It It கலைமகன் கவிதைகள்: மார்ச் 2025 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 4 மார்ச், 2025

எதுவுண்டு சொல்?

நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....

--------------------------------------------------

தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு

திருந்தாதார் தானாடத் தெருவுண்டு
மீனாட விழியுண்டு முகிலாட வானுண்டு
முளைக்காத விதையாட நிலமுண்டு
கானாட மயிலுண்டு கனியாடக் கிளையுண்டு
கதிராட நீர்கொண்ட வயலுண்டு
தானாடா விட்டாலும் சதையாட லதுவுண்டு
தன்னலங்க ளில்லாதா ரெவருண்டு?
*
அலையாட கரையுண்டு அணிலாடக் கிளையுண்டு