It It கலைமகன் ஆக்கங்கள்: கலைமகன் கவிதைகள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
கலைமகன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைமகன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூன், 2026

எனது பொற்காலம் | கலைமகன் பைரூஸ்

பூக்கள் பூக்கும்படி வேண்டி நின்ற வானமே,

தளிர்கள் மென்மையாகத் திகழும்
மரங்கள் மீது இடியை இறக்குகிறது.
வாடிப் போன அந்த மலர்களைப் பார்த்து
ரகசியமாக,
அம்மரங்கள் மெல்ல மெல்ல அழுவதை
நான் தினமும் காண்கிறேன்.

வெள்ளி, 6 மார்ச், 2026

உன் உதவி எனக்குள்! | இன்ன மஇய ரப்பீ!

'Inna Maiya Rabbi'

முன் கடல் கொந்தளித்தாலும்,
பின் எதிரி நெருங்கினாலும்,
மனித கண்கள் பயம் கண்டாலும்
இறைநம்பிக்கை தளராது.
ஒற்றைக் கணமும்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தமிழே! நீ வாழ்க – தாய்மொழிப் பெருமை கூறும் புதிய கவிதை

தமிழ் — ஒரு மொழி அல்ல; ஓர் உயிர். ஓர் மரபு. ஒரு மெய்ப்பொருள்.

உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது. 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

காஸா குழந்தைகள் | கலைமகன் பைரூஸ்

காஸா குழந்தைகள் 

அப்பா என்ற ஒளி அணைந்திட,
அம்மா என்ற கண் நீரால் மூழ்கிட,
உணவின் வாசமின்றி உழலும்
உயிர்கள் – குழந்தை முகங்கள்!

சூரியன் காய்ந்தாலும் சிரிக்கவில்லை,
சந்திரன் வந்தாலும் மினுக்கவில்லை,
பொம்மை என்பதாய் கல்லைக் கொட்டி,
பசி என்பதைக் காற்றில் மறைத்துக் கொண்டது.

சனி, 30 ஆகஸ்ட், 2025

மருந்தகத்தின் கண்ணீர் விலை - கலைமகன் பைரூஸ்

 மருந்தகத்தின் கண்ணீர் விலை

மருத்துவம் என்றாலே நம்பிக்கை எனும் நதி,
மருந்தகம் என்றாலே உயிர்க்கு ஒளி தரும் சுடர்...
ஆனால் இன்று –
அந்த நதி வணிகம் ஆனது,
அந்த சுடர் பணம் கவரும் பிசாசானது.

சின்ன காய்ச்சலுக்கும் –

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு

✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.

மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...

வியாழன், 31 ஜூலை, 2025

நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்

நானிருப்பேன் அன்றும்!

இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...

திங்கள், 28 ஏப்ரல், 2025

பள்ளிகள் காய்ந்து போகின்றன... அங்கலாய்க்கிறேன் நான்!


---------------------
(இது இயக்கம் சார்ந்த பதிவே அல்ல.. )
---------------------

ஜும்ஆக்களின் முழக்கள்
செவிடர்களின் காதுகளில்
அகலவே ஒலிக்கின்றன...
ஜும்ஆவைக் கேட்பதற்கு
இரண்டாம் ரக்ஆத்தில்
வருகின்றார்கள் - அவர்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2023

உழைக்கும் கைகளே நாட்டின் கண்கள் | கலைமகன் பைரூஸ்

 ஈழ மண்வாசம் வீசும் நேரம்

எங்கள் நெஞ்சங்கள் தீபம் ஏறும்;

இருள் கடந்திடும் இனிய காலம்

இன்று நாமெல்லாம் சேர்ந்து செய்வோம்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சாதி? - கலைமகன் பைரூஸ்

பிறந்தது நானும் நீயும் அம்மணத்தோடு...
பிதற்றுகின்றாய் இன்று நீ
பெருச்சாளி நானென்று...
உச்சாணியில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
உன்சாதிதான் பெரிதென்கிறாய்...
உன் கருமங்களை ஆற்றிக்கொள்ள
நான் - நாங்கள் - எம்மவர்
உனக்கு - உங்களுக்கு
பத்தரை மாற்றுத் தங்கம்....


ஞாயிறு, 3 ஜூலை, 2016

அகர வித்தக - ககரக் கவி

களங்கமில் மனமே
காதல் கொண்டேன் உன்னில்
கிள்ளை மொழி பேசி
கீற்றென நில் மனமே!
குவலயம் செழித்திட மனமே
கூவிடு யாமெலாம் ஒன்றென்று
கெட்டவரழிந்து நல்லோர் தோன்றிட