It கலைமகன் கவிதைகள்: செப்டம்பர் 2022

சனி, 17 செப்டம்பர், 2022

ஆதங்கம்! - கலைமகன் பைரூஸ்


தென்னகத்து - மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஆய்வு செய்யுங்கால், வெலிகம - மதுராப்புர (மதுராகொட) த.சா. அப்துல் லதீப் அவர்களை மறந்து ஆய்வினை எழுதவியலாது.

1940 களுக்கு முன்னர் மதம் சார் இலக்கிய முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் வௌிவந்த இலக்கியங்கள் பெரும்பாலும் ஆலிம்களாலும் (மார்க்க அறிஞர்கள்) மதத்தைக் கற்றுத் தேர்ந்தோராலுமே ஆக்கப்பட்டன. இந்தவகையில் 1936 களிலேயே 'தமிழிற்சூரியன்' என்று யாழ் மக்களால் பாராட்டிப் போற்றப்பட்ட தம்பி சாஹிப் அப்துல் லதீப் அவர்கள் 'இரட்சகத்தூதர் முஹம்மது நபி (ஸல்)'