It கலைமகன் கவிதைகள்: பிப்ரவரி 2011

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இதுதாண்டா கவிதை!

2011 02 16 தினக்குரல் வாரவெளியீட்டில் (அதாவது இன்று) வெளிவந்துள்ள கவிதை. உள்ளத்தை ஈர்க்கும், காலத்தைப் படம்பிடித்துக்காட்டும் நல்ல, நான் நயந்த கவிதை. படைப்பாளி கவிஞர் கிண்ணியா கே.எம்.எம். இக்பாலுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நல்ல கவிதையைப் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகையையும் நன்றியுணர்வுடன் நோக்குகின்றேன். கவிதைத் தரம்கண்டு நான் அக்கவிதையை மிளிரச்செய்துள்ளேன்.
-அன்புடன் கலைமகன் பைரூஸ்



வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இன்றும் தேடுகிறேன்!

இன்று 2011.02.04 இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம்

இன்றும் தேடுகிறேன்!

இன்றும் வந்ததோர் தினம்
இன்றும் தேடுகிறேன் இத்தினம்!
இதனைத் தேடி யோடுகீறேன்
இதயம் கனக்கிறதே!
இதயம் இமயமாய் அடிக்கிறதே!
இதயமுள்ளோர் இத்தரையில்
இணைந்திட்டால் கரங்கள் இணைத்தே
இன்பம் பொங்கும் இத்தரையில்!
இதயம் பூரிப்புரும் இத்தினத்தில்!
இன்றாவது மலருமா மெய்ச்சுதந்திரம்!

-கலைமகன் பைரூஸ்