It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 26 ஜனவரி, 2026

நதியென உதவு | மெய்யன் நடராஜ்

இன்று, மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியதாகவே உள்ளது. மரபுக் கவிதை எனும் பெயரில் அவர்களில் பெரும்பாலானோர் எழுதுகின்ற பாடல்களின் யாப்பு இருக்கின்றதா?எனக் கேட்டால் .... விடையாக வருவது இல்லை என்பதே. 

இலங்கை எழுத்தாளர்களில் மரபின்பால் ஈர்ப்புக் கொண்டு,காப்பியங்கள் படைத்தவர்களும் இல்லாமலில்லை. எனதாசான் 'காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் பல காப்பியங்களை தமிழ்கூரும் நல்லுலகிற்குத் தந்து, தனக்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளார். 

சீரிய மரபின் பல்வேறு பாவமைப்புக்களில் கவிதை பாடுவோரில் ஒருசிலரின் கவிதைகள் என்னுள்ளத்தை தினமும் ஈர்க்கின்றன. 

சனி, 24 ஜனவரி, 2026

கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்

கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்

கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.

🏆 விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

1993 தினகரில் என்னைப் பற்றி | கலைமகன் பைரூஸ்

 1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார். 

கட்டுரையில் இருந்த தகவல் - 

கலையுலகிற்கு ஒரு கலை
------------------------------------------
பொன்னீழத்தின் தென்னிலங்கையில் ஒரு நகரமாய் விளங்கும் வெலிகாமம் நகரத்தின் மேற்கே அமைந்துள்ள மதுராப்புர என்னும் கிராமந்தான் இந்தக் கலையின் பிறந்தகம்.

திங்கள், 22 டிசம்பர், 2025

எதேச்சைச் சந்திப்பு... கலை மனங்களுடன் ஒன்றிப்பு - கலைமகன் பைரூஸ்

ගාලු දිසා චිත්ර කලා සංසදයේ ශිල්පීන් සමග දවසක්...

இன்று (21/12/2025) காலிக்குச் சென்றபோது, எதேச்சையாக பொதுப் பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த ஒரு ART EXHIBITION சுவரொட்டி கண்களுக்குள் குத்தி நின்றது.
ගාලු දිසා චිත්ර කලා සංසදය ඉදිරිපත් කිරීමක්
ගාලු සිත්තම් 2025
දෙසැම්බර් 19, 20, 21
උදේ 9.00 – රාත්රී 7.00
ගාලු ක්රීඩා මණ්ඩප ශාලාවේදී...

என்றிருந்தது சுவரொட்டியில்.

இன்று கண்காட்சியின் கடைசிநாள் என்பதை அறிந்தவுடன்; நுழைவு இலவசம் என்றிருந்ததும் போன விடயம் ஒன்றாக இருக்க, அதைச் சற்றுத் தள்ளிவிட்டு விளையாட்டுத் திடலிற்குள் நுழைந்தேன்.
மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர், வௌியே இருவர் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார்கள். இருவரும் ஓவியர்கள். அவர்களில் ஒருவர் – சித்திரக் கலையில் பழம் சாப்பிட்டு விதை போட்டவர்.
அதே வெளிப்பகுதியில், காலி ரிச்மண்ட் (Richmond College) கல்லூரியைச் சேர்ந்த 10 (2026) தர மாணாக்கன் (KOWSHIKA) ஒருவனும் அழகிய ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தான்.

👉 எதிர்காலம் நம்பிக்கை தரும் காட்சி.

அந்த மூத்த ஓவியர் மிகவும் சாந்தமானவர், கலை மணம் வீசுபவர். என்னோடு அன்புடன் உரையாடினார். சித்திரக் கலைக்குள் எத்தனை ஆண்டுகள் அவரது தனித்தன்மை என்று பல விடயங்கள் பேசினோம்.
பின்னர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே…
சிங்கள ஓவியர்களினதும், சிற்பிகளினதும் ஆக்கங்கள் தனித்தனி அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

👁️ கண்களைக் கவரும் ஓவியங்கள்… ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர் என்பதைக்
காட்டும் ஆக்கங்கள் அவை.

சிங்கள பண்பாடு, கலாசாரம் ஒவ்வொரு ஓவியத்திலும் துள்ளியமாய் தெரிந்தன.
சில ஓவியங்களில் பிகாசோ சாயலும் காணப்பட்டன. பல ஓவியர்கள் மனமுவந்து என்னிடம் வந்து, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்கள்.



அங்கிருந்த பல ஓவியங்களில் ஒருசில ஓவியங்களை மட்டுமே என்னால் காணொளியாகப் பதிவு செய்ய முடிந்தது.

அந்த இடத்தில்,

“சித்திரமும் கைப்பழக்கம் – செந்தமிழும் நாப்பழக்கம்”
என்ற சான்றோர் மொழியின் அழகை உணர முடிந்தது.

🖌️ இந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் / சிற்பங்கள் இவர்களுடையன
(அவர்கள் வழங்கிய துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில்):

  • ANURADHA MUTHUMALA අනුරාධා මුතුමාලා
  • MALAN PREETHIRAJ මාලන් ප්රීතිරාජ්
  • KULANWANSHA කුලවංශ
  • DHANUSHKA DE ALWIS ධනුෂ්ක ද අල්විස්
  • SUNETHRA DE SILVA සුනේත්රා ද සිල්වා
  • DHAMMANI NAKANDALAGE ධම්මනි නාකන්දලාගේ
  • PALITHA JAYASEKARA පාලිත ජයසේකර
  • JAYAWEERA ජයවීර
  • ANURA SHRINATH අනුර ශ්රීනාත්
  • RUWAN MAHINDAPALA රුවන් මහින්දපාල
  • WASANTHA SANATH වසන්ත සනත්
  • HARSHA SAMARASINGHE හර්ෂ සමරසිංහ
  • SANATH DHARMABANDU සනත් ධර්මබන්දු
  • THISHANA RAJANAYAKA තිෂාන රාජනායක
  • MANGALA MADANAYAKA මංගල මදනායක
  • NIYUMI SISARANGIKA නියුමි සිසරංගිකා
  • K.A. SUNIL SHANTHA සුනිල් ශාන්ත
  • HARSHA DAMIAN හර්ෂ ධමියන්
  • DESHAN RAJEEWA SAMARASIRI දේශාන් රජීව සමරසිරි
  • K.D. KAMALPRIYA කමල්ප්රියා
(இன்று இறுதிநாள் என்பதால், சிலர் தங்களின் ஓவியங்களை ஏற்கனவே எடுத்துச் சென்றிருக்கக் கூடும்.)

📹 இந்தக் கண்காட்சியில் எடுத்த காணொளிகள் அடுத்தடுத்த நாட்களில் Reel-ஆக பகிரப்படும்…

🎨 கலைக்கு மொழி இல்லை… அது மனங்களை இணைக்கும் ஒரு பொதுமொழி.

– தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்

இது பாடசாலையை விமர்சிப்பதற்கு அல்ல... சனித்மா சினாலியைச் சொல்வதற்காக....

இது பாடசாலையை விமர்சிப்பதற்கு அல்ல... மாணவியின் திறமையை வௌிக்கொணர்வதற்காகவே...

தனக்கான உரிமை மீறப்பட்டபோது, கிளர்ந்தெழுந்து எல்லோர் முன்னிலையிலும் தனது ஆற்றல்கள் பற்றி எடுத்துரைத்து, இன்று சமூக வலைத்தளங்களில் முதன்மைச் செய்திகளுக்குக் காரணமாக அமைந்த ஶ்ரீமாவோ மாணவி சனித்மா சினாலியின் ஆற்றல்கள் பற்றிப் பாருங்கள்..

விழாக்கள் நடாத்தும்போது, யாருடைய மனமும் புண்படாத வகையில், நியாயமும் மரியாதையும் காக்கும் முறையில்

வியாழன், 18 டிசம்பர், 2025

மனஅழுத்தம் கடக்கும் 10 வழிகள் – கலைமகன்.பைரூஸ்

உலகம் வேகத்தில் ஓடுகிறது. மனஅழுத்தம் இன்று மாணவர்களையும், பெரியவர்களையும் போலவே சுற்றிக் கொள்கிறது.

ஆனால் சிறிய, சிந்தனைபூர்வமான மாற்றங்கள் மனதை நிறைவானதாக மாற்றும்.

நான் பல நூல்கள், கட்டுரைகள் மற்றும் இணையத் தளங்களில் படித்தவற்றிலிருந்து சாரத்தை பிழிந்து தொகுத்து இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

புதன், 10 டிசம்பர், 2025

அல்ஹாஜ் ரமீஸ் மௌலவி அவர்களின் நெகிழ்ச்சிமிகு வாழ்வு!

இன்று (10/12/2025) எனது மகன் முஹம்மத் ஹாலித் , முகநூலில் எழுதிய மௌலவி முஹம்மத் ரமீஸ் (கபூரி, மதனி) அவர்கள் பற்றிய கட்டுரையின் ஆழ - அகலம் கருதி எனது வலைப்பூவில் அதனை இற்றைப்படுத்துகிறேன். 

நான் எழுத நினைத்ததை விடவும் மிகவும் சிறப்பாக அவரது கட்டுரை அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்ததைக் கோடிட்டுக் காட்டுவதோடு, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ இரக்குமாறு அனைவரையும்

செவ்வாய், 2 டிசம்பர், 2025

தனித்துத் தவிக்கும் தெல்தோட்டை!

 

தனித்து தவிக்கும் தெல்தோட்டை!

ஒரு தனித் தீவாய் மாறி நிற்கும் இந்த வூர் இன்னுமொரு அத்திப்பட்டியாக மாறிவிடுமோ?

(அவலத்தை புரிந்துகொள்ள பொறுமையாகவும் முழுமையாகவும் வாசியுங்கள்)

✍🏼 எஸ்.என்.எம்.சுஹைல்

மத்திய மலைநாட்டின் மிக உயரமான மலைகளைத் தன்னகத்தே கொண்ட அழகிய பிரதேசம் தெல்தோட்டை. கண்டி நகரில் இருந்து வெறும் 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இவ்வூரின் அழகும் அமைதியும் இயற்கையின் சீற்றத்தால் சிதைந்துவிட்டன. கடந்த வியாழக்கிழமை (27.11.2025) முதல், இந்தப் பகுதி அனைத்துவிதமான வெளிப்புறத் தொடர்புகளையும் முற்றாக இழந்துவிட்டது. இன்று தெல்தோட்டை ஒரு தனித் தீவுபோல் நிற்கிறது!

⚠️ முற்றாகத் தடைபட்ட வீதிப் போக்குவரத்து

கண்டி மற்றும் பிற நகரங்களுக்கான அத்தனை பிரதான சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் தெல்தோட்டையைச் சென்றடைவது என்பது சாத்தியமற்றதாகியுள்ளது.

செவ்வாய், 18 நவம்பர், 2025

இன்றைய மாணவர்கள் ஏன் அதிகமாக ஸ்டிரெஸ் அனுபவிக்கிறார்கள்?


இன்றைய மாணவர்கள் ஏன் அதிகமாக ஸ்டிரெஸ் அனுபவிக்கிறார்கள்? – ஒரு ஆழமான ஆய்வு

இன்றைய உலகம் “டெக்னாலஜி முன்னேற்றம்”, “கல்விப் போட்டி”, “வேலைவாய்ப்பு அச்சம்” போன்ற பன்முக அழுத்தங்களால் நிறைந்துள்ளது. இந்த மாற்றங்களின் மையத்தில் நிற்கிறார்கள் நமது மாணவர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் (Stress) கடந்த ஒரு தசாப்தத்தில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக உலகளாவிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

UNICEF (2023) மனநல அறிக்கை

திங்கள், 15 செப்டம்பர், 2025

சிகை அலங்காரம் தேவையா சொல்? | கலைமகன் பைரூஸ்

எத்தனை எத்தனை சிகை அலங்காரம்!

குரங்கு கட், பாம்புக் கட், குடு கட் –

புதுமை பெயரால் பழியைக் கொண்டாடி,

படிப்பு மறந்தால் பயனென்ன சொல்?


முடி தான் மாணவன் மேன்மையின்முத்திரையா?

முடிச்சியால் அறிவு வளருமா?

சிந்தனை சீர் பெற கல்வி தான் தேவை,

சிகை அல்ல, சீரிய செயல் தான் பெருமை.

புதன், 10 செப்டம்பர், 2025

நீலிக்கண்ணீர் வடிக்கிறது - கவிதை

 நீலிக்கண்ணீர் வடிக்கிறது

ஓநாய்!
முஸ்லிம்களின்
தகனத்தைப் பேசி
தனது எண்ணங்களை
நிறைவேற்றிக்கொள்ள...
மீண்டுமாய்
முஸ்லிம்களைக்
கருவறுக்க...

ஏ! மானங்கெட்ட வெள்ளை முகத்தாளே!

ஆங் சாங் சூச்சி...
சீச்சீ... சீச்சீ...
உன் பேரைச் சொல்ல
எனக்குள் நாக்கூசுகிறது...

சித்தார்த்தரின் சீரிய
வார்த்தைகளை
நீ அறியாதவளள்ளள்...
பஞ்சமா பாதகங்களில்
கொலையும் மாபாவம்
என்பது தெரியாதவளள்ளள்..

நாளைய நாள்
நீ பர்மாவில்
ஆட்சியமைக்க
இன்று

புதன், 3 செப்டம்பர், 2025

ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்

ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்

ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒளிவிளக்காகக் கருதப்பட்டார். “ஆசிரியர் என்பது அச்சாணி” என்று தமிழ் இலக்கியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த அச்சாணி இல்லாமல் ஏதொரு வண்டியும் நகராது. அதுபோல ஆசிரியர் இல்லாமல் ஒரு சமுதாயமும் முன்னேறாது. ஆனால் இன்று சில இடங்களில் ஆசிரியர்களின் நடத்தை, பண்பாடு, ஆளுமை, பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டிய நம்பிக்கையை அழிக்கும் படியாகக் காணப்படுகிறது என்பதே வேதனை.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

காஸா குழந்தைகள் | கலைமகன் பைரூஸ்

காஸா குழந்தைகள் 

அப்பா என்ற ஒளி அணைந்திட,
அம்மா என்ற கண் நீரால் மூழ்கிட,
உணவின் வாசமின்றி உழலும்
உயிர்கள் – குழந்தை முகங்கள்!

சூரியன் காய்ந்தாலும் சிரிக்கவில்லை,
சந்திரன் வந்தாலும் மினுக்கவில்லை,
பொம்மை என்பதாய் கல்லைக் கொட்டி,
பசி என்பதைக் காற்றில் மறைத்துக் கொண்டது.

சனி, 30 ஆகஸ்ட், 2025

மருந்தகத்தின் கண்ணீர் விலை - கலைமகன் பைரூஸ்

 மருந்தகத்தின் கண்ணீர் விலை

மருத்துவம் என்றாலே நம்பிக்கை எனும் நதி,
மருந்தகம் என்றாலே உயிர்க்கு ஒளி தரும் சுடர்...
ஆனால் இன்று –
அந்த நதி வணிகம் ஆனது,
அந்த சுடர் பணம் கவரும் பிசாசானது.

சின்ன காய்ச்சலுக்கும் –

மருத்துவமனைகளில் கூட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்... Agency கள் பற்றி கவனமாக இருங்கள்...

மருத்துவமனைகளில் கூட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்...

மருத்துவம் என்ற சொல் கேட்டாலே நம் மனதில் எழுவது – நம்பிக்கை, உயிர் காக்கும் பண்பு, சிகிச்சை, அரவணைப்பு. மருத்துவமனைகள் என்றாலே – நோயுற்றவர்கள் மீண்டும் வாழ்வை மீட்டெடுக்கும் புனிதத்தலம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால் இன்றைய நிதர்சனம் வேறுபட்டுள்ளது. மருத்துவமனைகளில்கூட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மையைச் சொல்லும்போது திகைக்க வைக்கும் செய்தியாக இருந்தாலும், அனுபவமுள்ளவர்கள் அனைவரும் இதன் تلுக்கினை அறிந்தவர்களே.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு

✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.

மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...

வியாழன், 31 ஜூலை, 2025

நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்

நானிருப்பேன் அன்றும்!

இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...

புதன், 23 ஜூலை, 2025

மழையின் வெந்தடம் – ஹைக்கூ

மழையின் வெந்தடம் – ஹைக்கூ மற்றும் விளக்கம்

சோவெனப் பெய்கிறது மழை
மாடாய் மடிகிறான்
நெற்றியில் சுடுநீர்

கலைமகன் பைரூஸ்

விளக்கம்:

மழை என்பது இயற்கையின் புனித அருள்பொழிவாகத் தோன்றினாலும், இந்த ஹைக்கூவில் அது சற்றே வேறுபட்ட உணர்வோடு வருகிறது.

சனி, 12 ஜூலை, 2025

📜 கலைமகன் கவிதைகள் –புதுமெருகுடன் நாள் 1

1. வாடும் முகங்கள்

வாடும் முகங்கள் தெருவோரம்,
வெறும் கைகளால் வாழ்வுரோகம்;
கண்ணீர் தொட்ட பூமியில்,
கருணையின்றிப் போகலாமா?

விருந்தாக விழும் விழாக்கள்,
விளக்கிழந்த குடிசைகளில் கிடையாது.
வாய்க்கு மட்டுமே உணவு அல்ல,
மனமோடும் பகிர்ந்தல் உணவுதான்.