It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2019

செவ்வாய், 3 டிசம்பர், 2019

மலையகத்தானில் ஏனிந்த சீற்றம்? - கலைமகன் பைரூஸ்

காந்தள் விரல்கள் கருவடு மேய்ந்திட
காலம் முழுதும் மாற்றான் மகிழ்ந்திட
எந்தன் பரம்பரை உழைத்துத் தேய்ந்தது
ஏனிப்படி ஏணிப்படியெமை தூற்றுவது

ஈழநாடு பெருமை பெற்றிட எம்மவர்
இரவும் பகலும் கஞ்சி குடித்திட
தோழமை பூத்து குளவிகள் கொட்டிட
தேநீரெமை நீரேனோ வைவது இழுக்காய்!