சனி, 19 மார்ச், 2016

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம்

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம் 2016 மார்ச் மாதம் 21 ஆந் திகதி கொழும்பு - 7 இல் அமைந்துள்ள தாமரைத் தடாக அரங்கில் நடைபெறவுள்ளது. 

உள்ளக அலுவல்கள் , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வமயம் சிங்கள, தமிழ் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பும் வெவ்வேறாக வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொள்வான் வேண்டி எனக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது. எனது கவிதை கவிதை நூலில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி!

இலக்கிய உறவுகளைச் சந்திக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக