
நலிவுற்ற நல்லாளைத் தாங்கு!
வருபடைகள் தான்வென்றுவருங்காளை
வாளைமீன்களால் கண்டுவிட ஆசை
கருமீசைநெஞ்சத்தில் மஞ்சமிட ஆசை
கதவினிடுக்கிருந்து பார்க்கின்றாளேநேசி!
இருமருங்கும் உள்ளனரே தாதி
இதயத்துள் தாங்கியவளிவள் ஆதி
திருவுடையான் உளம்பற்றிட ஆதி
திருநங்கைசெய்திட்டசெய்கைகள் சோதி!
கசத்தோடு திமிரபகவரைவென்ற தமிழன்
கரம்பற்றிட உளம்படருது முத்து
விசமருந்தி சாவே நீயின்றேலென்று
விசயம் சொல்கிறளா வித்தையாளீவள்!
கதவுத்துளையம் கண்ணிரண்டும் விட்டு
கரம்பிடிக்க வுள்ளானின் மனதினை தொட்டு
சாதற்கு முன்னொருபொழுதேனும் மொட்டு
சேர்ந்துவிட ஆசையம்வார்த்தை சொல்கிறாளோ?
அவனின்றிய நாழிகைள் பசளையாயீவள்
அடைந்திட்டாள் துன்பங்கள்கோடி
சவத்திற்கு முன்னேனும் சந்தித்துமகிழ
சொல்லழகி படுகின்றபாடு அந்தோபாரு!
மீசைமுறுக்கிய வீரத்தமிழா – வந்துவிடுஓடி
மெத்தழகு ஒருமித்த நல்லாளைக் கூடி
நசைமிகு யுள்ளான்நீ பல்லாங்குசொல்லாடி
நனைந்திடஅவள்மேனி கஞ்சமுகந்தனைக்கூடு!
கலைமகன் பைரூஸ்