திங்கள், 28 ஏப்ரல், 2025
சனி, 26 ஏப்ரல், 2025
ஐந்த ஐந்து நாட்கள்! - சிக்கன் குன்யாவா? டெங்குக் காய்ச்சலா?
கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார்.
குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.
ஞாயிறு, 30 மார்ச், 2025
தாயின் அன்பிலும் உயர்ந்தவனே, காத்திடு நீயே
நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...
எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...
அவர்களின் படங்கள்
செவ்வாய், 4 மார்ச், 2025
எதுவுண்டு சொல்?
நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....
--------------------------------------------------
தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
நான் நாமாவோம் இக்கணமே - கலைமகன் பைரூஸ்
நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே
நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது
வழியாக்கும்
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
பெப்ரவரி 14 | February 14
அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
ஆழப்பணிசெய்த அதிபரெங்கள் ஹிப்ளர்
அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே
காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார் கேளீர்
அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே
திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்
திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்
இட்டமாய் இன்பணி தான்செய் தாரே
இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்