It கலைமகன் கவிதைகள்: 2020

வெள்ளி, 13 நவம்பர், 2020

அலைகடல் அழகினை நுகரு....

அலைநுரைகள் கரைதொட்டு ஆலிங்கனம் செய்ய
      அழகாழியங்கு அதிகாரமாய் சீறிப்பாய்ந் தங்குவர கலையோடு வெண்மேகம் கண்ணடித்துப் பார்க்க
     காற்றுப்போடு கலந்தங்கு விசிறி யடிக்கும்...

மௌனராகம் பேசிக்கொள்ளும் விண்மேக மங்கு
     மெல்லப்பேசும் காதலர்களின் இதழ்களை பார்க்க

ஞாயிறு, 7 ஜூன், 2020

தலைப்புகள் இல்லா கவிதைகளுக்காக! - குறிஞ்சி மைந்தன் ஜௌபர்



தேயிலைச் சேய்களின் 
தலை கோதிய தாய் அறியாள்
விஷம் பறந்து வந்து உயிர் பருகுமென்று.
எந்தையரின் முன்னோரின் காடு
அட்ஷய பாத்திரமாய்
ஊரானை ஊட்டி செழிக்கச் செய்ததுதான்
ஒட்டிய வயிறு பிளந்து
ஓட்டு வாங்கிய வயிறுகள்
வயிறு வளர்த்ததுமிங்கேதான் காண்.
என்றாலும்
உயிர் பறிக்க குளவிகள் படையெடுக்குமென்று அறியாள் அன்னை.
மார்புகளுக்குள் கிடந்த குழவியை
பிள்ளை மடுவத்தில் கிடத்தி
அன்னையர் வளர்த்தது
இந்த கொழுந்து குழந்தைகளைதானே.

சனி, 23 மே, 2020

நிறங்களுடன் கூடிய நல்லதொரு குடும்பம்....



நீரில் சாகப்போனவளைத் தாங்கப் போனவன் ஒரு முஸ்லிம்
சாகப்போனவளோ தமிழச்சி
சாகப் போனவளைக் காத்தவன் சிங்களவன்
இறந்தவனின் தந்தையோ முஸ்லிம்
இறந்தவனின் தாய் பெளத்தம்
இறந்தவனின் தாரமவள் கிறித்தவம்
பிள்ளைகள் இருவரும் பெளத்தம்...

இறந்தவன் தாங்கிய பெயர் முஸ்லிம்

நாளை பெருநாள்....!



அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...
வீட்டுக்குள்ளிருந்து
ஈகைப் பெருநாள் காெண்டாட
அல்லாஹு அக்பர்...

யாஅல்லாஹ்!
தியாகத் திருநாளை
குடும்பங்களோடு
கொண்டாட அருள்புரிவாயாக!

வெள்ளி, 22 மே, 2020

கைவிலங்கு!



இடது கையறிய
கொடுத்தது வலது கை....
பலர் அறியப்பூட்டியது
விலங்கு!
என்றாலும்,
உள்ளமறிந்தவன் இறைவனே!

மனிதத்தை விதைத்துச் சென்றாயே நீ!

தன்னுயிரைத் துச்சமென மதித்தாய்...
தன்தாரம் பிள்ளைகளை மறந்தாய்...
மனிதாபிமானம் உன்னுள் ஓங்கியதால்
மதமேது இனமேது என்று எண்ணவில்லை....
மன்னுயிரைக் காத்திடவே...
சட்டென்று பாய்ந்தாய் நீருனுள்...
அவள் பிழைத்தாள்...
நீயோ மிதந்தே வந்தாய்...
மீளாத் துயரில் உன்குடும்பம்...

இறைவனிடம் நல்சுவனத்திற்காய்
இருபத்தேழாம் நோன்பில்
இருகரங்களையும் ஏந்தியவனாய்...
உன்னை டிஜிட்டலில் செதுக்கி
அழகு பார்க்கின்றேன்....

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தெல்தோட்டை நஸீரா ஸலீமின் கவிதைகள் இரண்டு

வாடும் நிலாவே!-----------------------------
இருமைத் துலங்கிச் சுழலும்
பிரபஞ்ச வெளியில்
துளாவிக் கதிர் பரப்பிய
பரிதியின் பிரதியாய்
பூரணை நிலவு !

பகலவன் பிரிவால் படர்ந்த
இராக் காதலியின்
கவலை ரேகைகளை
ஆற்றுப்படுத்தவே
இரவலை முறுவலாக்கிப்
பிரகாசிக்கும்
செவிலி அவள் !


மதியின் விதி உணரா
விண்மீன் தோழிகள்
வான் தலைவியை சூழ்ந்தே
தன் எழில் சிந்தி
கண் சிமிட்டி
நிலவைப் பழிக்கும் !

எத்தனை குத்தல் கதைகளை
கேட்டேனடி வான்மகளேயென
வாட்டத்தில் வதங்கியே
உடலிளைத்து
மனம் உடைந்து
குளிர் நிலவும்
ஒரு நாள் போர்த்தியுறங்கும் !!
நியாயம் கேட்க வகையின்றி
ஒற்றையாய் நேசித்தது சொல்லா
இராக்கடலும்
உள்ளுக்குள் குமுறும்
அமாவாசையில்
அந்த மதியைப்போலவே...

- நஷீரா பின்த் ஹஸன் (2020.04.07)

---------------- 2 ----------------

நானும் உங்களில் ஒருவன்-----------------------------------------------
தலைநகரின் தலைசிறப்பிற்காய்
தலை எழுத்தை விலைபேசி
அலைகழிக்கப்பட்ட
மலையக உழைப்பாளிகள் நாம்!

காய்ந்த ரொட்டித்துண்டிலும்
கசட்டைக் கோப்பையிலும்
காலம் கழிவதை
காலங்காலமாய் சகிப்பதா
சுகிப்பதாவென
மூட்டை மூட்டையாய் கனவு சுமந்து
கொழும்பு வந்தோமன்றி
கொழுப்பெடுத்து வரவில்லை.

ஞாயிறு, 22 மார்ச், 2020

உதிர்ந்தது ஒரு பூ!

ஜனனியில் கால்பதித்தபோது
அங்கு நானும் நீயும்
உல்லாசமாக நின்றோம்...
எனக்கான மேசைப் பக்கமாய்
நீயும் வந்தமர்ந்து
இலக்கியம் பற்றி
ஏற இறங்கப் பேசினாய்...
கடைக்குட்டியாகவே
அன்றிருந்தேன் நான்...
பத்திரிகை பற்றி
ஏதும் அறியாத பால்ய பருவம்
தேடலில் ஈடுபடவே
சதாவும் மனம் விரும்பும்
காலமது...
மேமன் சமூகத்து
நீயோ அப்துல் கலாமாய்

சனி, 21 மார்ச், 2020

நீயன்றி யாரழிப்பர் CORONA (Covid - 19) வை!



தரணியின் முடிவு வந்துற்றதோ கொரோனா
தானாக வந்துற்றதோ தனிமையின் வாட
பேரணியாய் பயந்து மக்கள் எலோரும்
பரிதவிக்க காரணந்தான் ஏதிறைவா நீயறிவாய்!

உன்னருஞ் செயல்களில் நாட்டமின்றி நிலத்தார்
உயர்ந்தே நின்றிட பற்பல ஆற்றினர் பேராய்
சின்னவருஞ் சாகின்றார் எந்நேரமோ எனச்சொல்லி
சகமனைத்தும் படைத்தோனோ நீயன்றி யாரறிவார்?

செவ்வாய், 21 ஜனவரி, 2020

துயரி லாழ்த்திச் சென்றது வெண்கலக்குரல்!

ஆழ்ந்த கலைகளை ஆழமாய்க் கற்றிட்டார்
அன்பொ டவற்றை யகங்களுள் விதைத்திட்டார்
ஆழ்ந்து இறையில் பக்திமிகக் கொண்டிட்டார்
ஆண்டவன் சந்நிதி யினிலின்று சேர்ந்திட்டார்

வாழ்ந்து வரலாறுதான் வைத்துச் சென்றிட்டார்
வானமன்ன மக்கள் மனதினிற் றேர்ந்திட்டார்
சூழ்ந்து மாணாக் கருட்டந்தை யாய்நின்றார்
சுவனத்து நல்மணங் கமழவே சென்றிட்டார்