It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

தனயன் தன்னை தயாளனுக்காய் – நபி
தந்திட முனைந்த நந்நாள் இந்நாள்
பண்ணுவோம் அவர்வழி நல்லன நாம்
பாரினில் களைவோம் தீய சிந்தைதான்!

இறையின் கடமை வந்தது நம்மவர்
இறையில்லம்  ஏகினர் புனிதம் பெற்றிட
மறையிறையின் முன் மண்டியிட்டு பாவம்
மறைந்தழித்து வருவோரையும் ஏத்துவோம்..!

ஹஜ்ஜினின் அறுத்திடுவோம் நாமும் உள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

என்பாகத்தை எனக்கு வைத்துவிடு! (மொழிபெயர்ப்புக் கவிதை)

கள்ளமாய் ரகசியமாய் அருகேவந்து சொன்ன
கதையை மீண்டும் கட்டுங்கள்...
பாழடைந்த நாளொன்று நாங்கள் தனியாக நின்ற
இடத்திற்குப் போய் உட்காருங்கள்...
யார்? எதற்கு? ஏன்? இங்கே இன்று...?
எனக் கேட்டால் பொய் சொல்லுங்கள்...
எக்காரணம்  கொண்டும் போகாமல் நான்
வரும்வரை காத்திருங்கள்...

செவ்வாய், 8 அக்டோபர், 2013

தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'நிழலும் நிதர்சனமும்'பற்றிய நயவுரை

சென்ற ஞாயிற்றுக்கிழமை (06/10/2013) தினகரன் வாரமஞ்சரியில், இலங்கையின் பிரபல ஆங்கில - தமிழ் திறனாய்வாளரும், பத்தியெழுத்தாளருமான உயர்திரு. கே.எஸ். சிவகுமாரன் ஐயா அவர்கள் எனது 'நிழலும் நிதர்சனமும்' கவிதைத் தொகுப்பைப் படித்து நயவுரை எழுதியிருந்தார்.

எனை விஞ்சிப் போற்றி, என் தமிழில் நான்

திங்கள், 7 அக்டோபர், 2013

THE LIFE OF THE PROPHET MUHAMMED! Khulafa-Ur-Rashideen (Poems)

நான் பணிபுரியும் வெலிகம ஸலாஹியா சர்வதேசப் பாடசாலையின் கணக்காளர் திரு. முஹம்மது முஜீப் ஆங்கிலத்தில் (இஸ்லாம் சார்ந்த) இரண்டு கவிதைகளை எழுதியிருந்தார்.

நல்ல ஆற்றொழுக்குடன் கூடிய அந்த இரண்டு கவிதைகளையும் நான் என் தளத்தில் பதிவேற்றி அவருக்கு கொலுகொம்பாக நிற்க விரும்பி, அவற்றை கேட்டேன்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

'நிழலும் நிதர்சனமும்' பற்றி பிரபல பத்திரிகையாளர் கே.எஸ். சிவகுமாரன்

புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

நிழலும் நிதர்சனமும்

தென் இலங்கையில் வெலிகம என்ற சிறுநகரமொன்று இருப்பதை நாமறிவோம். அந்தப் பிராந்தியத்தில் தெனிப்பிட்டிய, மதுரப்புர என்ற இடத்தில் தமிழ் அறிவகம் என்ற இல்லத்தில் இஸ்மாயில் எம். பைரூஸ் என்ற கல்விமான் “கலைமகன் பைரூஸ் என்ற பெயரில் கவிதை உட்படப் பல எழுத்தாக் கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.

சனி, 5 அக்டோபர், 2013

பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!


தன்பதிக்கென வாழ்ந்த பதியிவள்
தன்னாசைகள் எலாம் துறந்தவள்
இன்முகத்தொடு பதியை பார்த்தவள்
இல்லானிற்காய் வாழ்வினை நீத்தவள்!

தன்னிலை துறந்த போதும்பதி
தன்னிலை துறவாத பதியிவள்
என்னிலிவன் என்றே இவள்
எண்ணிலாதன செய்தாள் நிதம்!

விதியின் மாறுதலான் சிக்குண்டு
வடிவென வந்த மங்கைபாலவன்
அதிகாதல் பூண்டு நிலையழிந்த
அதிகாரம் தெரிந்தும் மௌனித்தவள்!

சனி, 28 செப்டம்பர், 2013

என்னை அழவிடு நீ!

வேண்டாம் இதயத்தைக் கனக்கச் செய்ய
நீ உன் பாட்டில் இரு!
தனிமையில் துன்பந்தாங்க
என்னால் இயலும்....

விழிகளில் கண்ணீர் வழிந்தோட
என்னை அழ விடு...
அந்தக் கண்ணீரை துடைக்க
வேண்டவே வேண்டாம்
உன்பாட்டில் நீ இரு...

தீ மூட்டிய இதயத்தை
நிம்மதியாக்க
என்னை நானே வறுத்திக் கொள்ள
ஏதேனும் எனக்குச் சொல்....

கண்ணீர் முத்துக்களை ஒன்றிணைக்க

திங்கள், 23 செப்டம்பர், 2013

உனை நினைத்து இக்கணமும் இயற்றுகிறேன் பா!



வாழ்வில் பாரிய மாற்றங்கள் நிகழலாம்...
வசந்தம் கூட வழிநெடிகிலும் வரலாம்.....
என்றாலும்,
அடிமனதில் ஆழவேரூன்றி
அடையமுடியாமல் இருந்த அன்புக்காய்
அழுது கொண்டிருக்கும் உள்ளம்....

எப்படிச் சொல்ல என்று
உள்ளம் 
எடுப்பார் கைப்பிள்ளை போலும்
வேடிக்கை பார்த்ததால்...

புதன், 18 செப்டம்பர், 2013

டிசம்பரில் வரவுள்ளது 'கவிதா'...... ஆக்கங்களை உடன் அனுப்புங்கள்...!



வாசகர் கவனத்திற்கு...
--------------------------------
'கவிதா'வின் வரவை நிச்சயிப்பதற்காக சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.. ஆகக் குறைந்த கட்டணம் இலங்கை: ரூபா 1000/- தனிப்பிரதி இலங்கை: ரூபா : 100 (தபால் செலவுட்பட)
காசுக் கட்டளை அனுப்புவோர், பெறுபவர்: M I M FAIROOZ, பெறும் தபாலகம்: WELIGAMA POST OFFICE எனவும் குறிக்கவும்.

காசுக்கட்டளை மற்றும் பணவரைபுகள் கிடைக்கப்பெறும் வேளை, அவை பற்றி முகநூல் வாயிலாக அறிவிக்கப்படும்....

அனைத்துத் தொடர்புகளுக்கும் இலங்கை நேரம் மதியம் 4 மணியின்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?
--------------------------------------------------
-கவித்தீபம் கலைமகன் பைரூஸ்
நாங்கள் முஸ்லிம் ஒன்றே நாங்கள்
நலமாய் ஒற்றுமை கயிற்றினை பற்றுமின்
தீங்குகள் பலவாய் வந்திட்ட போதும்
தீயன நினைக்கா திருங்கள் என்றனர்....

திங்கள், 2 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ்.எச். மௌலானாவின் கருத்துரை

சமுதாய உறுத்தல்களால் உருவானதே ‘கலைமகன் கவிதைகள்’
- முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் 

கலைமகன் பைரூஸின் படிக்குந்தோறும் இனிமை பயத்திடும், சலசலவென்ற ஓசைநயம் மிக்க ‘கலைமகன் கவிதைகள்’ கவிதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவதில் முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் என்ற வகையில் பேருவகை அடைகின்றேன்.

இதயம் கனக்கின்ற பொழுதுதான் கவிதைகள் வருகின்றன.

‘எப்போதும் வருவதில்லை கவிதை

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் கலைவாதி கலீலின் அணிந்துரை

கவியிலக்கணங்களுடன் கூடிய கலைமகன் கவிதைகள்
முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல்

கவிதை என்பது வட்டமிட்டுச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போன்றது. வண்ணத்துப் பூச்சியின் சுயாதீனப் போக்கும் அதன் வேகமும் விறுவிறுப்பும் வித்தியாசமான அசைவுகளும் அழகும் மெலிதான நறுமணமும் நமது மனம் கொள்ளத்தக்கன.

கவிதையின் வடிவம் பற்றிய என் கணிப்பீடு இதுதான். கவிதையின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகள் உள. அவை அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை என்பனவாம். இவை

சனி, 31 ஆகஸ்ட், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வானின் அணிந்துரை

கவினுறு கவிதைகளும் கலைமகனும்
பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வான்

கலைமகன் பைரூஸின் கவினுறு கவிதைத் தொகுப்புக்குக் கருத்துரை வழங்குவதில் பெருமையடைகின்றேன். கவித்துறையில் அன்னாருக்கு உள்ள முதிர்ச்சியை, உயர்ச்சியை இக்கவித்தொகுப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. கவி இலக்கணத்தைக் கரிசனையோடு காத்து அவர் படைத்துள்ள கவிதைகள் அனைத்தும் அற்புதமான சொற்புதையல்கள்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

ஒண்ணாதார் இன்னாரே! (‍கவிதை)

பொய்ம்முகந் தரித்து பூதலத்து இன்னார்
பாசந்தான் காட்டி பரிதவிக்க விட்டே
தேய்ந்தெழும் மதி யன்னதா யிருந்து
செய்வரே தீங்கு ஒண்ணாதார் இன்னாரே!

திங்கள், 29 ஜூலை, 2013

என் கவிதைகள் குறித்து றியாஸ் குரானாவின் கருத்துரை

அன்பின் பைறுாஸ் நலமா? உங்கள் கவிதைகளைப் படித்தேன். எது நல்ல கவிதை என்பதை கண்டுபிடிப்பதிலும், அதைக்குறித்து பேசுவதிலும் இன்று பல விவாதங்கள் இருக்கின்றன. 

அப்படியான ஒரு சிக்கலுக்கள் நுழைவதற்கு உங்கள் கவிதைகள் காரணமாக இருக்காது.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மழை - 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்


மழை
=====
சிங்களத்தில்: மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
=====================================
சுழல்காற்று செடிகொடிகள் வீசி
மின்னல் ஒளி பாய்ச்சி
பாரியதொரு மழைமேகம்
சற்றும் எதிர்பாராமலேயே
மழைநீரைச் சிந்தியது!

காலத்திற்குக் காலம்
தலைமுறைக்குத் தலைமுறையாக
உலகம் தோன்றிய நாள்தொட்டு
இதுவரை இலட்சக்கணக்கான
காதலர்கள் வீழ்த்திய
சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளால்
மழைத்துளி உருவெடுத்ததாய்
எனக்குள் தோன்றியது!

2013/06/22

வெள்ளி, 21 ஜூன், 2013

மண்ணறையில் மலர்ந்த மலர் - 'கவித்தீபம்' பைரூஸ்


நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில்  புதைத்தேன்.

திங்கள், 17 ஜூன், 2013

அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா?



தன் எண்ணத்து ஆசைகளை
தாரத்தில் ஆனந்தம் துள்ளியெழ
தனக்கே யுரித்தான நிலத்தினிலே
விதைத்து ஆகின்றான் தாதை!

வலியென்றும் பாராது நீள்நிலத்தில்
வந்திட்ட சிறுமுளைகள் செழித்திடவே
உழைத் துழைத்து வியர்நீர்சிந்தி
ஊதியமில்லாமல் செய்கின்றான் பணி!

திங்கள், 10 ஜூன், 2013

'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!

தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் நடாத்திய 'திறந்த (2013 மே மாதக்) கவிதைப் போட்டியில், எனது கவிதை (காசேதான் பேறாமோ?) சிறப்புக் கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)

கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,