It கலைமகன் கவிதைகள்: மார்ச் 2020

ஞாயிறு, 22 மார்ச், 2020

உதிர்ந்தது ஒரு பூ!

ஜனனியில் கால்பதித்தபோது
அங்கு நானும் நீயும்
உல்லாசமாக நின்றோம்...
எனக்கான மேசைப் பக்கமாய்
நீயும் வந்தமர்ந்து
இலக்கியம் பற்றி
ஏற இறங்கப் பேசினாய்...
கடைக்குட்டியாகவே
அன்றிருந்தேன் நான்...
பத்திரிகை பற்றி
ஏதும் அறியாத பால்ய பருவம்
தேடலில் ஈடுபடவே
சதாவும் மனம் விரும்பும்
காலமது...
மேமன் சமூகத்து
நீயோ அப்துல் கலாமாய்

சனி, 21 மார்ச், 2020

நீயன்றி யாரழிப்பர் CORONA (Covid - 19) வை!



தரணியின் முடிவு வந்துற்றதோ கொரோனா
தானாக வந்துற்றதோ தனிமையின் வாட
பேரணியாய் பயந்து மக்கள் எலோரும்
பரிதவிக்க காரணந்தான் ஏதிறைவா நீயறிவாய்!

உன்னருஞ் செயல்களில் நாட்டமின்றி நிலத்தார்
உயர்ந்தே நின்றிட பற்பல ஆற்றினர் பேராய்
சின்னவருஞ் சாகின்றார் எந்நேரமோ எனச்சொல்லி
சகமனைத்தும் படைத்தோனோ நீயன்றி யாரறிவார்?