நான் எழுத நினைத்ததை விடவும் மிகவும் சிறப்பாக அவரது கட்டுரை அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்ததைக் கோடிட்டுக் காட்டுவதோடு, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ இரக்குமாறு அனைவரையும்
புதன், 10 டிசம்பர், 2025
அல்ஹாஜ் ரமீஸ் மௌலவி அவர்களின் நெகிழ்ச்சிமிகு வாழ்வு!
செவ்வாய், 2 டிசம்பர், 2025
தனித்துத் தவிக்கும் தெல்தோட்டை!
தனித்து தவிக்கும் தெல்தோட்டை!
ஒரு தனித் தீவாய் மாறி நிற்கும் இந்த வூர் இன்னுமொரு அத்திப்பட்டியாக மாறிவிடுமோ?
(அவலத்தை புரிந்துகொள்ள பொறுமையாகவும் முழுமையாகவும் வாசியுங்கள்)
✍🏼 எஸ்.என்.எம்.சுஹைல்
மத்திய மலைநாட்டின் மிக உயரமான மலைகளைத் தன்னகத்தே கொண்ட அழகிய பிரதேசம் தெல்தோட்டை. கண்டி நகரில் இருந்து வெறும் 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இவ்வூரின் அழகும் அமைதியும் இயற்கையின் சீற்றத்தால் சிதைந்துவிட்டன. கடந்த வியாழக்கிழமை (27.11.2025) முதல், இந்தப் பகுதி அனைத்துவிதமான வெளிப்புறத் தொடர்புகளையும் முற்றாக இழந்துவிட்டது. இன்று தெல்தோட்டை ஒரு தனித் தீவுபோல் நிற்கிறது!
⚠️ முற்றாகத் தடைபட்ட வீதிப் போக்குவரத்து
கண்டி மற்றும் பிற நகரங்களுக்கான அத்தனை பிரதான சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் தெல்தோட்டையைச் சென்றடைவது என்பது சாத்தியமற்றதாகியுள்ளது.
செவ்வாய், 18 நவம்பர், 2025
இன்றைய மாணவர்கள் ஏன் அதிகமாக ஸ்டிரெஸ் அனுபவிக்கிறார்கள்?
இன்றைய மாணவர்கள் ஏன் அதிகமாக ஸ்டிரெஸ் அனுபவிக்கிறார்கள்? – ஒரு ஆழமான ஆய்வு
இன்றைய உலகம் “டெக்னாலஜி முன்னேற்றம்”, “கல்விப் போட்டி”, “வேலைவாய்ப்பு அச்சம்” போன்ற பன்முக அழுத்தங்களால் நிறைந்துள்ளது. இந்த மாற்றங்களின் மையத்தில் நிற்கிறார்கள் நமது மாணவர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் (Stress) கடந்த ஒரு தசாப்தத்தில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக உலகளாவிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
UNICEF (2023) மனநல அறிக்கை
திங்கள், 15 செப்டம்பர், 2025
சிகை அலங்காரம் தேவையா சொல்? | கலைமகன் பைரூஸ்
எத்தனை எத்தனை சிகை அலங்காரம்!
குரங்கு கட், பாம்புக் கட், குடு கட் –
புதுமை பெயரால் பழியைக் கொண்டாடி,
படிப்பு மறந்தால் பயனென்ன சொல்?
முடி தான் மாணவன் மேன்மையின்முத்திரையா?
முடிச்சியால் அறிவு வளருமா?
சிந்தனை சீர் பெற கல்வி தான் தேவை,
சிகை அல்ல, சீரிய செயல் தான் பெருமை.
புதன், 10 செப்டம்பர், 2025
நீலிக்கண்ணீர் வடிக்கிறது - கவிதை
நீலிக்கண்ணீர் வடிக்கிறது
ஏ! மானங்கெட்ட வெள்ளை முகத்தாளே!
புதன், 3 செப்டம்பர், 2025
ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்
ஆசிரிய வாண்மையும் இன்றைய சில ஆசிரியர்களின் நிலையும்
ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒளிவிளக்காகக் கருதப்பட்டார். “ஆசிரியர் என்பது அச்சாணி” என்று தமிழ் இலக்கியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த அச்சாணி இல்லாமல் ஏதொரு வண்டியும் நகராது. அதுபோல ஆசிரியர் இல்லாமல் ஒரு சமுதாயமும் முன்னேறாது. ஆனால் இன்று சில இடங்களில் ஆசிரியர்களின் நடத்தை, பண்பாடு, ஆளுமை, பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டிய நம்பிக்கையை அழிக்கும் படியாகக் காணப்படுகிறது என்பதே வேதனை.
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025
காஸா குழந்தைகள் | கலைமகன் பைரூஸ்
அப்பா என்ற ஒளி அணைந்திட,
அம்மா என்ற கண் நீரால் மூழ்கிட,
உணவின் வாசமின்றி உழலும்
உயிர்கள் – குழந்தை முகங்கள்!
சூரியன் காய்ந்தாலும் சிரிக்கவில்லை,
சந்திரன் வந்தாலும் மினுக்கவில்லை,
பொம்மை என்பதாய் கல்லைக் கொட்டி,
பசி என்பதைக் காற்றில் மறைத்துக் கொண்டது.
சனி, 30 ஆகஸ்ட், 2025
மருந்தகத்தின் கண்ணீர் விலை - கலைமகன் பைரூஸ்
மருந்தகத்தின் கண்ணீர் விலை
மருத்துவம் என்றாலே நம்பிக்கை எனும் நதி,
மருந்தகம் என்றாலே உயிர்க்கு ஒளி தரும் சுடர்...
ஆனால் இன்று –
அந்த நதி வணிகம் ஆனது,
அந்த சுடர் பணம் கவரும் பிசாசானது.
சின்ன காய்ச்சலுக்கும் –
மருத்துவமனைகளில் கூட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்... Agency கள் பற்றி கவனமாக இருங்கள்...
மருத்துவமனைகளில் கூட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்...
திங்கள், 4 ஆகஸ்ட், 2025
இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்
இரவின் நிறம் சிவப்பு
✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்
இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.
மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...
வியாழன், 31 ஜூலை, 2025
நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்
நானிருப்பேன் அன்றும்!
இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...
புதன், 23 ஜூலை, 2025
மழையின் வெந்தடம் – ஹைக்கூ
மழையின் வெந்தடம் – ஹைக்கூ மற்றும் விளக்கம்
சோவெனப் பெய்கிறது மழை
மாடாய் மடிகிறான்
நெற்றியில் சுடுநீர்
— கலைமகன் பைரூஸ்
விளக்கம்:
மழை என்பது இயற்கையின் புனித அருள்பொழிவாகத் தோன்றினாலும், இந்த ஹைக்கூவில் அது சற்றே வேறுபட்ட உணர்வோடு வருகிறது.
சனி, 12 ஜூலை, 2025
📜 கலைமகன் கவிதைகள் –புதுமெருகுடன் நாள் 1
1. வாடும் முகங்கள்
வாடும் முகங்கள் தெருவோரம்,
வெறும் கைகளால் வாழ்வுரோகம்;
கண்ணீர் தொட்ட பூமியில்,
கருணையின்றிப் போகலாமா?
விருந்தாக விழும் விழாக்கள்,
விளக்கிழந்த குடிசைகளில் கிடையாது.
வாய்க்கு மட்டுமே உணவு அல்ல,
மனமோடும் பகிர்ந்தல் உணவுதான்.
ஞாயிறு, 15 ஜூன், 2025
பசுமை பேசட்டும்! பாடல் - கலைமகன் பைரூஸ்
🌿 பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
திங்கள், 28 ஏப்ரல், 2025
பள்ளிகள் காய்ந்து போகின்றன... அங்கலாய்க்கிறேன் நான்!
சனி, 26 ஏப்ரல், 2025
அந்த ஐந்து நாட்கள்! - சிக்கன் குன்யாவா? டெங்குக் காய்ச்சலா?
கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார்.
குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.
ஞாயிறு, 30 மார்ச், 2025
தாயின் அன்பிலும் உயர்ந்தவனே, காத்திடு நீயே
நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...
எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...
அவர்களின் படங்கள்
செவ்வாய், 4 மார்ச், 2025
எதுவுண்டு சொல்? | மெய்யன் நரடாஜ்
நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....
--------------------------------------------------
தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
நான் நாமாவோம் இக்கணமே - கலைமகன் பைரூஸ்
நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே
நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது
வழியாக்கும்
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
அங்கமெங்கும் தொடுவீர் | காதலர் தினக் கவிதை
அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
ஆழப்பணிசெய்த அதிபரெங்கள் ஹிப்ளர் - கவிதை
அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே
காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார் கேளீர்
அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே
திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்
திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்
இட்டமாய் இன்பணி தான்செய் தாரே
இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்
செவ்வாய், 28 ஜனவரி, 2025
உடல்மெலிந்து உருக்குலைந்து - மெய்யன் நடராஜ்
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
செவ்வாய், 21 ஜனவரி, 2025
பாரதி வாழுகின்றான்! - வாங்கனூர் அ மோகனன்.
பாரதி_வாழுகின்றான்!
திங்கள், 20 ஜனவரி, 2025
ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ அப்துல் ரகுமான்
சனி, 18 ஜனவரி, 2025
தாய்மொழித் தினத்திற்காக ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன் |
'கலைமகன் கவிதைகள்' எனும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களை அன்புகூர்ந்து வரவேற்கிறேன்.
இறையருள் கொண்டு, எதிர்வரும் மாசி மாதம் 21 ஆம்
நாள், மீண்டுமாய் எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் பன்னாட்டுத் தாய்மொழித் தினம்
கொண்டாடப்படவுள்ளது.
புதன், 15 ஜனவரி, 2025
எழுந்திடு தீயே மேலும் நீயே.... WILD FIRE
செவ்வாய், 14 ஜனவரி, 2025
பெயரெச்சம், பெயரடைஎன்பவற்றிற்கான வேறுபாடு என்ன?
பெயரெச்சம் காலம் காட்டும்.
உதாரணம்: சென்ற ஊர். படித்த புத்தகம். வழங்குகின்ற பரிசில்,
வாங்கிய பதக்கம்.
இவற்றுள் சென்ற, படித்த, வழங்குகின்ற, வாங்கிய என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.
பெயரடை காலம் காட்டாது.
திங்கள், 13 ஜனவரி, 2025
2025 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும்
பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

தமிழ் கற்பிக்கும் சகலரும் ஆழ்கடலில் முத்து எடுக்கப் புகுந்தார்களா? என வினவின், அதற்கான விடை எள்ளளவே என்பது எனது எண்ணப்பாடு. (ஆம், நாம் கற்றவை எள்ளினும் நுண்மையே.)
இலக்கியத்தைக் கற்பிப்பதற்கு ஆழஅகல இலக்கணம் தெரிய வேண்டும்.
ஞாயிறு, 12 ஜனவரி, 2025
தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?
'கலைமகன் கவிதைகள்' எனும் பெயரில் எனது வலைத்தளம் நடைபோட்டாலும்கூட, தமிழ்மொழி சார்ந்த பிறரது ஆக்க இலக்கியங்களுக்கும் கைகொடுத்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. நுனிப்புல் மேய்ந்து தமிழைக் கற்கவியலாது என்பதை தமிழ்மீது பற்றுடைய அனைவரும் எண்ணற்பாலது.



















