It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

எளியாரை வலியார் உதைப்பது தகுமோ?




எளியாரைக் காணுங்கால்
எடுப்பாய் நிற்பான்!
எடுப்பாம் சக்தியை
ஏற்றியே காட்டுவான்!
வலியவன் நானென்பான்!

இது கவிதை!

உறங்கும் உள்ளுணர்வினை
உசுப்பி, உயிர்ப்பித்து
உரம் பெற வைத்தல் கவிதை!

ஊசிமுனை உடல்
நாசித்துளை அனல்
வீசியெழும் மொழிகவிதை!

புதன், 23 ஏப்ரல், 2014

வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் ஆங்கிலத்தில்!





அன்புறவுகளே!

எனது தமிழ்க் கவிதைகள் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், மும்மொழிப் பாண்டித்தியமும் மிக்கவருமான கலாபூஷணம் எம்.வை மீஆத் அவர்களினால் வெகுவிரைவில் மொழிபெயர்க்கப்பட்டு இத்தளத்தில் பதியப்படும் என்பதை மகிழ்வோடு அறியத் தருகின்றேன்.

எனது ஆக்கங்களை மொழிபெயர்த்தருவதாகக் குறிப்பிட்ட கல்வியியலாளர் எம்.வை மீஆத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

சனி, 19 ஏப்ரல், 2014

எனது கவிதைகளில் ஷிர்க்கான விடயங்கள் உள்ள கவிதைகளை இனங்காட்டுங்கள்...!

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து (19.04.2014) இஸ்லாத்திற்கு ஆதரவான கவிதைகளையும், சமூகக் கவிதைகளையும் மட்டுமே எழுதுவேன் என உறுதியளிக்கின்றேன்.
காரணம் இன்று நான் “கவிதை விடயத்தில் கேட்ட அறிவுறுத்தல்”

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நவீன ஜடாயுவும் விபீடணனும்!



அதிகாரவர்க்கத்தின் முதுகந்தண்டில்
அமர்ந்து மிக அழகாக
அடாவடித்தனம் செய்கின்றன
இன்றைய ஜடாயுக்கள்!

பைத்தியம் எவரையா ஞானவானே!


செய்தவறு நீக்கமறச் செயவியலாது
செய்யாக் குற்றம்  பெரிதெனக்கண்டு
ஏய்கின்றார் அம்பு எடுப்பாகத்தான்
ஏற்றமிலை அவ்வம்பில் காண்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உன்னில் எனையிழந்தேன் வெண்ணிலவே!


வானக் கடலிடை வட்டமா யொரு
வண்ண முகங்காட்டி நின்றே நீ
என் மனதிடை புகுந்தனை நிலவே
என்னுள்ளக் காதலி நீயலவோ மதியே!

வெள்ளி, 28 மார்ச், 2014

கைம்மாறு இதுவோ என்பாரோ?

வரும்வரை வருவார்
வந்தபின் யார்என்பார்
நிலத்தில் கால்பதித்தபின்
நம்மவரை
விடம்கொண்ட நாகத்து
நிலையிலிருந்து
நோக்குவார்.. அப்போ
நோக்கங்கெட்டவர்
நாமே ஆவோம்....

வெள்ளி, 21 மார்ச், 2014

பிணந்தின்னும் கழுகுகள்...

பச்சையும்
நீலமும் 
சிவப்பும்
பச்சோந்தியாய்...

பிணந்தின்னும்
கழுகுகளும்
ஊளைகளுக்குப் பயந்து
நாட்டை விட்டே
புலம் பெயர்கின்றன...

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஞாயிறு மறையாது! (பாடல்)


ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது…

குழந்தை எனக்குள் ஞாயிறு
தாயு மெனக்குள் ஞாயிறு
குழந்தை மொழியாள் ஞாயிறு
குவலய மெங்ஙனும் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

தீந்தமிழ் எனக்குள் ஞாயிறு
தித்திக்கும் முத்தமிழ் ஞாயிறு
சுந்தர மனத்தாள் ஞாயிறு
கவிதை பொருள்கள் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

நல்லன நினைத்திட ஞாயிறு
நலமாம் பணியிடை ஞாயிறு
இல்லாள் நல்லாள் ஞாயிறு
இனிது வளர்ந்திடு ஞாயிறு..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

09-03-214

(தயவுசெய்து முடியுமானவர்கள் இதனைப் பாடலாக பாடியனுப்பவும். ismailmfairooz@gmail.com)

தீர்ந்தது என் (காதல்) வலி இன்றே…!


அத்தான் என்னத்தான் என்பதில் மயங்கி
அருகிணைந்தேன் எனை யிழந்தே னன்று
முத்தங்கள் சரமாரியாய் பெற்றே னன்று
முத்தங்கள் செல்களென அறிந்தேன் பின்!

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

பிறந்தநாளின்று எனை வழுத்திய கவிதைகள்!



(1) ராஜகவி ராஹில்
--------------------
கலைமகனே 
கவிமகனே 
காலத்தால் அழியாத புனை தமிழ் மகனே !

தமிழ் மகளை 
கவித்திரு மகளை 
புகழ் மகளை 
புவினறு மகளை 
சுவையுறு மகளை 
அவை ஒளி மகளை 
சிகரம் கொண்டு செல்லும் புலமை மகனே !

பாவாக்கினாய்
பூவாக்கினாய்
தேனாக்கினாய்
தீயாக்கினாய்
தேளாக்கினாய்
தமிழ்தனை ஊராக்கி
புகழ் தனைப் பேராக்கி
நீயானாய் பாவண்ணனே !
கவிப் புலியானாய் பா மன்னனே !

வாழ்க
உன்தமிழ் !

வாழ்க
உன் ஆயுள் !

வாழ்க
உன் செல்வம் !

வாழ்க
உன் நலம் !

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !


செவ்வாய், 31 டிசம்பர், 2013

2014 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆண்டொன்று அழிய அகத்தினின் மகிழ்ந்து
ஆகா வந்திட்டது அருமந்த ஆண்டென்று
பூண்டோடு பழையன மறந்து நாம்
பூதலத்து பவனி வருகிறோம் சரியோ?

வியாழன், 26 டிசம்பர், 2013

சாதித்துவத்துக்கு சாவுமணியடிக்க சனனித்ததுவோ சுனாமி!

அழகான கடல்மீது
அழகான கையெழுத்தில்
அழகாக எழுதியெழுதி
அழகுபார்த்திருந்தோம் நாம்!

சனி, 14 டிசம்பர், 2013

உங்களுக்குத்தான் சொர்க்கமா?

நீங்கள் பௌத்தர்கள்
தூபிகளில் அநுட்டானங்கள்
தொடர்ந்தும் செய்கிறீர்கள்…
நீங்கள் இந்துக்கள்
உங்கள் இன்பத்திற்காக
பலவும் பண்பாய் ஆற்றுகிறீர்கள்…
நீங்கள் முஸ்லிம்கள்

நீங்கள் சொர்க்கம் பெற
ஐவேளைத் தொழுகிறீர்கள்…

வியாழன், 28 நவம்பர், 2013

ஏன் மறந்தாய் தமிழை... சோகமே! -

பொதிகைமலை பிறந்திட்ட நற்றிமிழிது
பொய்ம்மைகள் பலகாட்டி பரிதவிக்க
ஆதித்தமிழ் மொழியை கங்கனம்கட்டி
ஆயுபோவ னாய்க் காட்டலாமோ?

நல்வணக்கம் நற்றமிழி லிருக்க

நாதியற்றதாய் ஆக்க முனைந்தீரோ...?
அல்லும்பகலும்  ஊன்றியே நிற்கும்
ஆவிபோலன்னதே நற்றமிழ் காண்பீர்!

புதன், 6 நவம்பர், 2013

காப்பியக்கோவின் அழைப்பினால் களிகொண்டேன் இளவல் யான்!

நேற்று இஸ்லாமிய புத்தாண்டின் முதல் நாள். (2013 11 05) இரவு 9: 55.

நான் பணிபுரியும் இணையத்தளத்திற்கு செய்திகள் பதிவேற்றிக் கொண்டு, முகநூலில் அவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.....

வெள்ளி, 1 நவம்பர், 2013

எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!

என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01  படைத்திருந்தார்.

என் ஆக்கங்கள் பத்திரப்படுத்தப்படும் ஏட்டில், அதைக் காணுங்காலையெலாம் எனையறியாமலேயே வருகிறது எனக்குள் சிரிப்பொலி....!

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கரங்கொடுப்பார் ஆருளரோ?

உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்

சீதனம் பற்றி உள்மனதில்
சீர்தூக்கி சோர்ந்துபோகும் – நானா
செத்த பொணம் மாப்பிளைங்க
சத்தியமாய் வேணாமுங்க – அழமாட்டேன்!

மறைநபியின் வாக்கையெல்லாம்
மண்ணில் உதறிவிடும் மனுசனுங்க
நறைவிழுந்து கூன் வந்திடினும் – வேணாமுங்க
நானா கவலைவிடுங்க – அழமாட்டேன்...