திங்கள், 23 பிப்ரவரி, 2026

விடியல் தேடும் கண்கள் | கலைமகன் பைரூஸ்

இமயத்து பனிக்குள் இமைக்காது நின்றான்;
இருளின் உள்ளே ஒளியொன்றைத் தேடினான்;
இன்று —
கையில் குர்ஆன்!
காலத்தின் கதவு திறப்பதா?
புகழ் ஒரு புயல்;
பேரரங்கு ஒரு அலை;
ஆனால் மெய்யுணர்வு —
அமைதியின் இடியாய்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தமிழே! நீ வாழ்க – தாய்மொழிப் பெருமை கூறும் புதிய கவிதை

தமிழ் — ஒரு மொழி அல்ல; ஓர் உயிர். ஓர் மரபு. ஒரு மெய்ப்பொருள்.

உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது. 

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தன்நம்பிக்கையின் சாயல்

தூரப் பாதை தூசியைத் தாங்கி
நம்பிக்கையை நெஞ்சில் நட்டுக் கொண்டு
“இன்று மாணவர்கள் நிரம்புவார்கள்” என
இதயம் முழுதும் கனவுகள் கட்டி
வகுப்பறை கதவைத் திறந்தார் ஆசிரியர்.
அங்கு இருந்தது
அமைதியும்…

சனி, 7 பிப்ரவரி, 2026

ஒரு விதவையின் ஏக்கம் | ஷியா

சின்னச் சின்ன வரிகளில் நிறையவே சிந்திக்க வைத்த அழகான கவி வரிகளைக் காணக் கிடைத்தது. நீங்களும் வாசித்துத்தான் பாருங்களேன். மெய்ப்பொருள் காண்பீர்கள்.

கவிதைக்குரியவர் க. ஷியா

-----------------------

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது

 “என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் ஆற்றல்களில் நான் உயர்ந்து நிற்கிறேன். இன்னுமின்னும் சாதிப்பேன்.”

இந்தத் தன்னம்பிக்கைச் சொற்களை வாழ்வியல் நெறியாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் வரலாற்றுக் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றார் எனது மாணாக்கரில் ஒருவரும், தற்போது ஹம்பாந்தோட்டை – பதகிரிய முஸ்லிம்

திங்கள், 2 பிப்ரவரி, 2026

காதல் வலை

 காதல் வலை

காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.