It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 29 ஜூலை, 2013

என் கவிதைகள் குறித்து றியாஸ் குரானாவின் கருத்துரை

அன்பின் பைறுாஸ் நலமா? உங்கள் கவிதைகளைப் படித்தேன். எது நல்ல கவிதை என்பதை கண்டுபிடிப்பதிலும், அதைக்குறித்து பேசுவதிலும் இன்று பல விவாதங்கள் இருக்கின்றன. 

அப்படியான ஒரு சிக்கலுக்கள் நுழைவதற்கு உங்கள் கவிதைகள் காரணமாக இருக்காது.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மழை - 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்


மழை
=====
சிங்களத்தில்: மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
=====================================
சுழல்காற்று செடிகொடிகள் வீசி
மின்னல் ஒளி பாய்ச்சி
பாரியதொரு மழைமேகம்
சற்றும் எதிர்பாராமலேயே
மழைநீரைச் சிந்தியது!

காலத்திற்குக் காலம்
தலைமுறைக்குத் தலைமுறையாக
உலகம் தோன்றிய நாள்தொட்டு
இதுவரை இலட்சக்கணக்கான
காதலர்கள் வீழ்த்திய
சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளால்
மழைத்துளி உருவெடுத்ததாய்
எனக்குள் தோன்றியது!

2013/06/22

வெள்ளி, 21 ஜூன், 2013

மண்ணறையில் மலர்ந்த மலர் - 'கவித்தீபம்' பைரூஸ்


நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில்  புதைத்தேன்.

திங்கள், 17 ஜூன், 2013

அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா?



தன் எண்ணத்து ஆசைகளை
தாரத்தில் ஆனந்தம் துள்ளியெழ
தனக்கே யுரித்தான நிலத்தினிலே
விதைத்து ஆகின்றான் தாதை!

வலியென்றும் பாராது நீள்நிலத்தில்
வந்திட்ட சிறுமுளைகள் செழித்திடவே
உழைத் துழைத்து வியர்நீர்சிந்தி
ஊதியமில்லாமல் செய்கின்றான் பணி!

திங்கள், 10 ஜூன், 2013

'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!

தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் நடாத்திய 'திறந்த (2013 மே மாதக்) கவிதைப் போட்டியில், எனது கவிதை (காசேதான் பேறாமோ?) சிறப்புக் கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)

கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,

திங்கள், 27 மே, 2013

வாழ்த்துரைத்தல் ஆகாதோ? பகர்வீர்

பணமுண்டு சிலரிடம் குணமுண்டு

பண்பிலை சிலரிடம் பக்குவமுண்டு


மணக்கும் மாண்பதைக்காய் அவர்


மரகதமாய்ப் பாடுவது குறையாமோ?


##########################


நல்லாரைப் போற்றுதல் குறையாமோ?

நவின்றிடும் சொல்லை பழித்தலாமோ?


வில்லெடுத்து தைப்பது போலும் பிறர்


வாழ்த்தீதும் தூற்றுதல் மடைமையே!


##########################


வார்த்தை மட்டுமாகா தென்றுநிதம்


வழிவர செய்தாரையும் தூற்றுதுநிலம்


ஒருவார்த்தையாலே பாரில் வீழச்செய


'ஒருவ'ரினால் ஆமோ மடைமையே!


##########################


புதன், 22 மே, 2013

நவீன அந்தப்புரத்து ராணி! (நெடுங்கவிதை)


நவீன அந்தப்புரத்து ராணி!00000000000000000000000000000

அந்தப்புரத்தில் அன்னம்:---------------------------------

கோதண்ட மேந்துகின்ற காளையர்கள்
குவலய மெங்கும் உனைக்காணவே
வாதங்கள் பலபுரிந்து உனைப்பெறவே
வடிக்கின்றார் குருதி - அம்மைகாண்!

நீமுந்தி நான்முந்தி என்கின்றார்
நினக்காக எல்லாமுந் துறக்கின்றார்
பாமுந்துவாரும் பாடி வருகின்றார்
பாசம் யாருக்கோ பாவைசொல்லாய்!

புதன், 1 மே, 2013

හැදුනුම්පත - මහ්මූද් දර්විෂ්

මෙය ලියගනු
මම අරාබි කාරයෙක්
මාගේ හැදුනුම්පත් අංකය 50,000
මාහට ළමයි අටදෙනක්...
ලබන උෂ්ණයේ
ලැබෙයි මට අනිත් උප්පත්තිය
ඔබ තරහද?

ලියාගනු මෙය
මම අරාබි කාරයෙක්
කම්කරු සමග
ගල් කඩන්නෙමි මා... ගල් පර මිරිකන්නෙමි මා...
මාගේ දරුවන් අටදෙනෙක්ම
රොට්ටි කෑල්ලක් ගන්නට...
නමුත්,
දයාව ඉල්ලා හිගා කන්නේ නෑ...
ඔබගේ බලය තුළ
දණ හිස ගසා මා ඉන්නේ නෑ...
ඔබ තරහද?

ලියාගනු මෙය
මා අරාබි කාරයෙක්
මාහට ගවුරවණිය නම් නැත..
වල් පොළව තුළ මා ස්ථීරවන්තයා
යුගයෙන් පසු
කාලයෙන් පසු
මාගේ මුල ගැඹුරට යයි...

ගැමි පියාගේ අපොහසත් පුතා මම...
පිදුරු නිවසේ ජීවත්‍ වෙමි
මාගේ හිස කෙස් කළුපාටයි
මාගේ ඇස් වැලි පාටයි
මාගේ අරාබි හිස් ආවරණය
ආක්රමණය කරන්නාගේ
අත් සූරනු ඇත...

සියල්ලටම වඩා
කරුණාකර මෙය ලියනු...
මා කිසිවෙකුට අප්රිාය කරන්නේ නැත..
කිසිවෙකුගෙන් මංකොල්ල කෑවේ නැත...
නමුත්,
මා බඩගින්නෙන් සිටින වේලේ
මාව මංකොල්ලා කාපු එකාගේ
මස් කමි මා....

සැලකිල්ලට ගනු....!
මාගේ බඩගින්නට
බියවී
අවධානයෙන් සිටිනු!
මාගේ කෝපයට බියවී
අවධානයෙන් සිටිනු!!

සිංහල පරිවර්ථනය - ඉස්මායිල් එම්. පයිරූස් (කලෛමහන්)




ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஏ சதிகார அமெரிக்கனே...! - கலைமகன் பைரூஸ்


எங்கள் உயிர்கள் பறிக்கப்படுகையில்
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகையில்
எங்கள் சிறுசுகளின் சிரசுகள் நசுங்குகையில்
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...



வியாழன், 18 ஏப்ரல், 2013

நாளைய உலகின் தலைவர்கள் எவரோ? - கலேவல ஹபீலா ஜெலீல்

காலம் இணைத்த 
வரலாற்றுக் கோடுகளில் 
இன்னும்
இணைக்கப்படாமல் இருப்பது
எதிர்காலம்

அடுத்த தலைமுறையின்
கைகளில்
காலத்தின் தூரிகை
கிடைக்கப்பெற்றால்

ஒரு வேளை சிரிக்கும்
ஒரு வேளை மிதிக்கும்
மீறிப்போனால் நச்சரிக்கும்

புதன், 17 ஏப்ரல், 2013

கண்ணீர் துடைப்பார் ஆருளரோ?


உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

ஒன்றே மாந்தர் என்றிட எழுந்தனன்! - கலைமகன் பைரூஸ்


கதிரவ னெழுந்தான் கண்கள் கசக்கி
காரிரு ளவளை மெல்ல விலக்கி
பதியினி லெவரும் பாங்காய் நின்றிட
பாரினி லெங்கும் கதிர்கள் பரப்பி...

 கள்ளுண்டு திரண்டிட தும்பிக ளெழுந்து
கனிச்சுவை தந்திடு தருக்களி லமர்ந்து
புள்ளுண்டு பறந்திட பிணைதனை கூறிட
பரிதி யெழுந்தனன் சுடர்தனை வீசி....

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ்



அன்பின்எழில் அழகின்எழில் அமுதின்எழில்
அகத்தினின் எழில் அரிவையின் எழில்
இன்னமுதின் எழில் இல்லறத்தின் எழில்
இங்குள இரவல் எழிலை விட விஞ்சிட்டெழில்...

படைப்பின்எழில் படைத்தவன்எழில் பாரினிலெழில்
பாவையர் பாலுளஎழில் பாவையரெனுமெழில்
விடமிலாதெழில் வாடாவெழில் வீறுடையெழில்
விண்ணின் மிளிர்ந்தெழில்தரும் நிலாப்பெண்ணே!

திங்கள், 15 ஏப்ரல், 2013

எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்



தன் பிரபல்யத்துக்காய்
மனிதம் விற்கப்படுகிறது....
தன் மகிழ்ச்சிக்காய்
பிறர் அழுகுரல்
வீணையென இரசிக்கப்படுகிறது...

பிணந்தின்னிக் கழுகளும்
ஊளையிடும் நரிகளும்
நிறைந்த சாக்காட்டில்
புதுமையைக் காண்பதற்காய்
‘செல்’கையில்


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்திரையொன்று பிறந்திருக்கு...! -கலைமகன் பைரூஸ்



சித்திரையொன்று பிறந்திருக்கு
இத்தரையெங்கும் மலர்ந்திருக்கு
முத்திரையெனவே மகிழ்ந்திங்கு
மங்கலம் பொங்கிட நாமிணைவோம்! //

சித்திரை.....


சனி, 13 ஏப்ரல், 2013

எல்லாம் நிலையிலாதனவே! - கலைமகன் பைரூஸ்

நிலையிலா வாழ்வு பற்றிக் கற்றிட
நிலையிலா வையம் பற்றிக் கண்டிட
இலைநீரே அழகாய் வந்தனைநீ - போழ்தில்
இறங்கிவிடுவாய் என்பதறி சீராய் நீ!


ஞாயிறு, 24 மார்ச், 2013

அடி நிர்வாணம் காட்டலாமோ?

துச்சாதனர்கள் இன்று உப்பரிகையில் நின்று
துச்சமாய் பெண்டிரின் நிர்வாணம் கண்டிட
உச்சாணி நிற்கின்றார் அதுகண்டு -பெண்ணே
உன் நிர்வாணம் காட்டிட நீமுனைவது தகுமோ?

தாய்க்கும் தன்னொடு பிறந்த தமியளுக்கும்

வியாழன், 7 மார்ச், 2013

ஊளைகளுக்கு அஞ்சாதே!

-கலைமகன் பைரூஸ்

பலநூற்றாண்டு வரலாறு உனதாகும் மகனே
பார்த்திருக்க மாட்டாது ஊளையிடுது இங்கே
நிலந்தேயு மட்டும் கூக்குரலிட்டாலும் மகனே
நில்லாதே நீண்ட பயணம் நீதொடரு நேரே!


வாசங்கள் பலசொல்லி பூண்டோடு அழிக்க