It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2019

வியாழன், 31 அக்டோபர், 2019

தலைவருள் தலைமகனார்! - கலைமகன் பைரூஸ்

விண்ணைப் படைத்து மண்ணைப் படைத்து
வீறுடை பற்பலவும் வியப்பாய்ப் படைத்து
தண்ணளி முஹம்மதரை தரணிக்குத் தந்த
தயாளன் அல்லாஹ்வே உன்நாமம் உரைத்து..

இருள்படர்ந்த ஜாஹிலியாக் காலந் தனிலே
இருள்நீக்க அருக்கனாய் வந்துதித்த வல்லள்
அருமந்த செயல்தனை நான்பாட இறையே
பொருளுடை நற்றமிழ் என் நாவினுக்குத்தா!

செவ்வாய், 15 அக்டோபர், 2019

கூசா தூக்கியது போதும்... உங்கள் வலிக்கு நான் ஏது செய்ய?



















ஆளுக்காள் கூசாதூக்கித் திரியும் ஆட்களே!
அயர்ந்து தூங்காது சொல்வதைக் கேளுங்கள்...
நாளுக்குநாள் எம்முதிரம் சிந்தியே உழைத்தோம்
நாட்டுக்கு எம்வரிகளையும் ஈந்தே யழிந்தோம்...

டும்டும்டும் எனவே வானுயர்கின்றன ஓலங்கள்

கண்ணியம் காப்போம்... (சிறுவர் பாடல்)













பெற்றவர் தன்னைப் போற்றிடுவோம்
பேணும் தந்தையைப் போற்றிடுவோம்
கல்வியை நாளும் கற்றிடவே கனியவர்
குருவினைப் போற்றிடுவோம்!

உற்றவர் தன்னைப் போற்றிடுவோம்