It கலைமகன் கவிதைகள்

வியாழன், 4 ஜனவரி, 2024

நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!


தித்திக்கும் தீந்தமிழ்க்கா வியம்தந்தே நின்றாரே

தெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே

புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே

பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!


நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்

நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்

திங்கள், 6 நவம்பர், 2023

எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்

    என் எழுத்துகளுக்கு அச்சாணியாய் அமைந்தது 'தினகரன்' என்று சொல்லிக் கொள்வதில் முதலில் நான் பெருமிதமடைகின்றேன். எனது ஆரம்ப எழுத்துக்கள் தினகரன் சிறுவர் உலகத்திலேயே (ஆனந்தி அக்காவின் தயாரிப்பில்)  1985 களில் முகிழ்த்தது. 

மறந்திட அருள்தருவாய்!


எலோரும் ஏத்திடத் தானென் னாசானும்

ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்

அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்

ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது! 

வெள்ளி, 6 அக்டோபர், 2023

கலைச்சுடரே வாழ்க! - 'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ்


வாரிஸலி மௌலானா வெனும்பெயர் கொண்டு

எம்மனத்தில்  ஆழப்பதிந்து இருப்பாய்க் கொண்டு

சீரியராய் சிந்திக்க இனியராய் இருப்பதற்றான்

சீர்கவிதை எழுதித்தான் புகழ்கின்றேன் இந்நூல்கண்

பேரிலுள  மௌலானா  வெனும்பதந்தான் உயர்விங்கு

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

அப்ரா அஸ்ஹரின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா


வெலிகம - மதுராப்புர, இளம் கவிஞர் அப்ரா அஸ்ஹர் அவர்களின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா எதிர்வரும் 2023.08.30ம் திகதி, மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

அஸ்ஸபா மகா வித்தியாலய அதிபர் திரு. எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும், வெலிகம பிரதேச சபையின் முன்னாள்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நஜ்முல் ஹுஸைனின் 'வேராகா வேர்கள்' வௌியீட்டு விழா

ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் என். நஜ்முல் ஹுசைன் எழுதிய 'வேறாகா வேர்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, அல் ஹிதாயா கல்லூரியின் எம்.சீ. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறும். 

இந்த நிகழ்வுக்கு மன்றத் தலைவர் கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையேற்கவுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

வெள்ளி, 21 ஜூலை, 2023

வீண் சாதிகள் ஓதிடும் பூதங்களே! - பஸ்ரியா மன்ஸில், தெல்தோட்டை


பாரத நாடென்னும் போதினிலே -தேள்

வேருடன் கொட்டுது காதினிலே
நீதிகள் மீறிடும் சூதினிலே இனி
நாறிடும் பாரதம் தோதினிலே
விண்மதி ஆயிரம் அனுப்பியென்ன -அங்கே

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

அது! - கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்


பச்சைத் தசை புசிக்கும்
இரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்தைப்போல்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
அது

உனது ஒரு சொல்லில் -
எழுத்தாக
குரலாக
வெளிவரும் ஒரு சொல்லில்
நீ சறுகும் வரை
அவதானித்துக் கொண்டேயிருக்கிறது
அது

வியாழன், 30 மார்ச், 2023

ஓர் ஆன்மாவின் கதறல் 2 - பேருவளை றபீக் மொஹிடீன்

 


                        (2)

எனதான வாழ்வின் வலி

 இன்னும் என் உயிரோடு

 உரசிக்கொண்டுதான் இருக்கிறது...

வாழ்தல்  கடினமானது...

 சிரிக்க மறந்த பொழுதுகளில்தான் 

உணர முடிகின்றது...

சனி, 25 மார்ச், 2023

வெற்றிடம் ! - பஸீனா


 வெற்றிடம் 

ஒன்றிருக்கிறது


ஒன்றுமேயில்லாததால்

எதை வேண்டுமானாலும்

வைத்துக்கொள்ளலாம் வெற்றிடம்

திங்கள், 26 டிசம்பர், 2022

போதையைத் துடைத்தெறிவோம்!

வலிமை பெற்றோம் நாமே என்று

வன்மம் பேசுகிறான் - வலியோ டின்று

நலிந்தே நிலத்தில் உருவே மாறி

நிலமே நகைக்க நாணிக் குனிகின்றான்

 

வியாழன், 10 நவம்பர், 2022

மரபினைப் படி!



 -------------------

மரபினைப் படியழ காய்ப்படி தமிழ்க்கவி

மாண்புற வேபடி !மாத்தமிழ் மகிழ்கொள

சிரமதில் கொளப்படி சிகரம துதொடவே

சிலையது எழுத்தென நின்றிடப் படிநீ

செவ்வாய், 1 நவம்பர், 2022

கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன்

 

எனக்குள் தொலைந்துபோன

 என் நிம்மதியைத் 

தேடியலைகிறேன்.....


காலமும் கழிகிறது

மரண வலியோடு....

வாழ்வோ தொடர்கிறது....

சனி, 17 செப்டம்பர், 2022

ஆதங்கம்! - கலைமகன் பைரூஸ்


தென்னகத்து - மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஆய்வு செய்யுங்கால், வெலிகம - மதுராப்புர (மதுராகொட) த.சா. அப்துல் லதீப் அவர்களை மறந்து ஆய்வினை எழுதவியலாது.

1940 களுக்கு முன்னர் மதம் சார் இலக்கிய முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் வௌிவந்த இலக்கியங்கள் பெரும்பாலும் ஆலிம்களாலும் (மார்க்க அறிஞர்கள்) மதத்தைக் கற்றுத் தேர்ந்தோராலுமே ஆக்கப்பட்டன. இந்தவகையில் 1936 களிலேயே 'தமிழிற்சூரியன்' என்று யாழ் மக்களால் பாராட்டிப் போற்றப்பட்ட தம்பி சாஹிப் அப்துல் லதீப் அவர்கள் 'இரட்சகத்தூதர் முஹம்மது நபி (ஸல்)'

செவ்வாய், 22 மார்ச், 2022

ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலய பாடசாலைப் பண்

 


பேரிறையே புகழனைத்தும் உனக்கே!

நாளுக்கு நாள் மின்னிப் பிரகாசிக்கும், 67 ஆண்டுகளைக் கடந்த ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலைப் பண்ணை எழுதக்கிடைத்தமை பெரும் பேறே...

-------------------------------------------------------

அல்-மாஸ் பாடசாலைப் பண்

-------------------------------------------------------

 விண்ணையும் மண்ணையும் படைத்தாள்பவனே

விடிவினை அகமதில் தந்தருள்பவனே

கல்பினில்  உனையே வைத்தோம்

கருணை  மழையே  பொழிவாய்! //