📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
புதன், 29 செப்டம்பர், 2010
வியாழன், 16 செப்டம்பர், 2010
உனை நினைத்து!
(என் தமிழ்க் கனிகையே...)
---------------------------------------------
உள்ளத்து ளுயிராய் வந்தாய்
உள்ளத்து ளுயிராய் வந்தாய்
உதிரத்து ளொன்றாய் கலந்தாய்
கள்ளுண்ட வண்டா யானேன்
கனிமொழி யுன்னிளமை கண்டேன்!
00000
இதழொடு இதழ் பதித்தாய்
இதமாக இதழ் குவித்தாய்
காதலா லுன்னில் பித்தாகி சித்திரித்தேன்
காதலியே என்றுமென்னுள் நீயே வேண்டும்!
00000
முத்தீ வளர்த்த சங்கத்தாளே – உன்
முன்னழகும் கண்ணுக்குள் சித்திரமாக!
சித்திபெற்ற சுந்தரியாள் நீ – எங்குமெதினும்
சிந்துவேன் நின்புகழ் ஞாலமீது மணியாக!
00000
புள்ளுறங்கும் கணமதுவும் பூவே நீ!
புழுங்குகின்றேன் பாரிலுன் நிலைகண்டு – யாண்டும்
நில்லாத நிலத்தினிலும் நீநிமிர வேண்டும்
நினையென்றும் நினைத்திடுவேன் நானே!
00000
உயிர்மெய்யா யென்னக மிணைந்தாய் - நின்
உயிர்த்துடிப்பதை ஆய்தமாய் வைத்தாய்!
ஆயுதமீந்து மெலிதெனை வலிதாக்கினாய்
ஆகாரமேனோ இடையுந் தானுன்னில் கண்டக்கால்!
00000
புல்லர்களுன் சத்தான இளமைகண்டும் - பூவே
புரியாமல் தலைகாலது பொய்செய்குவை!
மல்லர்தானு முனையிகழ்ந்தால் ஞாலமீதில் - நின்
மடிவீழ்ந்து சரண்புக வீழ்த்திடுவேனே!
00000
என்னிலக்கணமே நினதெழில் பைம்பூணாமோ?
எழுதுகின்றேன் நினதெழில் எழுதுகின்றேன்
உன்னை விண்ணதிரப் போற்றி யெழுதுகின்றேன்
உயிராய் வருக! என் தமிழ்க்கனிகை நீயே!
- கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி
# முத்துக்கமலம்
# தினகரன் வாரமஞ்சரி
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
புதன், 8 செப்டம்பர், 2010
திங்கள், 6 செப்டம்பர், 2010
நடக்கிறது ஒரு பயணம்!
நாளொன்று புலர்கிறது
நாளைய விடிவுக்காக....
நிறைந்த மனதோடு
நடக்கிறது ஒரு பயணம்!
ஆயின்...
தட்டிப் பறிப்பதற்காய்
அங்கொரு காகம்
அண்ணாந்து பார்க்கிறது!
அழுக்குண்ணிச் சிந்தனையோடு
பிணந்தின்னும் கழுகுகள்
நாற்சந்திகளிலும்
புயல்வீச்சோடு பறக்கிறது!
கடித்துக்குதறும்
ஓநாய்கள்
அலைந்து திரிகின்றன
பிணமாக்கி மகிழ்ந்திட!
ஆயின்...
நடக்கிறது ஒரு பயணம்!
தட்டுத் தடுமாறியும்
தடைகள் தாண்டியும்
முச்சந்தி முட்களைக் கடந்தும்
தன் பிம்பத்தை
காணும் இடமெலாம்
நிழலாய்க் கண்டும்
களிப்புற்று மகிழ்கிறது உள்ளம்!
கறுப்பஞ்சாறாய் சுவைத்து
கருவேப்பிலையாய் ஒதுக்கும்
கேடுகெட்ட செயல்கண்டு
பிறந்ததேனோ
இத்தரையில் என
அடிமனது வினாதொடுக்க
நடக்கிறது ஒரு பயணம்!
அங்கு
மேடைகள் போட்டு
மத்தளம் கொட்டி
‘சமுதாயம்’ உரக்கப்பேசுகிறது!
அரவணைக்கவும்
ஆரத் தழுவவும் அழைக்கிறது!
அரங்கம்
பேரொலிக்கு அதிர்கிறது
இதைக் காணக்கொடுத்தன
விழிகள் என
நடக்கிறது ஒரு பயணம்!
நடுவழியே
நேத்திரங்கள்
குத்திநிற்கின்றன!
காசற்ற பிச்சைப்பாத்திரம்
வஸ்திரமற்ற உடம்பு
இவற்றோடு
பிணமொன்று
மணம்வீச
காகமும் கழுகும்
ஓநாயும்
பெருமனதுடன் அங்கே!
பேரிரைச்சல் தாங்கவியலாது
மீண்டும்
நடக்கிறது ஒரு பயணம்!
இடைநடுவே
சந்தனப்பாடை சுற்றி
பெருங்கூட்டம் ஓலமிட
மானுடனின் நிலைசொல்லி
நடக்கிறது ஒரு பயணம்
தடுக்கிறது அப்பயணம்!
மேலும் வழிசெல்லாது
தடுக்கிறது அப்பயணம்!!
நன்றி:
# வார்ப்பு
நன்றி:
# வார்ப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)