நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....
--------------------------------------------------
தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு
திருந்தாதார் தானாடத் தெருவுண்டு
மீனாட விழியுண்டு முகிலாட வானுண்டு
கானாட மயிலுண்டு கனியாடக் கிளையுண்டு
கதிராட நீர்கொண்ட வயலுண்டு
தானாடா விட்டாலும் சதையாட லதுவுண்டு
தன்னலங்க ளில்லாதா ரெவருண்டு?
*
அலையாட கரையுண்டு அணிலாடக் கிளையுண்டு