பூக்கள் பூக்கும்படி வேண்டி நின்ற வானமே,
தளிர்கள் மென்மையாகத் திகழும்
மரங்கள் மீது இடியை இறக்குகிறது.
வாடிப் போன அந்த மலர்களைப் பார்த்து
ரகசியமாக,
அம்மரங்கள் மெல்ல மெல்ல அழுவதை
இருள் சூழ்ந்து மழையைப் பொழியும்
ஒரு நாளில், பயனற்ற நறுமணம் வீசும்
ரோஜா மலர்கள் பூத்தன.
மாலை மயங்கும் நேரத்திற்குள்
அவை வாடிப் போயின,
இவ்வுலகில் அழகு எனச் சொல்லுமளவிற்கு
நான் எதையும் காணவில்லை.
வாழ்க்கை சிறிது சிறிதாக
முதிர்ச்சியடையும் போது,
மனிதனுக்கு மதிப்புமிக்க ஒன்று
இந்த உலகில் உண்டு.
என்னை ஏமாற்றி நீண்ட காலம்
நான் கொடுத்த அன்பை,
நீ என்னிடமிருந்து திருடிச் சென்ற
அந்தப் பொக்கிஷம் 'காலம்' தான்.
சிறிது சிறிதாக நிரம்பிய
கண்ணீர் துளிகளுடன்,
மீண்டும் சிரிக்க முடியாத அந்த
இழந்த நாட்களை நினைத்து,
இன்னும் அனுபவிக்க அழகான
காதல் தருணங்கள் இருக்கையில்,
நீ என்னை விட்டுப் பிரிந்ததே
எனது பொற்காலம்.
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக