📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
இது கவிதை!
புதன், 23 ஏப்ரல், 2014
வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் ஆங்கிலத்தில்!
அன்புறவுகளே!
எனது தமிழ்க் கவிதைகள் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், மும்மொழிப் பாண்டித்தியமும் மிக்கவருமான கலாபூஷணம் எம்.வை மீஆத் அவர்களினால் வெகுவிரைவில் மொழிபெயர்க்கப்பட்டு இத்தளத்தில் பதியப்படும் என்பதை மகிழ்வோடு அறியத் தருகின்றேன்.
எனது ஆக்கங்களை மொழிபெயர்த்தருவதாகக் குறிப்பிட்ட கல்வியியலாளர் எம்.வை மீஆத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
சனி, 19 ஏப்ரல், 2014
எனது கவிதைகளில் ஷிர்க்கான விடயங்கள் உள்ள கவிதைகளை இனங்காட்டுங்கள்...!
வெள்ளி, 18 ஏப்ரல், 2014
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
உன்னில் எனையிழந்தேன் வெண்ணிலவே!
வெள்ளி, 28 மார்ச், 2014
கைம்மாறு இதுவோ என்பாரோ?
வெள்ளி, 21 மார்ச், 2014
ஞாயிறு, 9 மார்ச், 2014
ஞாயிறு மறையாது! (பாடல்)
ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது…
குழந்தை எனக்குள் ஞாயிறு
தாயு மெனக்குள் ஞாயிறு
குழந்தை மொழியாள் ஞாயிறு
குவலய மெங்ஙனும் ஞாயிறு
ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….
தீந்தமிழ் எனக்குள் ஞாயிறு
தித்திக்கும் முத்தமிழ் ஞாயிறு
சுந்தர மனத்தாள் ஞாயிறு
கவிதை பொருள்கள் ஞாயிறு
ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….
நல்லன நினைத்திட ஞாயிறு
நலமாம் பணியிடை ஞாயிறு
இல்லாள் நல்லாள் ஞாயிறு
இனிது வளர்ந்திடு ஞாயிறு..
-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
09-03-214
(தயவுசெய்து முடியுமானவர்கள் இதனைப் பாடலாக பாடியனுப்பவும். ismailmfairooz@gmail.com)
தீர்ந்தது என் (காதல்) வலி இன்றே…!
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
பிறந்தநாளின்று எனை வழுத்திய கவிதைகள்!
(1) ராஜகவி ராஹில்
--------------------
கலைமகனே
கவிமகனே
காலத்தால் அழியாத புனை தமிழ் மகனே !
தமிழ் மகளை
கவித்திரு மகளை
புகழ் மகளை
புவினறு மகளை
சுவையுறு மகளை
அவை ஒளி மகளை
சிகரம் கொண்டு செல்லும் புலமை மகனே !
பாவாக்கினாய்
பூவாக்கினாய்
தேனாக்கினாய்
தீயாக்கினாய்
தேளாக்கினாய்
தமிழ்தனை ஊராக்கி
புகழ் தனைப் பேராக்கி
நீயானாய் பாவண்ணனே !
கவிப் புலியானாய் பா மன்னனே !
வாழ்க
உன்தமிழ் !
வாழ்க
உன் ஆயுள் !
வாழ்க
உன் செல்வம் !
வாழ்க
உன் நலம் !
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
லேபிள்கள்:
ராஜகவி ராஹில்,
Birthday,
Rajakavi Rahil
செவ்வாய், 31 டிசம்பர், 2013
2014 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வியாழன், 26 டிசம்பர், 2013
சாதித்துவத்துக்கு சாவுமணியடிக்க சனனித்ததுவோ சுனாமி!
லேபிள்கள்:
ஆழிப்பேரலை,
சுனாமி,
Sunami,
TSunami
சனி, 14 டிசம்பர், 2013
வியாழன், 28 நவம்பர், 2013
புதன், 6 நவம்பர், 2013
வெள்ளி, 1 நவம்பர், 2013
எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!
என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01 படைத்திருந்தார்.என் ஆக்கங்கள் பத்திரப்படுத்தப்படும் ஏட்டில், அதைக் காணுங்காலையெலாம் எனையறியாமலேயே வருகிறது எனக்குள் சிரிப்பொலி....!
வெள்ளி, 25 அக்டோபர், 2013
செவ்வாய், 22 அக்டோபர், 2013
அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்
லேபிள்கள்:
Fairooz,
Kalaimahan Fairoos,
Movlovi-Ameer Husain
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















