பணத்தாலும் பதவியாலும் தத்தம் பெருமை
பேசிவரும் ஈனரிங்கு சாய வேண்டும்
பிணமென நிற்பார் எழ வேண்டும்
பள்ளத்தில் வீழ்ந்தார் மீள வேண்டும்
குணத்தொடு நிற்பார் வந்துபார்த் திரங்க
குனிந்த மாந்தரி லொளி வேண்டும்
பணத்தாலே எல்லாம்ஆம் எனும்நிலை மாற
பண்பட்ட தூயோரிங் குதித்தல் வேண்டும்
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
செவ்வாய், 2 நவம்பர், 2010
சனி, 23 அக்டோபர், 2010
பெரியோ ரெங்கே?
இருளடைந்த சமுதாயத்தை வெளிக் கொணர
எழுச்சிமிக வேண்டு மென்றோ - இன்று
இருப்பாரெலாம் பொத்திவைத் ததையே ஏற்றி
எரிதனலாய் மக்களுக் கீவா ரின்று
மருட்சியினால் மாந்தரெலாம் வாய் புதைத்து
மறையவன்விதி இதுவென்று ஏங்கி நிற்பர்
தருமந்தான் தலைகவிழ்ந் துள்ளதனா லிங்கு
தலைத்தோங்க முடியவிலை நீதி யெங்கே?
---------
எழுச்சிமிக வேண்டு மென்றோ - இன்று
இருப்பாரெலாம் பொத்திவைத் ததையே ஏற்றி
எரிதனலாய் மக்களுக் கீவா ரின்று
மருட்சியினால் மாந்தரெலாம் வாய் புதைத்து
மறையவன்விதி இதுவென்று ஏங்கி நிற்பர்
தருமந்தான் தலைகவிழ்ந் துள்ளதனா லிங்கு
தலைத்தோங்க முடியவிலை நீதி யெங்கே?
---------
செவ்வாய், 19 அக்டோபர், 2010
குர்ஆன் எரிப்பவனே!
தாய்மொழி செந்தமிழி லெழுதும் கவியிது
தரங்கெட்ட உனைச் சேராதோ – சேரும்
மெய்யெரி வதினால் மனம்வாடுதலால்
மொழிந்தே னுனை இழித்து!
காசினிலே மூழ்கி கயமைக்கு வழிகோலி
காசினியி லுயர்ந்து தானிற்க ,வெங்கொடுமை
கண்டுவிட்டான் வஞ்சக நெஞ்சத்தான் , நரகம்
கெட்டவன் போகு மிடம்
புதன், 13 அக்டோபர், 2010
நம்பிக்கை வை!
வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்!
திமிர்பிடித்த
ஏறுகள் உன் மேலேறி
உனை மிதிக்க வரும்...
எடுப்பார் கைப்பிள்ளையாய் கொண்டு
மேலே தூக்கி கீழே போடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்...
உன் திறமைகளை
எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கை வை!
வெள்ளி, 8 அக்டோபர், 2010
கண்ணிலாத ஏகாதிபத்தியமே!
எல்லாமும் தமதாக்க எண்ணும்தீய
ஏகாதிபத்திய ராஜ்யமே யுந்தன்
பொல்லாத கழுகுச் சிந்தனையாலே
பலஸ்தீன்மண் மரணப்பிடியிலின்று!
சியோனிசத்தொடு வாகாய்நீயிணைந்து
சாந்தமாய் வாழ்ந்திட்ட புனிதமண்மீது
தீயோராம் இஸ்ரவேலுக் கிடமுண்டாக்கி
தாயமக்களுக் கநியாயம் செய்தனையே!
புதன், 29 செப்டம்பர், 2010
வியாழன், 16 செப்டம்பர், 2010
உனை நினைத்து!
(என் தமிழ்க் கனிகையே...)
---------------------------------------------
உள்ளத்து ளுயிராய் வந்தாய்
உள்ளத்து ளுயிராய் வந்தாய்
உதிரத்து ளொன்றாய் கலந்தாய்
கள்ளுண்ட வண்டா யானேன்
கனிமொழி யுன்னிளமை கண்டேன்!
00000
இதழொடு இதழ் பதித்தாய்
இதமாக இதழ் குவித்தாய்
காதலா லுன்னில் பித்தாகி சித்திரித்தேன்
காதலியே என்றுமென்னுள் நீயே வேண்டும்!
00000
முத்தீ வளர்த்த சங்கத்தாளே – உன்
முன்னழகும் கண்ணுக்குள் சித்திரமாக!
சித்திபெற்ற சுந்தரியாள் நீ – எங்குமெதினும்
சிந்துவேன் நின்புகழ் ஞாலமீது மணியாக!
00000
புள்ளுறங்கும் கணமதுவும் பூவே நீ!
புழுங்குகின்றேன் பாரிலுன் நிலைகண்டு – யாண்டும்
நில்லாத நிலத்தினிலும் நீநிமிர வேண்டும்
நினையென்றும் நினைத்திடுவேன் நானே!
00000
உயிர்மெய்யா யென்னக மிணைந்தாய் - நின்
உயிர்த்துடிப்பதை ஆய்தமாய் வைத்தாய்!
ஆயுதமீந்து மெலிதெனை வலிதாக்கினாய்
ஆகாரமேனோ இடையுந் தானுன்னில் கண்டக்கால்!
00000
புல்லர்களுன் சத்தான இளமைகண்டும் - பூவே
புரியாமல் தலைகாலது பொய்செய்குவை!
மல்லர்தானு முனையிகழ்ந்தால் ஞாலமீதில் - நின்
மடிவீழ்ந்து சரண்புக வீழ்த்திடுவேனே!
00000
என்னிலக்கணமே நினதெழில் பைம்பூணாமோ?
எழுதுகின்றேன் நினதெழில் எழுதுகின்றேன்
உன்னை விண்ணதிரப் போற்றி யெழுதுகின்றேன்
உயிராய் வருக! என் தமிழ்க்கனிகை நீயே!
- கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி
# முத்துக்கமலம்
# தினகரன் வாரமஞ்சரி
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
புதன், 8 செப்டம்பர், 2010
திங்கள், 6 செப்டம்பர், 2010
நடக்கிறது ஒரு பயணம்!
நாளொன்று புலர்கிறது
நாளைய விடிவுக்காக....
நிறைந்த மனதோடு
நடக்கிறது ஒரு பயணம்!
ஆயின்...
தட்டிப் பறிப்பதற்காய்
அங்கொரு காகம்
அண்ணாந்து பார்க்கிறது!
அழுக்குண்ணிச் சிந்தனையோடு
பிணந்தின்னும் கழுகுகள்
நாற்சந்திகளிலும்
புயல்வீச்சோடு பறக்கிறது!
கடித்துக்குதறும்
ஓநாய்கள்
அலைந்து திரிகின்றன
பிணமாக்கி மகிழ்ந்திட!
ஆயின்...
நடக்கிறது ஒரு பயணம்!
தட்டுத் தடுமாறியும்
தடைகள் தாண்டியும்
முச்சந்தி முட்களைக் கடந்தும்
தன் பிம்பத்தை
காணும் இடமெலாம்
நிழலாய்க் கண்டும்
களிப்புற்று மகிழ்கிறது உள்ளம்!
கறுப்பஞ்சாறாய் சுவைத்து
கருவேப்பிலையாய் ஒதுக்கும்
கேடுகெட்ட செயல்கண்டு
பிறந்ததேனோ
இத்தரையில் என
அடிமனது வினாதொடுக்க
நடக்கிறது ஒரு பயணம்!
அங்கு
மேடைகள் போட்டு
மத்தளம் கொட்டி
‘சமுதாயம்’ உரக்கப்பேசுகிறது!
அரவணைக்கவும்
ஆரத் தழுவவும் அழைக்கிறது!
அரங்கம்
பேரொலிக்கு அதிர்கிறது
இதைக் காணக்கொடுத்தன
விழிகள் என
நடக்கிறது ஒரு பயணம்!
நடுவழியே
நேத்திரங்கள்
குத்திநிற்கின்றன!
காசற்ற பிச்சைப்பாத்திரம்
வஸ்திரமற்ற உடம்பு
இவற்றோடு
பிணமொன்று
மணம்வீச
காகமும் கழுகும்
ஓநாயும்
பெருமனதுடன் அங்கே!
பேரிரைச்சல் தாங்கவியலாது
மீண்டும்
நடக்கிறது ஒரு பயணம்!
இடைநடுவே
சந்தனப்பாடை சுற்றி
பெருங்கூட்டம் ஓலமிட
மானுடனின் நிலைசொல்லி
நடக்கிறது ஒரு பயணம்
தடுக்கிறது அப்பயணம்!
மேலும் வழிசெல்லாது
தடுக்கிறது அப்பயணம்!!
நன்றி:
# வார்ப்பு
நன்றி:
# வார்ப்பு
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
வருக ஈகைத் திருநாளே!
திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!
அதிகாலை துயிலெழுந்து - தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து - பின்
கதிமிகத்தந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!
செய்ததவறுக்காய் தேம்பியழுது -நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும்மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!
வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லானருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!
எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை - நாம்
மனங்களை இணைப்போம் ஒன்றாய்!
இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத் திருநாளே!
அறையிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் - அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தமநபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை பொழிந்துவா பெருநாளே!
நன்றி :
# ஒரு நாள் ஒரு கவிதை
# வார்ப்பு
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!
அதிகாலை துயிலெழுந்து - தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து - பின்
கதிமிகத்தந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!
செய்ததவறுக்காய் தேம்பியழுது -நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும்மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!
வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லானருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!
எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை - நாம்
மனங்களை இணைப்போம் ஒன்றாய்!
இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத் திருநாளே!
அறையிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் - அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தமநபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை பொழிந்துவா பெருநாளே!
நன்றி :
# ஒரு நாள் ஒரு கவிதை
# வார்ப்பு
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
ஓடி விளையாடு
ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!
கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!
யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் விண்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!
சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென அறியாதுநீ!
ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!
இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி:
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!
கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!
யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் விண்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!
சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென அறியாதுநீ!
ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!
இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி:
- முத்துக்கமலம்
- வார்ப்பு
- ஒருநாள் ஒரு கவிதை
- பூங்காவனம்
வெள்ளி, 18 ஜூன், 2010
அந்தகார நிலவு - கவிஞர் பேருவளை றபீக் மொஹிடீன்
க. பரணீதரனை பிரதம ஆசிரியராகக் கொண்டு, நடைபோட்டுவரும் 'ஜீவநதி'யின் வைகாசி - 2010 மலரில், தமிழாசிரியர், இலக்கணச்சுடர், கவிஞர் பேருவளை றபீக் மொஹிடீன் அவர்களின் அருமந்த கவிதையொன்றைக் கண்டேன். நயந்தேன்.
'அந்தகார நிலவு' எனும் தலைப்பிலான அந்தக் கவிதையை நீங்களும் நயக்கும் பொருட்டு இங்கு இற்றைப்படுத்துகின்றேன்.
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
எதையும் தாங்குவோம்!

அழுதுகொண்டே அகலமீதில் கால்பதித்தோம்
அழுகையே ஆறாக நாளும் ஓடிவருது
பழுதிலாத வார்த்தை யேதேனு மில்லை
பாந்தள்கள் சூழ நாமக்கேதுவிடியல்!
அன்புடையா ரெல்லாம் அந்தோசென்றிட
அச்சமே உடலெங்கனும் பெருநதியாக
இன்பமேது என்று எண்ணிட - என்னுள்
இதமாய் வந்தது எதையும் தாங்கென்று!
எங்கனும் வலம்வந்திட்ட இடுக்கணைநான்
எட்டியுதைத்தேன் என்னுள்நீயேனென்று
பங்கமிலை யின்று பாதைவிரிந்தது
பாரே எனில் அன்போடின்று- அகமகிழ்வு!
நச்சரிப்பும் பாராமுகமும் கெஞ்சுதலும்
நாமடங்கி யொடுங்கி னாலன்றோ!
நிச்சயமாய் எமைத்தாங்கும் நிலம்போல
நாமு மெலாம்தாங்கி மேலெழுவோமே!
பச்சோந்திக ளெங்கனும் சுற்றிநின்று
பல்லிளித்து குளிர்காய நிற்பதுகாண்
நிச்சயமாய் அழி்ந்தொழிவர் -நாமெழுவோம்
நாம்தாங்குவோம் எதையும் -ஒளிவீசும்!
கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - இலங்கை.
நன்றி : வார்ப்பு
புதன், 13 ஜனவரி, 2010
தேசியம்

நாசுக்கும் மூச்சுக்கும் ஒற்றுமைகாட்டி
நலினமாய் ஒருமையை மேலாக்கி
தாசுகளுக்கு முரிமை தான்வழங்கி
தரணியில் சோபை கொள்வதே தேசியம்!
ஒன்றை விரும்பி மற்றதை யிகழ்ந்து
ஒருவருமறியா முகமூடியொடு வாழும்
தான்தோன்றித்தன தேசியம் வீழட்டும்
தரணியில் நீதியோதும் தேசியம்வாழட்டும்!
விலங்கின மனதினை யுள்வாங்கி
விகற்பங்கள் செயும் தேசியம்வீழட்டும்
நிலையினில் தளரா நீதிமிகு தேசியம்
நிலத்தினி லுயர்ந்து மிளிரட்டும்!
நனிமிகு தேசியத்தை நேசிப்போம்நாம்
நிலத்தினில் பாகுபாட்டினை அழிப்போம்
பனியென மனங்களை ஒன்றிணைக்கும்
புனித தேசியம் பவனிவரட்டுமென்றும்!
கலைமகன் பைரூஸ்
திங்கள், 7 டிசம்பர், 2009
திருக்குறள்

ஒன்றே முக்கால் அடியாலே
ஒப்பற்றுத் திகழும் நூலிதாம்
என்றும் பெருமை தான்கொண்டு
எடுப்பாய்த் திகழும் நூலிதாம்!
இரண்டே யடிகளில் தானின்று
இதயச்சுத்தி செய்வதுவாம்
அருமை பெருமை தான்கொண்டு
அகிலத்தாரைக் கவர்ந்ததுவாம்!
பற்பல மொழிகளில் வெளியாகி
பகலவ னொளியாய்த் திகழ்வதுவாம்
நற்போதனைகள் பலஈந்து
நவில்தொறும் இனிமை பயப்பதுவாம்!
சாதிமத பேதம் அழித்தொழிக்க
சத்தியாய் நிற்பது இதுவுந்தான்
ஓதிடுவோம் நாம் என்றென்றும்
ஒப்பிலா ஈரடி வெண்பாதான்!
கலைமகன் பைரூஸ்
வியாழன், 19 நவம்பர், 2009
என்னில் நீ!

அதிகாலை துயிலெழுந்து
ஆண்டவனை உள்மனதில்வைத்து
இங்கிதமாய உன்நினைவுகளொடு
ஈங்கு நான் உயிர்மூச்சுவிடுவதெலாம்
உந்தன் அன்பு என்றும்கிடைத்திடவேண்டி...!
ஊடல்கொள்வாய் சிலபோது என்னில்
என்றாலும் நிலவாய் நீயேதொடர்கிறாய்...
ஏற்றம் உனில்என்பேன் நான் – இதனை
ஐயமின்றி உரத்துரைப்பேன் நான்
ஒளிவடிவானதென்னில் உன்வதனமடி
ஓய்வின்றி உனையே எண்ணுதுள்ளம்!
ஔவியம் நீக்கி வாழ்வோம் நாமே!
காரணமின்றியே கோபம்கொள்வாய்
சடுதியாய் எனில்வீழ்ந்து இன்பந்தருவாய்
தப்பேசெய்யாமல் நீ தப்பென்பேன் சிலபோது
பல்லிளித்து சொல்லாடுவாய் நீயென்னில்!
ஞாலமே உன் அன்பிலடி பெண்ணே
நானிலமே எமில் காணவேண்டும் ஆதர்சம்
முத்தான சத்தும்சொத்தும் நீயேகண்ணே!
யாண்டும் எமில்வேண்டும் அன்பு - அடீ
வட்டமிடவேண்டும் என்றும் நீயெனையேதினம்!
ஆற்றல்மிக்கது உந்தன் கண்ணீர் துணையே
ஈட்டியாய் தைத்திடத்தெரியும் சிலபோதுனக்கு
ஊடல் கூடலில் அன்பைத் தருதேவுயிரே
ஏனோ நானேயறியாது ஊடலுனக்கு?
ஐயம்நீக்கு நானேயுந்தன் சீவன்!
ஓந்திநானல்லன் ஒட்டிவாழ்வோம் நாமே!
ஆசைகள் சில பாய்ந்துவரும்போது
ஈரைந்தடி நகர்ந்திடுவாய் நீயே
ஊடல்கொள்வேன் ஒட்டிடுவாய்நீ
ஏற்றம்மிக்க என்கண்ணகிநீயே
ஐயமின்றி புகழ்ந்துரைத்தேன் உனை
ஓயாமல் உனைத்தொடரும் நிழல் நானே!
- கலைமகன் பைரூஸ்
நன்றி: ஒருநாள் ஒருகவிதை சனிக்கிழமை,14 நவம்பர் 2009
புதன், 28 அக்டோபர், 2009
கொஞ்சமேனும் வேண்டாமோ?

மண்ணெய்யாலும்
மசகினாலும்
வயிறு வளர்க்கும் நாடுகளே...
உலகமயமாக்கப்பெயரோடு
கலாச்சாரத்தை
பூண்டோடு அழிக்கும்
மேற்கத்தேயமே...!
உங்களிடம் நாம் பணிபுரிவதை
நீங்கள் தப்பாகக் கணக்கிடுகிறீர்கள்
பொதிசுமக்கும் மாடுகளாய்
கைப்பொம்மைகளாய்
உங்களுக்கு நாங்களா?
நீங்கள் தங்க்க்கிண்ணங்களில்
உடல்மினுக்கும் பெண்களை
சுவைத்துக்கொண்டு
அருந்துவதெல்லாம்
எங்கள் உதிரமும் வியர்வையும்
மாடாகப் படுத்துகிறீர்கள்
திரும்பிக்குத்தவும்
எங்களுக்குத்தெரியும்
உங்கள் நாட்டில்
வயிறுகழுவ வந்துவிட்டோம்.
உங்கள்மீது கோபமில்லை
என்கோபமெல்லாம்
இறையாண்மையை அழித்து
மேலாண்மையை வகுத்து
சொல்லாண்மையை
தட்டிப்பறித்த
உன் ஈசலின்மீதுதான்....
ஒருவருடத்துக்குள்
ஓரிலட்சம் ஆண்டுகளின்
வேலை வாங்குகிறீர்கள்!
இன்ஸான்...
கூடிக்கூடிப்போனால்
அறுபதோ அன்றேல்
எழுபதோதான் அநுபவிப்பான்...
நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா... மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு ஒருநாள் வதைசெயும்!
தம்பட்டம் அடிக்காதீர்கள்
உரத்துப் பேசாதீர்கள்!
கருவிலிருந்து
வெளியேவிட்டவனைப் பயப்படுகிறோம்...
மாடுபடாத பாடுபடுகிறோம்
கோடான கோடிபெறுகிறீர்கள்
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்குதெரியப்போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு
உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை
அவனே மாபெரியோன்....!
ஓரிரு ரியால்களை
ஓரிலட்சம் டாலர்களாய்
பார்க்கிறீர்கள்.....
ஓரிரு டாலர்களைவைத்து
ஆன்மாவை மறக்கிறீர்கள்....
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள் எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம் வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு வையுங்கள்!
ஓரிருநாட்களேனும்
எங்களையும் வாழவிடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச்சாப்பிட
உயிர்கள் காத்துக்கிடக்கின்றன.
உயிரோடு ஒட்டிப்பிறக்காததை
உங்கள் காசாலேயாவது
பெறமுயலுங்கள்
எங்கள்வலி புரியும்
உங்கள் வழிதெரியும்!
கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி :
# முத்துக்கமலம்,
# வார்ப்பு
# ஒருநாள் ஒருகவிதை
# பூங்காவனம்
வெள்ளி, 23 அக்டோபர், 2009
கைகோத்திடுக!

கைகோத்திடுக!
இனிய கூண்டுக்குள் நாமி ருந்தோம்
அநீதியால் மடிந் தழிந்தோம்
இனிய கதைகள் சொல்லி மகிழ்ந்தோம்
சனியன் வந்திட மிடியானோம்!
சங்கமித்த தமிழனின்று தடைக ளொடு
ஏங்குகின்றான் ஏது செய்ய?
ஈழம் பெற்றிட பட்டகஷ்டம் போதாதா?
நாளங்கள் ரத்தம் இழந்தவே!
நங்கூரமின்றி நடுக்கடலில் நிற்கிறோமே
நானிலமே வாய் புதைத்த்தே!
பாழாய் போனதே வாழ் வெங்கனும்
பண்பட்ட தமிழனின்று அகதியே!
இனியும் தமிழன் இம்சை நீங்கிட
மனிதம் பூத்திடும் நாளினிது
மங்கள மெங்கனும் நீண்டு தளைத்திட
சிங்களமும் தமிழும் கைகோத்திடுக
சிதறிய உளத்தின் நோவினை மறந்திட
குதறிய வெறிகள் அழிந்திடுக!
வசந்தம் பூக்குதுதா மெங்கனும் செவிவழி
நிசமாயின் நமக்கெலா மானந்தம்
வாழ்வினி லிழந்தவை மீளப் பெற்றேநாம்
தாழ்வின்றி தமிழினை ஏத்துவம்
தரணியி லுயர்ந்தது தமிழெனவே நாம்
ஈரமிலா தார்க்கு உணர்த்துவம்!
பட்ட துன்பங்கள் போதுமையா நாம்
சுட்டவடு ஆறவிலை இன்னும்
பதுங்கிய நாம் மீள எழுந்திடுவோம்
ஒதுங்குவதா யொதுங்கி யெழுவம்
ஓதுவம் நாமெலா ஓரின மென்றின்று
ஒப்புயர்வு ஒண்ணிலாதே வரும்!
கலைமகன் பைரூஸ்
இலங்கை
நம்பிக்கை வை!

வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்
திமிர்பிடித்த
ஏறுகள் உன்மேலேறி
உனை மிதிக்க வரும்...
எடுப்பார் கைப்பிள்ளையாய்கொண்டு
மேலே தூக்கி கீழேபோடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்...
உன் திறமைகளை எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கைவை!
உன்னை நம்பு
உனக்குள் ஆயிரமாயிரம்
வேர்கள் முளைகொள்வதைத்தெளி!
நானோ நன்குபட்டவன்....
சமூகம் – சகபாடிகள்
நாடு -பெரியவர்கள் என்போர்
பேச்சளவில் உயரப்பேசுவர்
பூச்சியம்.... எல்லாம் பூச்சியம்...
உன்கையெழுத்தை கண்டு
உன் தலையெழுத்தைச்சொலும்
சூன்யங்களும் உண்டு!
சுரமில்லா கீதங்கள்கொண்டு
உனையேற்றிப் புகழ்வர்
ஈரமில்லா நெஞ்சுடையாரின்
ஈசல் வார்த்தைகளுக்குள்
உனை இழக்காதே!
வறுமை உன்னோடு ஒட்டிப்பிறந்த்து
அதற்காக
எருமைகள் குட்டையைக் குழப்புவதை
ஏரெடுத்தும் பாராதே!
உன்னில் நீ நம்பிக்கைவை
நம்பி நீ எதிலும்கைவை
வாழ்க்கையில் சறுக்காதவர்கள்
எவர் உளர்? புன்னகை
உன்னில் புன்னகை மலரும்
உன்னில் நம்பிக்கைவை
வாழ்வில் சறுக்கல்களுக்கு
துவண்டுவிடாதே!
உனை நம்பி கிழக்கில்
ஒளிக்கீற்றுக்கள் வருவதைப் பார்!
பார் ஒருநாள் உனை ஏத்தும்!
கலைமகன் பைரூஸ்
இலங்கை.
நன்றி
தினகரன் வாரமஞ்சரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)







