திங்கள், 28 ஏப்ரல், 2025
சனி, 26 ஏப்ரல், 2025
ஐந்த ஐந்து நாட்கள்! - சிக்கன் குன்யாவா? டெங்குக் காய்ச்சலா?
கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார்.
குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.
ஞாயிறு, 30 மார்ச், 2025
தாயின் அன்பிலும் உயர்ந்தவனே, காத்திடு நீயே
நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...
எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...
அவர்களின் படங்கள்
செவ்வாய், 4 மார்ச், 2025
எதுவுண்டு சொல்?
நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....
--------------------------------------------------
தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
நான் நாமாவோம் இக்கணமே - கலைமகன் பைரூஸ்
நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே
நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது
வழியாக்கும்
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
பெப்ரவரி 14 | February 14
அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
ஆழப்பணிசெய்த அதிபரெங்கள் ஹிப்ளர்
அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே
காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார் கேளீர்
அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே
திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்
திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்
இட்டமாய் இன்பணி தான்செய் தாரே
இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்
செவ்வாய், 28 ஜனவரி, 2025
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
செவ்வாய், 21 ஜனவரி, 2025
பாரதி வாழுகின்றான்! - வாங்கனூர் அ மோகனன்.
பாரதி_வாழுகின்றான்!
திங்கள், 20 ஜனவரி, 2025
ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ
சனி, 18 ஜனவரி, 2025
தாய்மொழித் தினத்திற்காக ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன் |
'கலைமகன் கவிதைகள்' எனும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களை அன்புகூர்ந்து வரவேற்கிறேன்.
இறையருள் கொண்டு, எதிர்வரும் மாசி மாதம் 21 ஆம்
நாள், மீண்டுமாய் எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் பன்னாட்டுத் தாய்மொழித் தினம்
கொண்டாடப்படவுள்ளது.
புதன், 15 ஜனவரி, 2025
எழுந்திடு தீயே மேலும் நீயே.... WILD FIRE
செவ்வாய், 14 ஜனவரி, 2025
பெயரெச்சம், பெயரடைஎன்பவற்றிற்கான வேறுபாடு என்ன?
பெயரெச்சம் காலம் காட்டும்.
உதாரணம்: சென்ற ஊர். படித்த புத்தகம். வழங்குகின்ற பரிசில்,
வாங்கிய பதக்கம்.
இவற்றுள் சென்ற, படித்த, வழங்குகின்ற, வாங்கிய என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.
பெயரடை காலம் காட்டாது.
திங்கள், 13 ஜனவரி, 2025
2025 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும்
பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

தமிழ் கற்பிக்கும் சகலரும் ஆழ்கடலில் முத்து எடுக்கப் புகுந்தார்களா? என வினவின், அதற்கான விடை எள்ளளவே என்பது எனது எண்ணப்பாடு. (ஆம், நாம் கற்றவை எள்ளினும் நுண்மையே.)
இலக்கியத்தைக் கற்பிப்பதற்கு ஆழஅகல இலக்கணம் தெரிய வேண்டும்.
ஞாயிறு, 12 ஜனவரி, 2025
தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?
'கலைமகன் கவிதைகள்' எனும் பெயரில் எனது வலைத்தளம் நடைபோட்டாலும்கூட, தமிழ்மொழி சார்ந்த பிறரது ஆக்க இலக்கியங்களுக்கும் கைகொடுத்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. நுனிப்புல் மேய்ந்து தமிழைக் கற்கவியலாது என்பதை தமிழ்மீது பற்றுடைய அனைவரும் எண்ணற்பாலது.