It கலைமகன் கவிதைகள்: ஜூன் 2020

ஞாயிறு, 7 ஜூன், 2020

தலைப்புகள் இல்லா கவிதைகளுக்காக! - குறிஞ்சி மைந்தன் ஜௌபர்



தேயிலைச் சேய்களின் 
தலை கோதிய தாய் அறியாள்
விஷம் பறந்து வந்து உயிர் பருகுமென்று.
எந்தையரின் முன்னோரின் காடு
அட்ஷய பாத்திரமாய்
ஊரானை ஊட்டி செழிக்கச் செய்ததுதான்
ஒட்டிய வயிறு பிளந்து
ஓட்டு வாங்கிய வயிறுகள்
வயிறு வளர்த்ததுமிங்கேதான் காண்.
என்றாலும்
உயிர் பறிக்க குளவிகள் படையெடுக்குமென்று அறியாள் அன்னை.
மார்புகளுக்குள் கிடந்த குழவியை
பிள்ளை மடுவத்தில் கிடத்தி
அன்னையர் வளர்த்தது
இந்த கொழுந்து குழந்தைகளைதானே.