கடுமைகொண்ட தோளினாய் பாரில்நீ
கடமைசெய்ய ஆயிரமுண்டு தெளிவாய்
நடுக்கடலில் மூழ்கி முத்தாய்பணி
நட்டவேண்டாமோ தெளிநீ தெளி!
ஆயிர மாயிரம் கனவுகளுடன்நீ
அகிலமெங்கனும் சுற்றுகிறாய் பார்
தேய்ந்து செல்லும் பாதம்மட்டும்
தெளிந்திடு அதனில் விளக்கந்தான்!
விடலைப் பருவமது தாண்டிநீ
வித்தைகாட்டும் பருவம் கண்டனை
தேடலில் நாளும் நீஉயரு
தரணியி லுயர்மொழி உனதன்றோ?
நாட்டின் சொத்தே இளவலே!
நம்பிக்கைவை உன்னில் நானென்று
ஏட்டில் உன்பெயர் பதிவாகும்
ஏற்றம் கண்டிடும் படையன்றோ?
நாட்டின் கல்வி சிக்கலன்றோ
நினைத்திடின் நீயும் பேடியன்றோ
பாட்டுக்கள் புதுபடை நீயுயர
பெருமை கொள்ளும் நாடுமன்றோ!
ஆழச்சென்று ஆழியில் சென்று
அரிதான முத்தினைப் பெறுமாப்போல்
வீழச்செய்திடும் இடுக்கண் கண்டுழிள
வீழ்ந்திடதாதே – நீநிமிரு நீவாழ!
களிபடைத்த மொழியுடை இளவலே
கருத்தினில்வை உன்னாற்றல் மேலுயரும்
களிகொள்வாய் உன்னைப் பார்போற்ற
கடுமைகொண்ட தோளினாய் நீயெனும்போ!
இமாலயத்தை நீதொட ஏறுசிறுமலையாதி
இமயம் உன்கைக்குள் வந்துவிடும்பாரு!
விமானம் புதுபடை வளங்களுனக்குள்
வேண்டு மதற்கு உனக்குள்விருப்பு!
அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!
முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!
எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!
-கலைமகன் பைரூஸ்
நன்றி
http://www.tamilmirror.lk/2012-04-05-07-07-32/46487-2012-08-11-12-10-21.html
--கருத்துரைகள்--
Seyed Hussain
உங்களது தமிழில் பல விடயங்களை நான் பார்க்கின்றேன் .ஒன்று அதில் தமிழ் இருக்கிறது . அறிவும் பிரதிபலிக்கப்படுகிறது . உண்மையும் இருக்கிறது
நீங்கள் எழுதும் பொழுது ஆளுமையுடன் எழுதுகிறீர்கள் . இனி வேறென்ன தேவை..கலையும் கவிதையும் இலகுவாக வருவதில்லை . புலமையும்,
கூரறிவும்கொண்ட ஆத்மாவினால்தான் முடிகிறது.இதை இறைவன் உங்களுக்கு அன்பளித்த்ருக்கிறான் .உங்களது பணி தொடரவேண்டும் .
Suraiya Buhary
அனைத்து கவி வரிகளும் அருமை சகோதரா...! மேலும் உங்கள் கலை
பயணம் தொடர இறைவனிடம் வேண்டுகின்றேன்...!
Razana Manaf
இளைஞர்களின் நாடியை பிடித்துப்பார்த்தது போல் இருக்கின்றது அத்தனையும் முத்தாய் இருக்கின்றது ஆனாலும் படிப்பவர்களுக்கு புரிதலில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகளை பொறுக்கி கவிமாலையாக தொடுத்திருப்பதினால்...!! எல்லாவரிகளுக்கும் மகுடம் சூட்டுவதுபோல் உள்ளது இந்தவரிகள்...
//எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!//
என்னாலும் முடியும் என்பது தன்னம்பிக்கை
என்னால் மட்டும்தான் முடியுமென்பது தலைக்கணம்
ஆகவே, தலைக்கணத்தை விடுத்து தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்போம் பாரினில் நாமும் முதன்மை பெறுவோம்.
Ilakkiya Sahi
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா !
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா !
என்ற பாரதி வரிகள் நினைவுக்கு வருகிறது கவிஜரே .
Jancy Caffoor
அழகுத் தமிழில் இளைஞனஞக்கு தன்னம்பிக்கையூட்டும் அழகான வரிகள்..........இன்றைய நவீன உலகில் எழும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து மீள்வதற்கான வழிப்படுத்தல்கள் எழுத்துருவில் ஒட்டிக்கிடக்கின்றதிங்கே!
//முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!//
முடியும் என்ற மனதின் அறைகூவலே மானசீக குரலாய் ஒலிக்கின்றதிங்கே.........
வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.....சமூகத்தின் சிறந்த அங்கத்தவனாய அந்த இளவல் மாற்றமடைய, உங்கள் ஒவ்வொரு வரிகளும் தோளணைத்து புத்தி புகட்டுகின்றது ஆளுமையுடன் !
Vj Yogesh
"அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!" மிகவும் இரசித்தேன்.. வாழ்த்துக்கள்.
Thava Parames
முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!.......அருமையான ஒரு வழிகாட்டி கவிதையென்றே சொல்ல வேண்டும்
ஆழச்சென்று ஆழியில் சென்று
பதிலளிநீக்குஅரிதான முத்தினைப் பெறுமாப்போல்
வீழச்செய்திடும் இடுக்கண் கண்டுழிள
வீழ்ந்திடதாதே – நீநிமிரு நீவாழ!
கவி அழகு.........
"எல்லாமாம் என்னாலே என்ற
பதிலளிநீக்குஎடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ.." நம்பிக்கை ஊட்டுகிற வரிகள். நல்ல கவிதை.
அழகுத் தமிழில் இளைஞனஞக்கு தன்னம்பிக்கையூட்டும் அழகான வரிகள்..........இன்றைய நவீன உலகில் எழும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து மீள்வதற்கான வழிப்படுத்தல்கள் எழுத்துருவில் ஒட்டிக்கிடக்கின்றதிங்கே!
பதிலளிநீக்கு//முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!//
முடியும் என்ற மனதின் அறைகூவலே மானசீக குரலாய் ஒலிக்கின்றதிங்கே.........
வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.....சமூகத்தின் சிறந்த அங்கத்தவனாய அந்த இளவல் மாற்றமடைய, உங்கள் ஒவ்வொரு வரிகளும் தோளணைத்து புத்தி புகட்டுகின்றது ஆளுமையுடன் !