It It கலைமகன் ஆக்கங்கள்: Poet Kalaimahan Fairooz Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
Poet Kalaimahan Fairooz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Poet Kalaimahan Fairooz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 மே, 2015

​மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்


சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி

சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...

முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!

சனி, 28 செப்டம்பர், 2013

என்னை அழவிடு நீ!

வேண்டாம் இதயத்தைக் கனக்கச் செய்ய
நீ உன் பாட்டில் இரு!
தனிமையில் துன்பந்தாங்க
என்னால் இயலும்....

விழிகளில் கண்ணீர் வழிந்தோட
என்னை அழ விடு...
அந்தக் கண்ணீரை துடைக்க
வேண்டவே வேண்டாம்
உன்பாட்டில் நீ இரு...

தீ மூட்டிய இதயத்தை
நிம்மதியாக்க
என்னை நானே வறுத்திக் கொள்ள
ஏதேனும் எனக்குச் சொல்....

கண்ணீர் முத்துக்களை ஒன்றிணைக்க

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

பொய்ம்முகந் தரித்து பூதலத்து இன்னார்
பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
செய்வரே தீங்கு ஒண்ணாதார் இன்னாரே!

புதன், 17 ஏப்ரல், 2013

கண்ணீர் துடைப்பார் ஆருளரோ?


உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

திங்கள், 15 ஏப்ரல், 2013

எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்



தன் பிரபல்யத்துக்காய்
மனிதம் விற்கப்படுகிறது....
தன் மகிழ்ச்சிக்காய்
பிறர் அழுகுரல்
வீணையென இரசிக்கப்படுகிறது...

பிணந்தின்னிக் கழுகளும்
ஊளையிடும் நரிகளும்
நிறைந்த சாக்காட்டில்
புதுமையைக் காண்பதற்காய்
‘செல்’கையில்