It கலைமகன் கவிதைகள்: கைகோத்திடுக!

வெள்ளி, 23 அக்டோபர், 2009

கைகோத்திடுக!


கைகோத்திடுக!

இனிய கூண்டுக்குள் நாமி ருந்தோம்
அநீதியால் மடிந் தழிந்தோம்
இனிய கதைகள் சொல்லி மகிழ்ந்தோம்
சனியன் வந்திட மிடியானோம்!
சங்கமித்த தமிழனின்று தடைக ளொடு
ஏங்குகின்றான் ஏது செய்ய?

ஈழம் பெற்றிட பட்டகஷ்டம் போதாதா?
நாளங்கள் ரத்தம் இழந்தவே!
நங்கூரமின்றி நடுக்கடலில் நிற்கிறோமே
நானிலமே வாய் புதைத்த்தே!
பாழாய் போனதே வாழ் வெங்கனும்
பண்பட்ட தமிழனின்று அகதியே!

இனியும் தமிழன் இம்சை நீங்கிட
மனிதம் பூத்திடும் நாளினிது
மங்கள மெங்கனும் நீண்டு தளைத்திட
சிங்களமும் தமிழும் கைகோத்திடுக
சிதறிய உளத்தின் நோவினை மறந்திட
குதறிய வெறிகள் அழிந்திடுக!

வசந்தம் பூக்குதுதா மெங்கனும் செவிவழி
நிசமாயின் நமக்கெலா மானந்தம்
வாழ்வினி லிழந்தவை மீளப் பெற்றேநாம்
தாழ்வின்றி தமிழினை ஏத்துவம்
தரணியி லுயர்ந்தது தமிழெனவே நாம்
ஈரமிலா தார்க்கு உணர்த்துவம்!

பட்ட துன்பங்கள் போதுமையா நாம்
சுட்டவடு ஆறவிலை இன்னும்
பதுங்கிய நாம் மீள எழுந்திடுவோம்
ஒதுங்குவதா யொதுங்கி யெழுவம்
ஓதுவம் நாமெலா ஓரின மென்றின்று
ஒப்புயர்வு ஒண்ணிலாதே வரும்!

கலைமகன் பைரூஸ்
இலங்கை