It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 9 பிப்ரவரி, 2023

உழைக்கும் கைகளே நாட்டின் கண்கள் | கலைமகன் பைரூஸ்

 ஈழ மண்வாசம் வீசும் நேரம்

எங்கள் நெஞ்சங்கள் தீபம் ஏறும்;

இருள் கடந்திடும் இனிய காலம்

இன்று நாமெல்லாம் சேர்ந்து செய்வோம்.

திங்கள், 26 டிசம்பர், 2022

போதையைத் துடைத்தெறிவோம்!

வலிமை பெற்றோம் நாமே என்று

வன்மம் பேசுகிறான் - வலியோ டின்று

நலிந்தே நிலத்தில் உருவே மாறி

நிலமே நகைக்க நாணிக் குனிகின்றான்

 

வியாழன், 10 நவம்பர், 2022

மரபினைப் படி!



 -------------------

மரபினைப் படியழ காய்ப்படி தமிழ்க்கவி

மாண்புற வேபடி !மாத்தமிழ் மகிழ்கொள

சிரமதில் கொளப்படி சிகரம துதொடவே

சிலையது எழுத்தென நின்றிடப் படிநீ

செவ்வாய், 1 நவம்பர், 2022

கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன்

 

எனக்குள் தொலைந்துபோன

 என் நிம்மதியைத் 

தேடியலைகிறேன்.....


காலமும் கழிகிறது

மரண வலியோடு....

வாழ்வோ தொடர்கிறது....

சனி, 17 செப்டம்பர், 2022

ஆதங்கம்! - கலைமகன் பைரூஸ்


தென்னகத்து - மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஆய்வு செய்யுங்கால், வெலிகம - மதுராப்புர (மதுராகொட) த.சா. அப்துல் லதீப் அவர்களை மறந்து ஆய்வினை எழுதவியலாது.

1940 களுக்கு முன்னர் மதம் சார் இலக்கிய முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் வௌிவந்த இலக்கியங்கள் பெரும்பாலும் ஆலிம்களாலும் (மார்க்க அறிஞர்கள்) மதத்தைக் கற்றுத் தேர்ந்தோராலுமே ஆக்கப்பட்டன. இந்தவகையில் 1936 களிலேயே 'தமிழிற்சூரியன்' என்று யாழ் மக்களால் பாராட்டிப் போற்றப்பட்ட தம்பி சாஹிப் அப்துல் லதீப் அவர்கள் 'இரட்சகத்தூதர் முஹம்மது நபி (ஸல்)'

செவ்வாய், 22 மார்ச், 2022

ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலய பாடசாலைப் பண்

 


பேரிறையே புகழனைத்தும் உனக்கே!

நாளுக்கு நாள் மின்னிப் பிரகாசிக்கும், 67 ஆண்டுகளைக் கடந்த ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலைப் பண்ணை எழுதக்கிடைத்தமை பெரும் பேறே...

-------------------------------------------------------

அல்-மாஸ் பாடசாலைப் பண்

-------------------------------------------------------

 விண்ணையும் மண்ணையும் படைத்தாள்பவனே

விடிவினை அகமதில் தந்தருள்பவனே

கல்பினில்  உனையே வைத்தோம்

கருணை  மழையே  பொழிவாய்! //

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

அக்கினிச் சிறகே...எழுந்து வா! - 'கலைநிலா' அப்ரா, மதுராப்புர


 

கவிதைக்கு சொல்லழகு போல்
 பூவிற்கு  இதழழகு போல்
வதனத்திற்கு சிரிப்பழகு போல்
உலகிற்கு பெண்மை அழகம்மா...
     
உலகம் பிறந்தது பெண்மையால்
 சமூகம் வளர்ந்தது பெண்மையால்
அழகும் நிறைந்தது பெண்மையால்
அமைதி திகழ்ந்தது பெண்மையால்

ஞாயிறு, 13 ஜூன், 2021

தென்மாகாணக் கலைஞர்களுக்கான ஒன்று கூடல்

 தென்மாகாணக் கலைஞர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று ZOOM _ Meeting தொழில்நுட்பத்தின் துணையோடு நேற்று (12.06.2021) மாலை 4.00 மணியளவில் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் கௌரவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சூறா பாத்திஹா ஓதலுடன் இந்த ஒன்று கூடலை ஆரம்பித்து வைத்த கௌரவப் பணிப்பாளர் அவர்கள் கலாச்சார திணைக்களத்தின் சார்பில் இணைந்திருந்த அனைத்து கலைஞர்களையும் வரவேற்றதோடு முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றிய குறுகிய விளக்கமொன்றையும் முன்வைத்தார்.

வருடாவருடம் கலைஞர்களுக்கான கலாபூசணம் விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகளை மாத்திரமே தாம் கலாச்சாரத் திணைக்களத்தினூடாக நடாத்திச் செல்வதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தால் வழங்கப் படுவதாகவும் ஆனால் அதனைக் கொண்டு வேறு நிகழ்ச்சிகள் நடாத்த நிதி போதாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் இயன்றளவு அவற்றில் இருந்து ஒரு சிறு தொகையை மீதப்படுத்தி அதனூடாக நாட்டின் பல பாகங்களில் இருக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு பிடித்து அவற்றோடு தொடர்புடைய கலைஞர்களையும் இனங்கண்டு இவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இவ்வாறான கலைஞர் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தென்னகத்தின் புகழ் பூத்த பல கலைஞர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு தமது ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களையும் அவர்கள் முன் வைத்தார்கள்.

வெலிகமையைச் சேர்ந்த கலாபூசணம் ஹபீபுர் ரஹ்மான் ஆசிரியர், கலாபூசணம் யூசுப் ஆசிரியர், ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் போது “இவ்வாறான சந்திப்பொன்றை ஏற்படுத்தியது காலத்தின் தேவையாகும் ” என்று குறிப்பிடப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரபல எழுத்தாளர் கலாபூசணம் திக்குவல்லை கமால் அவர்கள் மிகவும் பயன்மிக்க பல கருத்துக்களை முன்வைத்ததோடு பிரதேச ரீதியில் கலைஞர்களை இனங்கண்டு அவர்களுக்கான ஒன்றுகூடல் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

அதனைத் தொடர்ந்து கலைமணாளன் ஹிஷாம் அவர்கள் இந்தக் கலந்துரையாடல் பற்றிய தமது கருத்துக்களையும் எதிர்கால சந்ததியினர் மத்தியில் கலையையும் கலாச்சாரத்தையும் கொண்டு சேர்ப்பதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து கலைமகன் பைரூஸ் அவர்கள் பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதில் மிக முக்கியமாக கலைஞர்களுக்கான ஆள் அடையாள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும் அவை போன்ற வரப்பிரசாதங்கள் தென் மாகாணத்தில் வசிக்கும் கலைஞர்களுக்கு வாய்க்காதது பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய இஸ்பஹான் அவர்கள் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான நிகழ்வு என்றும் இதில் தம்மை இணைத்தவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் இந்த நிகழ்வை முன்னெடுத்துச் செல்ல தமது ஒத்துழைப்பை தொடர்ந்து தருவதாகவும் தெரிவித்து விடைபெற்றார்.

அதனையடுத்து மூன்று மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். காலி மாவட்டம் சார்பாக எம்.ஜே.எம் ஹிஷாம், மாத்தறை மாவட்டம் சார்பாக கலைமகன் பைரூஸ், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் சார்பாக ஆசிரியை சனூரா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதோடு மாகாண ஒருங்கிணைப்பாளராக கலாபூசணம் திக்குவல்லை ஸப்வான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதையடுத்து உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய மூன்று திட்டங்களை பணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

  1. மாகாணத்தில் வாழும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், நுட்பக் கலைஞர்கள், கலை இலக்கிய ஆய்வாளாகளையும் இணைக்க வேண்டும்.
  2. கலையோடு, கலாச்சாரத்தோடு தொடர்புடைய அனைவரையும் குறிப்பாக முன்னர் எழுத்துலகில் மிளிர்ந்து தற்போது அவைகளில் இருந்து விலகியிருக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கப் பட வேண்டும்.
  3. தென் மாகாணத்தில் இருந்து மறைந்து போன படைப்பிலக்கியங்கள், நாட்டார் பாடல்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சிலம்படி, சீனடி போன்ற விளையாட்டுகள் பற்றியும் அவற்றோடு தொடர்புடையவர்கள் பற்றியும், அவற்றை ஆய்வு செய்வோர் பற்றியும் அறிந்து அவற்றை மீண்டும் கட்டியெழுப்பி எதிர் கால சந்ததிகளின் மத்தியிற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை வகுத்தல்.

தொடர்ந்து திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலையின் அதிபர் மஸாஹிர் ஆசிரியர் அவர்கள், கவிதாயினி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன், கலாபூசணம் பீ.எம்.எம். மொஹமட் மற்றும் இன்னும் பல கலைஞர்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைத்தனர்.

இறுதியாக இந்நிகழ்வில் இணைந்து கொண்ட இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமாகிய இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் தென் மாகாணத்தின் கலைஞர்களை ஒன்றிணைக்கும் இந்த மேடையை தாம் மகிழ்ச்சியோடு வரவேற்பதாகவும் அதன் செயற்பாட்டிற்கான நேரடியான பங்களிப்பை தான் எதிர் காலத்தில் நல்குவதாகவும் தெரிவித்தார்.

தென்மாகாண கலைஞர்களின் அடுத்த சந்திப்பு எதிர் வரும் 26.06.2021 இரவு 8.00 மணிக்கு இடம் பெறுவதாக அறிவிக்கப் பட்டதோடு இந்நிகழ்வு மாலை 5.25 மணியளவில் கனிய ஸலவாத்தோடு இனிதே நிறைவு பெற்றது.

-கலைமணாளன் ஹிஷாம்


வெள்ளி, 1 ஜனவரி, 2021

நல்லன நினைப்போம் விரைந்து!

 


பட்டா சொடுமலர்ந் ததாண்டு

பட்டுப் போகட்டும் பகைமை

மட்டிலா மாண்புகள் முகிழ்த்திட

மனிதம் மலரட்டும் முந்தி!

கரைபடிந் திட்டன களைந்து

கயமை விட்டினி நுழைந்து

தரைசெழித் திடத்தான் தேர்ந்து

வெள்ளி, 13 நவம்பர், 2020

அலைகடல் அழகினை நுகரு....

அலைநுரைகள் கரைதொட்டு ஆலிங்கனம் செய்ய
      அழகாழியங்கு அதிகாரமாய் சீறிப்பாய்ந் தங்குவர கலையோடு வெண்மேகம் கண்ணடித்துப் பார்க்க
     காற்றுப்போடு கலந்தங்கு விசிறி யடிக்கும்...

மௌனராகம் பேசிக்கொள்ளும் விண்மேக மங்கு
     மெல்லப்பேசும் காதலர்களின் இதழ்களை பார்க்க

ஞாயிறு, 7 ஜூன், 2020

தலைப்புகள் இல்லா கவிதைகளுக்காக! - குறிஞ்சி மைந்தன் ஜௌபர்



தேயிலைச் சேய்களின் 
தலை கோதிய தாய் அறியாள்
விஷம் பறந்து வந்து உயிர் பருகுமென்று.
எந்தையரின் முன்னோரின் காடு
அட்ஷய பாத்திரமாய்
ஊரானை ஊட்டி செழிக்கச் செய்ததுதான்
ஒட்டிய வயிறு பிளந்து
ஓட்டு வாங்கிய வயிறுகள்
வயிறு வளர்த்ததுமிங்கேதான் காண்.
என்றாலும்
உயிர் பறிக்க குளவிகள் படையெடுக்குமென்று அறியாள் அன்னை.
மார்புகளுக்குள் கிடந்த குழவியை
பிள்ளை மடுவத்தில் கிடத்தி
அன்னையர் வளர்த்தது
இந்த கொழுந்து குழந்தைகளைதானே.

சனி, 23 மே, 2020

நிறங்களுடன் கூடிய நல்லதொரு குடும்பம்....



நீரில் சாகப்போனவளைத் தாங்கப் போனவன் ஒரு முஸ்லிம்
சாகப்போனவளோ தமிழச்சி
சாகப் போனவளைக் காத்தவன் சிங்களவன்
இறந்தவனின் தந்தையோ முஸ்லிம்
இறந்தவனின் தாய் பெளத்தம்
இறந்தவனின் தாரமவள் கிறித்தவம்
பிள்ளைகள் இருவரும் பெளத்தம்...

இறந்தவன் தாங்கிய பெயர் முஸ்லிம்

நாளை பெருநாள்....!



அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...
வீட்டுக்குள்ளிருந்து
ஈகைப் பெருநாள் காெண்டாட
அல்லாஹு அக்பர்...

யாஅல்லாஹ்!
தியாகத் திருநாளை
குடும்பங்களோடு
கொண்டாட அருள்புரிவாயாக!

வெள்ளி, 22 மே, 2020

கைவிலங்கு!



இடது கையறிய
கொடுத்தது வலது கை....
பலர் அறியப்பூட்டியது
விலங்கு!
என்றாலும்,
உள்ளமறிந்தவன் இறைவனே!

மனிதத்தை விதைத்துச் சென்றாயே நீ!

தன்னுயிரைத் துச்சமென மதித்தாய்...
தன்தாரம் பிள்ளைகளை மறந்தாய்...
மனிதாபிமானம் உன்னுள் ஓங்கியதால்
மதமேது இனமேது என்று எண்ணவில்லை....
மன்னுயிரைக் காத்திடவே...
சட்டென்று பாய்ந்தாய் நீருனுள்...
அவள் பிழைத்தாள்...
நீயோ மிதந்தே வந்தாய்...
மீளாத் துயரில் உன்குடும்பம்...

இறைவனிடம் நல்சுவனத்திற்காய்
இருபத்தேழாம் நோன்பில்
இருகரங்களையும் ஏந்தியவனாய்...
உன்னை டிஜிட்டலில் செதுக்கி
அழகு பார்க்கின்றேன்....