It கலைமகன் கவிதைகள்: ஜனவரி 2020

செவ்வாய், 21 ஜனவரி, 2020

துயரி லாழ்த்திச் சென்றது வெண்கலக்குரல்!

ஆழ்ந்த கலைகளை ஆழமாய்க் கற்றிட்டார்
அன்பொ டவற்றை யகங்களுள் விதைத்திட்டார்
ஆழ்ந்து இறையில் பக்திமிகக் கொண்டிட்டார்
ஆண்டவன் சந்நிதி யினிலின்று சேர்ந்திட்டார்

வாழ்ந்து வரலாறுதான் வைத்துச் சென்றிட்டார்
வானமன்ன மக்கள் மனதினிற் றேர்ந்திட்டார்
சூழ்ந்து மாணாக் கருட்டந்தை யாய்நின்றார்
சுவனத்து நல்மணங் கமழவே சென்றிட்டார்