It கலைமகன் கவிதைகள்: ஜனவரி 2016

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மாகாவியம் வரட்டும்! -கலைமகன் பைரூஸ்

வைரமான வரிகள் தரும் வைரமுத்து
உங்களுக்கே சொந்தமான வரிகள்…
உங்களுக்கே சொந்தமான குரல்…
உங்களுக்கே சொந்தமான வீராப்பு…
உங்களுக்கே சொந்தமான “ஈரம்”
ஈழமண்ணை மாகாவியமாக்கத் துடிக்கும்
இதயத் துடிப்பு…
இதயத்து ஒட்டுகின்றதுதான்…

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கவிதா சகி தருகிறேன் பதில்!

என்னால் ஏன் எழவியலாது
என
எடுத்தாண்ட எழுத்துக்களில்
எல்லாம் நீங்கள்
எழுமாற்றாக எழுதினீர்கள்
எழுந்துநிற்க ஏணியில் ஏறியோர்
எட்டியும் பார்க்காமைக்கு
என்னதான் நான்செய்யலாம்?
எனக்குள் பீனிக்ஸ் பறவை…
எழுந்துவருவேன் சாம்பரிலிருந்து
எட்டப்பர்கள் எத்தனை நாட்களுக்கு….

எனக்குள் உள்ள ஆளுமைகள்