It It கலைமகன் ஆக்கங்கள்: Kalaimahan Fairooz Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
Kalaimahan Fairooz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kalaimahan Fairooz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஏப்ரல், 2026

🌿 “போர் நடுவே மனிதம்” 🌿 | கலைமகன் பைரூஸ்

 

🌿போர் நடுவே மனிதம்” 🌿

வானில் வந்தான் தீயின் தூதனாய்,
வெடிக்கும் இரவின் நிழலாய்…
அழிக்கவே வந்தவன் என்று நினைத்தோம்,

ஆனால் இன்று -
அவன் அமைதியின் நடுவே அமர்ந்திருக்கிறான்.
கைகளில் கட்டுகள் இல்லை;
கண்களில் பயம் இல்லை;
அவன் முன் பரிமாறப்படும்

வெள்ளி, 27 மார்ச், 2026

Who is Kalaimahan Fairooz? | Tamil Writer, Translator & Educator

 

Kalaimahan Fairooz is a Sri Lankan Tamil writer, government-recognized translator, and digital content creator who actively contributes to Tamil literature and education in the digital era.

He is widely known for his blog “Thamilsh Shudar”, where he publishes insightful articles on Tamil culture, classical literature, and moral values. His writings aim to connect global Tamil audiences with the richness of their linguistic heritage.

In addition to blogging, Kalaimahan Fairooz is a YouTube creator who produces short-form videos focusing on emotional storytelling, ethical lessons, and cultural awareness. His content resonates strongly with Tamil-speaking audiences across Sri Lanka, India, and the diaspora.

As a certified translator, he specializes in Sinhala–Tamil translations, contributing to better communication and understanding between communities in Sri Lanka.

வியாழன், 19 மார்ச், 2026

AliLarijani உங்களைப் போற்றி கணைகள் எழும்!

புர்க்கான் எனும் இறைமறையை
உள்ளத்தில் பூரணமாய்ச் சேர்த்தீர்
உலகம் அறியாத கணிதச் சிந்தனை,
உளவியல் ரகசியத்தை கற்றீர்
ஈரானியர் பேரெழுத்து மறைந்தாலும்,
உங்கள் நினைவு உலகில் வாழும்!

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

பெற்ற நலன்தான் சொல்லக் கேட்பீர்! - கலைமகன் பைரூஸ்

 

என்னாசான் சிவகுருநாதன் கேசவன்

கேட்டிட்ட (மகாகவி பாரதியின்) வினாவினுக்கு

என்னகத் துதித்த வரிகள் கோத்தேன்

கருத்தினை நோக்கியே நின்றேன்.

செவ்வாய், 22 மார்ச், 2022

ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலய பாடசாலைப் பண்

 


பேரிறையே புகழனைத்தும் உனக்கே!

நாளுக்கு நாள் மின்னிப் பிரகாசிக்கும், 67 ஆண்டுகளைக் கடந்த ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலைப் பண்ணை எழுதக்கிடைத்தமை பெரும் பேறே...

-------------------------------------------------------

அல்-மாஸ் பாடசாலைப் பண்

-------------------------------------------------------

 விண்ணையும் மண்ணையும் படைத்தாள்பவனே

விடிவினை அகமதில் தந்தருள்பவனே

கல்பினில்  உனையே வைத்தோம்

கருணை  மழையே  பொழிவாய்! //

சனி, 22 செப்டம்பர், 2018

நல்ல திருமணம்....?



திருமண மண்டபத்தில்
இவ்வாறிருந்தது...

'படம் பிடிப்பது முற்றாகத் தடை...'

அதற்கு மேலால் சற்று
கண்களை உயர்த்திப் பார்த்தேன்..

முக்காடின்றிய
பல மாற்றுமதப் பெண்கள்
'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தார்கள்..

கீழே இறங்கி வந்தேன்...

ஒரு பிச்சைக்காரன்
திருமண மண்டபத்தையும்
வருகின்ற போகின்றனவர்களையும்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்...

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்

தடாகப் பன்னாட்டுப் படைவிழாவின் கவியரங்கிற்காக எழுதிய கவிதை. காலதாமானால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் என் தளத்தில் ஏற்றி புளகாங்கிதம் அடைகிறேன்.

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்
தெங்கு வளர்ந்தோங்கும் தென்னகத்திருந்திங்கு
தௌ்ளு தமிழில் தெவிட்டாக்கவிபாடிடயான்
மங்காப் புகழுடையோர் முன்னேநாபிறழாமல்
மாண்புறு கவிபாடிட மாபெரியோன்நீயேதுணை!

புதன், 13 செப்டம்பர், 2017

இதக் கொஞ்சம் யோசி மச்சான்! - கலைமகன் பைரூஸ்

கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
அல்லா ரஸுல மறந்து
நாடுகாட்டுக்கு நீங்க போயி
ஆயிரங்கள் பல தேடியுந்தான்
என்னதான் கிழிக்கப்போற...
கோவம் புடிக்கவாணம் மச்சான்
நான் சொல்றதக் கொஞ்சம்
நிண்ணு நீ கேளுமச்சான்...

வெள்ளி, 1 மே, 2015

​மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்


சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி

சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...

முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

குமுறல் போதும் உதவிடு!


சீன சென்றேனும் கற்றிடுக என்றநபி
சொல் வார்த்தை அமுதென்றே குமுரி
போனா ரெங்கள் பெரிய மனுஷன்தான்
பேனா வின்றி வாடிய குழந்தைபாவம்!

திங்கள், 7 அக்டோபர், 2013

THE LIFE OF THE PROPHET MUHAMMED! Khulafa-Ur-Rashideen (Poems)

நான் பணிபுரியும் வெலிகம ஸலாஹியா சர்வதேசப் பாடசாலையின் கணக்காளர் திரு. முஹம்மது முஜீப் ஆங்கிலத்தில் (இஸ்லாம் சார்ந்த) இரண்டு கவிதைகளை எழுதியிருந்தார்.

நல்ல ஆற்றொழுக்குடன் கூடிய அந்த இரண்டு கவிதைகளையும் நான் என் தளத்தில் பதிவேற்றி அவருக்கு கொலுகொம்பாக நிற்க விரும்பி, அவற்றை கேட்டேன்.

சனி, 5 அக்டோபர், 2013

பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!


தன்பதிக்கென வாழ்ந்த பதியிவள்
தன்னாசைகள் எலாம் துறந்தவள்
இன்முகத்தொடு பதியை பார்த்தவள்
இல்லானிற்காய் வாழ்வினை நீத்தவள்!

தன்னிலை துறந்த போதும்பதி
தன்னிலை துறவாத பதியிவள்
என்னிலிவன் என்றே இவள்
எண்ணிலாதன செய்தாள் நிதம்!

விதியின் மாறுதலான் சிக்குண்டு
வடிவென வந்த மங்கைபாலவன்
அதிகாதல் பூண்டு நிலையழிந்த
அதிகாரம் தெரிந்தும் மௌனித்தவள்!

திங்கள், 27 மே, 2013

வாழ்த்துரைத்தல் ஆகாதோ? பகர்வீர்

பணமுண்டு சிலரிடம் குணமுண்டு

பண்பிலை சிலரிடம் பக்குவமுண்டு


மணக்கும் மாண்பதைக்காய் அவர்


மரகதமாய்ப் பாடுவது குறையாமோ?


##########################


நல்லாரைப் போற்றுதல் குறையாமோ?

நவின்றிடும் சொல்லை பழித்தலாமோ?


வில்லெடுத்து தைப்பது போலும் பிறர்


வாழ்த்தீதும் தூற்றுதல் மடைமையே!


##########################


வார்த்தை மட்டுமாகா தென்றுநிதம்


வழிவர செய்தாரையும் தூற்றுதுநிலம்


ஒருவார்த்தையாலே பாரில் வீழச்செய


'ஒருவ'ரினால் ஆமோ மடைமையே!


##########################


செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ்



அன்பின்எழில் அழகின்எழில் அமுதின்எழில்
அகத்தினின் எழில் அரிவையின் எழில்
இன்னமுதின் எழில் இல்லறத்தின் எழில்
இங்குள இரவல் எழிலை விட விஞ்சிட்டெழில்...

படைப்பின்எழில் படைத்தவன்எழில் பாரினிலெழில்
பாவையர் பாலுளஎழில் பாவையரெனுமெழில்
விடமிலாதெழில் வாடாவெழில் வீறுடையெழில்
விண்ணின் மிளிர்ந்தெழில்தரும் நிலாப்பெண்ணே!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்திரையொன்று பிறந்திருக்கு...! -கலைமகன் பைரூஸ்



சித்திரையொன்று பிறந்திருக்கு
இத்தரையெங்கும் மலர்ந்திருக்கு
முத்திரையெனவே மகிழ்ந்திங்கு
மங்கலம் பொங்கிட நாமிணைவோம்! //

சித்திரை.....


சனி, 13 ஏப்ரல், 2013

எல்லாம் நிலையிலாதனவே! - கலைமகன் பைரூஸ்

நிலையிலா வாழ்வு பற்றிக் கற்றிட
நிலையிலா வையம் பற்றிக் கண்டிட
இலைநீரே அழகாய் வந்தனைநீ - போழ்தில்
இறங்கிவிடுவாய் என்பதறி சீராய் நீ!


திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஈழத்து மகாராணியாய் நீவருவாயே!

எல்லோரும் எள்ளும் இயலாமை யுன்னில்
ஏற்றமாய் வந்திடவே சென்றாய்நீ பாலை
எல்லோரு மின்று உனையே பேசிட
எமிலின்றி நெடுந்தூரம் சென்றா யன்றோ!
 
வாய்க்கு வெற்றிலை கெட்டாரு மின்று
வடிவாய்க் கதைக்கிறார் உன் கதையின்று

திங்கள், 10 டிசம்பர், 2012

நாங்களும் காதலிக்கிறோம்...!


நாங்கள் காதலிக்கிறோம்...
எங்கள் முத்தங்களை
எங்கள் ஸ்பரிசங்களைக்
எங்கள்
இனத்தவர்கள்
கண்டுகொள்வதில்லை
மானிடர்களைப் போல...

எங்கள் முத்தங்களைக்
கண்டு
என்னவென்னமோ கற்பனைகள் புனைந்து
பூச்சியங்கள் பலஇட்டு
காட்டுத்தீ பரப்ப
எங்களவர்கள் என்ன
வக்கிரக் கண்களைக் கொண்டவர்களா?
மானிடர்களைப் போல...

திங்கள், 3 டிசம்பர், 2012

உலகம் அழியும் நிச்சயம்!


மாயன் நாட்காட்டிக்காக
கதைகள் பம்மாத்துக் காட்டுகின்றன!
ஆயிரம் ஆயிரம்
கனவுகளைச் சுமந்த
போலிமனிதர்களும்
கூடவே
ஓராயிரம் ஆத்திகர்களும்
எல்லையில்லா
நாத்திகர்களும்
எல்லையில்லா துன்பம்சுமந்து....

என்றாலும்
பயந்து சாகும்
எந்த ஆன்மாதான்
அந்த டிசம்பர் 21க்கு முன்னர்
தம்மில் பதுக்கிவைத்துள்ள
கறுப்புப் பொருட்களை
ஒட்டிய உடலோடுள்ள
பாவப்பட்டோருக்கு
கொடுக்க முன்வருகிறது?
கேட்டுத்தான் பார்ப்போமே!

ஒட்டிய உடலுடலுள்ள
ஒருவன் இப்படிச்சொன்னால்....

2012 டிசம்பர் 21
உலகம் முடியட்டும்
சந்தோசம்....
நீங்கள்
உங்களிடமுள்ளவற்றில்
ஒரு கவளத்தை
டிசம்பர் 20 ஆம் திகதி
எங்களுக்குத் தந்துவிட்டு
அழிந்துபோங்களேன் என்று....

யார்தான் முன்வருவார்...
எல்லாரும்
போலிவேசம் தரித்த
பச்சோந்திகள்தாம்...

உலகம் நிச்சயம் முடியும்
ஆனால்
எங்கோ ஒரு கல்லில்
யாரோ ஒருவன் எழுதிய
கபட வார்த்தைகளை
மாயன் நாட்காட்டியாய்க் கண்டு
ஆருட வார்த்தையாய்கொண்டு
பயந்து நடக்கக்கூடியதல்ல அது!

நிச்சயம்
உலகம் அந்தத்தை அடையும்
வானும் புவியும்
துகள் துகளாய் மாறும்
அதற்காக
மாயன் நாட்காட்டி
சொல்வது உண்மையாகாது!

அது
படைத்தவன் ஒருவன் மட்டுமறிந்த
பரமரகசியம்....
எந்த ஒரு வல்லவனுக்கும்
எந்த நவீன புத்தியாலும்
அந்த முடிவுநாளை
எந்த நவீனத்தினாலும்
கண்டுகொள்ளவியலாது!


ஏன் நபிமார்களோ
தூதர்களோ கூட அறியமுடியாதது
அந்த இறுதிநாள்
மாயன் நாட்காட்டி
எங்கே சொல்கிறது
எப்படிச் சொல்கிறது
இறைவனை விஞ்சி!

மாயன் நாட்காட்டியில்
டிசம்பர் 22 எழுத மறந்தது
எழுதியவனின் குற்றம்
அதற்கு
ஊனின்றி உறக்கமின்றி
எலும்புகள் கட்டிக்கொள்ள
அக்கினி மூச்செரிக்கிறது
உயிரினங்கள் எல்லாம்....!

மதங்கள்
மௌனிக்கின்றனதான்!
உண்மை இதுவாகவும்
இருக்கலாம் என்று....!

நிச்சயம்
யுகமுடிவுநாள் வரும்....
ஆனால்
மாயன் நாட்காட்டி சொன்ன
டிசம்பர் 22 இல் அல்ல....
அது நாட்களில் சனி....
வருவதாயின் வரும்
வெள்ளிக்கிழமை
இது இறை சொன்னது...!

யுகமுடிவிற்காய்
நடந்ததும்
நடப்பதும் தவிர
நடக்கவிருப்பதும்
நடந்தால்தான்
விண்ணும் மண்ணும்
ஒன்றாகும்
இறுதி விசாரணைநாள் தோன்றும்!

மகளிடம் தாய் கெஞசஞவாள்
ஏழை பணக்காரனாவான்
குடிசைகள் கோபுரங்களாகும்
விபச்சாரம் மது பெருகும்
தகுதியே இல்லாதார் தகுதிபெறுவர்
பாலைவனம் சோலைவனமாதல்
காலம் குறுகிச் செல்லுதல்
கொலைகள் சர்வ சாதாரணமாதல்
நிலநடுக்கம்
பூகம்பம் மேலெழுதல்
பள்ளிவாசல்கள் சோடணைகளால்
உச்சாணியில் நிற்றல்
பாதையெங்கனும் கடைகள்
எண்ணிக்கையிலாப் பெண்கள்
நிர்வாண ஆடையில் மக்கள்
உயிரிலாத பொருட்கள் பேசுதல்
வாய்நிறையக் கத்தி பொருள்தேடல்
முகமன் கூறுவதை முகத்துதிக்காக்கல்

அவைமட்டுமா
இல்லவே இல்லை
யுகமுடிவின் சிறு அடையாளங்களாய்
இன்னுமுள...
பள்ளிவாசல்கள் பாதைகளாதல்
தற்கொலையில் ஆனந்தம் காணல்
இறைத்தூதரென பொய்யன் தோன்றல்
பழையவர்களை காப்பியடித்தல்
நடக்கிறது... சிறு அடையாளங்களாய்
நிச்சயம்
யுக முடிவுநாள் வரும்
ஆனால் மாயன் நாட்காட்டி நாளுக்கல்ல...

யூதர்களுடன் மாபெரும் யுத்தம் நடக்கும்
புனித ஆலயம் சேதப்படுத்தப்படும்
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல் காண்பர்
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி வரும்
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
எண்ணிப் பார்க்காது வாரி
வழங்க மன்னர் வருவார்

செல்வம் பெருகும்
மாபெரும் யுத்தம் மூளும்
பைத்துல் முகத்தஸ் மீளும்
மதீனா தூய்மையடைதல்

அன்றும் இன்றும் என்றும்
இவை....
நிச்சயம் யுகமுடிவு நாள்வரும்
ஆனால்
மாயன் நாட்காட்டியின்
டிசம்பர் 22 இல் இல்லவே இல்லை...

நிச்சயம்
யுக முடிவுநாள்வரும்
இவை நிகழ்ந்து முடிய
சந்தேகம் எனக்கில்லை
நான்
மாயன் நாட்காட்டிக்கு
தலைவணங்காததால்
எனது
தலைசாய்த்தல்
தலைவர் முஹம்மதைத் தந்த
தயாளன்
அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதால்!

புகை மூட்டம் 
ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால்
ஈஸா நபியின் மீள்வருகை
யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
தாப்பத்துல் அர்ழ்
மேற்கில் சூரியோதயம்
மூன்று பூகம்பங்கள்
பெரு நெருப்பு

இவை நடக்க
நிச்சயம் யுகமுடிவுநாள்
வந்தே ஆகும்...
ஆனால்...
மாயன் நாட்காட்டிக்காக அல்ல!
அல்லாஹ்வின் வாக்கிற்கொப்ப..!


நாம் வீணில் கழிக்கும்
இந்த மண்
நிச்சயம் ஒருநாள் அடியோடு அழிக்கப்படும்!
அவ்வாறு அழிக்கப்பட்ட
மீண்டும்
அவன் ஆன்மாவான்.
இறை தீர்ப்புக்காய்
ஆன்மாக்கள்
அல்லற்படும்...
அப்போது
மாயன் நாட்காட்டி
எந்த உதவியும் செய்திடாது...
மாயனை நம்பும் ஆன்மாக்கள்
ஏன்
யுகமுடிவின் பின்னரான
பயங்கர நாள்பற்றி
நினைக்க மறுக்கிறது....

தன் பிறப்புப்பற்றி
வந்ததன் காரணம் பற்றி
வாழ்வதன் காரணம் பற்றி
வாழ்வின் பின்னரான நிலைபற்றி
நிம்மதி பெருமூச்சு
விடுவது எவ்வாறோ என்பதுபற்றி
ஏன் ஆன்மாக்கள்
எண்ண மறுக்கின்றனவோ?

மாயன் நாட்காட்டி
எழுதியவனால்
22 எழுத மறந்திருக்கலாம்...
ஏன் நாம்கூட
ஆயிரங்களுக்கு
சிலபொழுது
இருபூச்சியங்கள் போடுவதில்லையா?
அதனால் கூட்டுத்தொகை
சரியாகுமா என்ன?

நிச்சயம்
உலகழியும்
டிசம்பர் 22 இல் அல்ல!
அல்லாஹ் அளந்த நாளில்
நிச்சயம்
யுகமழியும்......!


- கலைமகன் பைரூஸ்
2012/12/03 8:03

வெள்ளி, 30 நவம்பர், 2012