It
கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2019
காந்தள் விரல்கள் கருவடு மேய்ந்திட
காலம் முழுதும் மாற்றான் மகிழ்ந்திட
எந்தன் பரம்பரை உழைத்துத் தேய்ந்தது
ஏனிப்படி ஏணிப்படியெமை தூற்றுவது
ஈழநாடு பெருமை பெற்றிட எம்மவர்
இரவும் பகலும் கஞ்சி குடித்திட
தோழமை பூத்து குளவிகள் கொட்டிட
தேநீரெமை நீரேனோ வைவது இழுக்காய்!