல ஆசிரியர் இல்லாமல் ஒரு சமுதாயமும் முன்னேறாது. ஆனால் இன்று சில இடங்களில் ஆசிரியர்களின் நடத்தை, பண்பாடு, ஆளுமை, பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டிய நம்பிக்கையை அழிக்கும் படியாகக் காணப்படுகிறது என்பதே வேதனை.