It It கலைமகன் ஆக்கங்கள்: கவிதை Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 மே, 2026

மனிதநேயத்தின் மின்னல் - வைத்தியர் ஷாஃபி! | கலைமகன் பைரூஸ்

காலம் சோதித்தது...

குருதியாய் குற்றம் சுமத்தி,
கண்ணீராய் களங்கம் பூசி -
ஒரு மனிதனை மௌனத்தில் மூழ்கடித்தது...
ஆனால்,
அதே காலம்...
ஒருநாள் நீதியின் நாதஸ்வரமாய்
உண்மையை எழுப்பி நின்றது!
மரணத்தின் வாசலில்
மயங்கிக் கிடந்த ஒரு தாய் -
முடிவின் மௌனத்தை நோக்கிச் சென்றபோது,
உயிரின் உச்சரிப்பாய் வந்தார் அவர்!
நோன்பின் நேரம் அது...

எனதத்தியாயம் எந்த எழுத்துக்களால் ஆனதோ? | றபீக் மொஹிடீன்

அல்லாஹ்வின் ஏட்டில் 

எனதத்தியாயம்  எந்த எழுத்துக்களால்

எழுதப்பட்டதோ......?


வாழ்க்கை நெடுங்கணக்கில்

இன்னும் அரிச்சுவடியாய்..

விடை தெரியா வினாக்களோடு...

புதன், 18 மார்ச், 2026

விடியற்காலம் வரட்டும்…! | கலைமகன் பைரூஸ்

மண்ணின் நெஞ்சில் மழை விழுந்தது,

அது கண்ணீரா, அல்லது நம்பிக்கையா?

குழந்தையின் சிரிப்பு மங்கியதேன்?

காற்றே, நீயும் சொல்லாமல் போனாயே…!

வெள்ளி, 6 மார்ச், 2026

உன் உதவி எனக்குள்! | இன்ன மஇய ரப்பீ!

'Inna Maiya Rabbi'

முன் கடல் கொந்தளித்தாலும்,
பின் எதிரி நெருங்கினாலும்,
மனித கண்கள் பயம் கண்டாலும்
இறைநம்பிக்கை தளராது.
ஒற்றைக் கணமும்

திங்கள், 23 பிப்ரவரி, 2026

விடியல் தேடும் கண்கள் | கலைமகன் பைரூஸ்

இமயத்து பனிக்குள் இமைக்காது நின்றான்;
இருளின் உள்ளே ஒளியொன்றைத் தேடினான்;
இன்று —
கையில் குர்ஆன்!
காலத்தின் கதவு திறப்பதா?
புகழ் ஒரு புயல்;
பேரரங்கு ஒரு அலை;
ஆனால் மெய்யுணர்வு —
அமைதியின் இடியாய்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தன்நம்பிக்கையின் சாயல்

தூரப் பாதை தூசியைத் தாங்கி
நம்பிக்கையை நெஞ்சில் நட்டுக் கொண்டு
“இன்று மாணவர்கள் நிரம்புவார்கள்” என
இதயம் முழுதும் கனவுகள் கட்டி
வகுப்பறை கதவைத் திறந்தார் ஆசிரியர்.
அங்கு இருந்தது
அமைதியும்…

புதன், 10 செப்டம்பர், 2025

நீலிக்கண்ணீர் வடிக்கிறது - கவிதை

 நீலிக்கண்ணீர் வடிக்கிறது

ஓநாய்!
முஸ்லிம்களின்
தகனத்தைப் பேசி
தனது எண்ணங்களை
நிறைவேற்றிக்கொள்ள...
மீண்டுமாய்
முஸ்லிம்களைக்
கருவறுக்க...

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு

✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.

மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...

வியாழன், 31 ஜூலை, 2025

நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்

நானிருப்பேன் அன்றும்!

இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...

ஞாயிறு, 15 ஜூன், 2025

பசுமை பேசட்டும்! பாடல் - கலைமகன் பைரூஸ்

🌿 பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!

மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!

திங்கள், 28 ஏப்ரல், 2025

பள்ளிகள் காய்ந்து போகின்றன... அங்கலாய்க்கிறேன் நான்!


---------------------
(இது இயக்கம் சார்ந்த பதிவே அல்ல.. )
---------------------

ஜும்ஆக்களின் முழக்கள்
செவிடர்களின் காதுகளில்
அகலவே ஒலிக்கின்றன...
ஜும்ஆவைக் கேட்பதற்கு
இரண்டாம் ரக்ஆத்தில்
வருகின்றார்கள் - அவர்கள்

ஞாயிறு, 30 மார்ச், 2025

தாயின் அன்பிலும் உயர்ந்தவனே, காத்திடு நீயே

 

நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...

புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...

எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...

அவர்களின் படங்கள்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

நான் நாமாவோம் இக்கணமே - கலைமகன் பைரூஸ்

நானெனும் மமதை நமைக் கொள்ளும்

 நாமெனும் பண்பே நமைப் போற்றும்

எனதே எல்லாம் எனும் குணமும்

 என்றும் அழிவை எமது வழியாக்கும்

 ---------------------------

இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

அங்கமெங்கும் தொடுவீர் | காதலர் தினக் கவிதை

அங்கங்கே கூடுவீர்

அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்

பங்கமில்லை என்பீர்

சிங்கம் அவன் எனக்கு

தங்கம் அவள் எனக்கு என

வங்கம் எங்கும் பொங்குவீர்


நுங்குத் தண்ணீராய்

வாசப் பன்னீராய்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

ஆழப்பணிசெய்த அதிபரெங்கள் ஹிப்ளர் - கவிதை

 ஆழ்மன தினிலே அறைந்தே உள்ளார்

     அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே

காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார்  கேளீர்

     அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே


திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்

    திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்

இட்டமாய் இன்பணி தான்செய் தாரே

   இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

உடல்மெலிந்து உருக்குலைந்து - மெய்யன் நடராஜ்

 

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

***********************************
கடல்கடந்து இலங்கைவந்து
கடுமுழைப்பைக் கொடுத்தன்று
அடவிபல அழித்தொதுக்கி
அழகொளிரத் தேயிலையை
இடருடனே நாட்டிவிட்டு
இருப்பிடமாய் லயமென்னும்
மடந்தன்னில் வசித்தந்த
மலையகத்தை உருவாக்கி
உடல்மெலிந்து உருக்குலைந்து
உழைத்திட்டத் தொழிலாளர்
கடந்துவந்த பாதையெலாம்
கல்லுமுள்ளு நிறைந்ததுவே
வரலாற்றில்
அழியாத காவியமாய்
அன்றுமின்றும் திகழ்ந்தாலும்

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாரதி வாழுகின்றான்! - வாங்கனூர் அ மோகனன்.

பாரதி_வாழுகின்றான்!

(அறுசீர் விருத்தம்)

வேரிலா நாற்றைக் கொண்டு
விண்வரை அகம்வளர்த்தான்!
யாரவன்? நம்பாட்டன்தான்!
அவன்தமிழ் நம்மிடத்தில்
வாரித்தான் வழங்கி வைத்தான்!
வண்ணத்தில் குழைத்தும் தந்தான்!
பாரதிப் புலவன் வாழ்க!
பாருள்ள மட்டும் வாழ்க!
பாட்டென ஒன்றை நாட்டிப்
பைந்தமிழ்ப் படையல் போட்டான்!
ஆட்டமாய் ஆட்டு வித்தான்
அழகிய மயிலை எல்லாம்!
கூட்டமாய்க் குயிலைக் கூட்டி
குக்குக்கூ பாட வைத்தான்!

திங்கள், 20 ஜனவரி, 2025

ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ அப்துல் ரகுமான்

ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ அப்துல் ரகுமான் வழங்கிய செவ்வி

இரவு நேரம். கண்களுக்கு எதுவும் புலப்படாத சூழல். புல்லின் நிழலில் பூச்சி இருப்பதையும் காண முடியாத நிலை. ஆனால், பூசன் ஓசை வழியே பூச்சி இருப்பதை உணர்கிறார். இரவு நேரத்தில் துல்லியமாய் ஒலி, ஒளி, நிழல், இருட்டு என அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் கவிஞரின் உள்ளம் இதன்வழி புலனாகின்றது.
கடைப் புத்தகங்கள்
கனமான பொருள்
இளவேனில் காற்று
-கிடோ
இளவேனில் காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கடையில் புத்தகங்கள் மேல் கனமான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அது காற்றின் வருகையை நமக்கு உணர்த்தும் பொருளாகிறது. நம்மைச் சுற்றி இயற்கையின் வருகையும் மாறுதலும்

வியாழன், 4 ஜனவரி, 2024

யார் இந்த கலீல் அவ்ன் மௌலானா?

நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!

தித்திக்கும் தீந்தமிழ்க்கா வியம்தந்தே நின்றாரே

தெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே

புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே

பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!


நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்

நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்

வெள்ளி, 6 அக்டோபர், 2023

கலைச்சுடரே வாழ்க! - 'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ்


வாரிஸலி மௌலானா வெனும்பெயர் கொண்டு

எம்மனத்தில்  ஆழப்பதிந்து இருப்பாய்க் கொண்டு

சீரியராய் சிந்திக்க இனியராய் இருப்பதற்றான்

சீர்கவிதை எழுதித்தான் புகழ்கின்றேன் இந்நூல்கண்

பேரிலுள  மௌலானா  வெனும்பதந்தான் உயர்விங்கு