It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2015

வெள்ளி, 18 டிசம்பர், 2015

இரத்தம் கொடுப்பீர் !உயிர் காப்பீர்!

வாதங்கள் மறந்திடுவீர்
வீண் விதண்டாவாதம் செய்யாதிருப்பீர்!
பிரதேசவாதம் இல்லாதொழிப்பீர்
இயக்க நிலையும் இல்லாதொழிப்பீர்!
இரத்தம் கொடுப்பீர் - உம்
நல்லிரத்தம் கொடுப்பீர் உயிர் காப்பீர்!

உம்வாழ்வில் ஒளிபிறக்கும் மற்றான்
உம்வாழ்விற்காய் துஆ இரப்பான்
துளியேனும் இரத்தம் கொடுத்தே
பிறர் வாழ்வில் ஒளியேற்ற வழியாவீர்!