It கலைமகன் கவிதைகள்: ஜூலை 2018

வியாழன், 19 ஜூலை, 2018

தேடிவந்த விருதுகள்.. கூடவே முகநூல் கருத்துக்கள்

நான் எதிர்பாராமலேயே அல்லாஹ் அருளால் இவ்வாண்டு, இரு விருதுகளுக்கு நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
1. “தமிழ்ச்சுடர்” விருது - தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு.
2. “ஊடக பேனா விருது 2K18" - அல்-மீஸான் பவுண்டேஷன், ஸ்ரீலங்கா.
தெரிவுசெய்த இரு அமைப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

திங்கள், 16 ஜூலை, 2018

கொக்கு விடு தூது - கலைமகன் பைரூஸ்

**************************************************************
செங்கண் வெண்குருகே செல்லுமிடம் சொல்லாயோ?
செய்திகள் போய்த்தான் சேர்ந்தாரிடம் சொல்லாயோ?
எங்கண் நிறைந்துள்ள என்னவரிடம் நீதான்சென்று
எழிற்றமிழின் ஏற்றத்தை எடுத்துரைக்க மாட்டாயோ?
அங்கையினின் அவரென்றும் அகத்தினின் அவரென்றும்
அன்னமே மேகத்தொடு அலைந்து சென்றுநீதான்
ஏங்கிநிற்கும் அடியாளை ஏரெடுக்காது பற்றிநீதான்
எடுத்தோத மாட்டாயோ? என்தாபம் நீக்கமாட்டாயோ?

**************************************************************

அப்புள் அழகாய் அணிநடை போடும்நீதான்
அடியாள் பாடும் நற்றமிழ்கவி எடுத்துச்சொல்லாயோ?
எப்போதும் என்னுள் ஏற்றமாயுள என்னவரிடம்
ஏக்கங்கள் பற்றிநீதான் நற்றமிழில் பாடமாட்டாயோ?
தூதுவிட உனைப்போல் தரமாம்புள் எனக்கிலையே
தமிழச்சி என்னவளின் நாணம்விட்டு சொன்னேனே
ஏதுமறியாதே செல்வந்தேடும் என்னவரிடம் சென்று
என்னிலை எடுத்துச்சொல் ஏன்சுணக்கம் விரைந்துசெல்.
-கலைமகன் பைரூஸ்
15.07.2018
**************************************************************
நீளும்... இன்ஷா அல்லாஹ்!